Thursday 1 April 2010

சென்னைப்பல் கலைக் கழகத்தில் விட்டில்கள் நாடகம்

சென்னைப் பல்கலைக் கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை பதிதாக ஒரு நாடகக் குழு ஒன்றை கடந்த 25.11.09 அன்று ஆரம்பித்திருந்தது.இதில் தே.தேவானந் எழுதித்தயாரித்த விட்டில்கள் நடகம் மேடையேற்றப்பட்டது.நாடகக் குழுவுக்கு ஒருமாத காலப் பயிற்சி அளிக்கப்பட்டு நாடகம் தயாரிக்கப்பட்டது.இன்றைய தமிழ் ஊடகத் துறையின் மனித நேயமற்ற பண்பை இந்த நாடகம் பேசிற்று எனலாம்.நாடகத்திற்கான இசையமைப்பபை த.றோபேட் மேற்கொண்டிருந்தார்.இந்த நிகழ்வில் முற்றம் நாடகக் குழு உத்தியோகபூர்வமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆரம்பித்து வைத்தார்.இந்த நிகழ்வில் பேராசிரியர் வீ.அரசு மற்றும் இதழியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ.ரவீந்திரன் அவர்களும் பங்கு கொண்டார்கள்.

No comments:

Post a Comment