Showing posts with label Tamil Drama. Show all posts
Showing posts with label Tamil Drama. Show all posts

Saturday, 18 April 2026

“‘கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கவனத்திற்காக..!’: கவனயீர்ப்புக் கட்டுரைக்கான விமர்சனப் பார்வை”


 “‘கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கவனத்திற்காக..!’: கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர்களின் கவனயீர்ப்புக் கட்டுரைக்கான விமர்சனப் பார்வை”

---------------------------------------------------------------------------------------------

இந்த விமர்சனத்தில் முன்வைக்கப்படும் சில கவலைகள் ஏற்புடையவையே. இவ்வாறான திறந்த உரையாடல்கள் மூலம் அவை எதிர்காலத்தில் சீர்செய்யப்பட வேண்டும். அந்த உரையாடல் வெளியைத் திறந்ததற்காக கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர்களுக்கு நன்றி. குறிப்பாக ஆய்வரங்குகளின் தரம், தேர்வு செய்யப்பட்ட தலைப்புகள் மற்றும் பங்கேற்பாளர்களின் பொருத்தம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானவை.

ஆனால், இந்த விமர்சனம் சுயபரிசோதனைக்கும் சுயவிமர்சனத்திற்கும் உரியதாகவும் அமைகிறது. இங்கு விமர்சனத்தை முன்வைப்பவர்கள் தம்மைத்தாமே ஒரு முக்கியமான முரண்பாட்டில் நிறுத்துகின்றனர். ஏனெனில் இங்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் நாடக மற்றும் அரங்கியல் துறைகளுக்குள் சாதாரணமாக நிலவி வருகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை.

Friday, 17 January 2025

உலகத் தமிழர் போற்றும் நாடக பேராளுமை ‘குழந்தை’

 Kalaikathir 28.01.2025


Dr. தேவநாயகம் தேவானந்த்

யாழப்பாணததின் மையப்பகுதியலில் இருக்கின்ற சிறிய முக்கியமான பகுதி திருநெல்வேலி .இந்தப் பகுதி ஈழத்து நவீன நாடக வரலாற்றில் முக்கியமான பகுதியாக இனம்காணமுடியும். 

திருநெல்வேலியில் அமைந்துள்ள இவரது வீட்டை ஒரு நாடகத்திண்ணையென்று குறிப்பிட விரும்புகின்றேன அதில்; நாடக உரையாடல்கள் தினம் நடந்து வந்தன. குழந்தை ம.சண்மகலிங்கம் தனது 93 வது வயதில் கலமாகியிருக்கிறார.அவர் உலகத் தமிழ் நாடக உலகில் வரலாறாகி நிற்பவர்.தனது நாடக எழுத்துருக்களால் உலகெங்கும் பேசப்படுபவர்.இவரது நாடக எழுத்துருக்கள் இன்றும் இலங்கையின் பல பாகங்களிலும் உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் மேடையேற்றப்படுகின்றன.இந்த உயர்ந்த கலைஞரை குழந்தை மாஸ்ரர் என்று அன்பாய் அழைப்பது வழமை.இந்தக் குழந்தை தமிழ் நாடகத்திண்ணையின் பேறு என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.

Sunday, 6 October 2024

Human Rights and Theater Communication in Post-war Sri Lanka


Thevanayagam Thevananth

HUMAN RIGHTS EDUCATION IN ASIA-PACIFIC · VOLUME 10, 2020


The Sri Lankan Minority Tamils are living in an environment where their right to freedom of expression is denied. This situation was at its worst during the 2005–2015 war period. Although there was a little improvement in the situation after regime change due to the presidential election held on the 8 January 2015, the structures, practices, and attitudes left behind by the former government continued. In 2019, the political party of the former government came back to power only with majority Sinhala voters. The opportunities for free exchange of ideas remained limited. The state stringency that prevailed for more than a decade made the traditional exchange and expression of ideas normally found among the people extinct. In particular, all opportunities for gathering at the village esplanade, temples, playgrounds, and cultural events were hindered by state stringency. Places where people congregate were subjected to surveillance. Voices critical of the state were monitored by state agents. Hence, congregating and exchanging ideas have become filled with fear. People avoid gathering together because of this situation, where everyone was suspicious of the other. In addition, people who criticized the government were threatened with violence to create an overt fear psychosis. Some people suffered this violence, such as when waste oil was thrown on houses. Fear of death began to dwell in each person as unidentified persons “move around.” Even today, freedom of expression in Sri Lanka requires a more conducive atmosphere. The fear of monitoring by state intelligence officers or unidentified persons persists. As a result, every individual learned to live with some sort of self-censorship. This situation caused a sort of stagnation, including the environment for artistic creation.

For Full Text click this link 

Human Rights and Theater Communication in Post-war Sri Lanka

Success Story : Theatre helps marginalized communities

The effort promotes social expression and discourse on human rights through popular theater

The Active Theater Movement (ATM) uses popular theater to provide a voice to the most marginalized communities in the post-conflict regions of northern Sri Lanka. Its performances facilitate dialogue and promote awareness of critical issues facing these communities such as human rights, reconciliation, and social expression. 

The productions also prompt participants and audiences to confront traumas stemming from decades of life in conflict zones. With the support of USAID’s SPICE project, ATM provides training and performance opportunities for youth to use theater to promote human rights by using their personal narratives and those of their local communities. In early 2015, ATM trained 21 young women and men from villages in Jaffna to act, write scripts, direct and manage the technical aspects of theater production. The group also received training on human rights principles to better understand and contextualize people’s experiences during the conflict. During the workshops, the group selected five themes that are relevant to their lives. They then drafted scripts that they could perform. In August 2015, ATM organized a 12-day drama festival to showcase plays developed by the youth group during the SPICE initiative. The festival staged 17 skits and plays, including performances that addressed serious social issues such as violence against women and the traumatic experiences of war. 

 ATM’s productions re-introduced theater to Jaffna and provided a safe space for public discourse on subjects that would otherwise be too sensitive or difficult to articulate in public. The performance also provided a platform for interactive debate; at the end of each skit or play, the audience was encouraged to reflect and share ideas on the themes raised through the performances. The audience was then encouraged to collectively develop responses to these issues and find ways to improve understanding and respect for human rights. Many youth bear the psychological scars of Sri Lanka’s prolonged conflict. SPICE’s support has given them skills and an opportunity to articulate their emotions and experiences through dramatic expression.

 It has fostered their creativity and built their confidence to share their experiences. This has helped them come to terms with their experiences and promoted integration within their communities and families. Youth theater group member Murugiah Kumarasivam recalls, “When I was 14 years old, my oldest brother was killed by an unknown gang. For years, I could not speak about this and it was a very difficult time for me. … I could not concentrate on anything. The trauma I experienced has remained with me. After I joined the theater group and attended the trainings, it was only then that I felt comfortable to express my feelings to others.

 

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 02

தேவநாயகம் தேவானந்த் 

இலங்கையில் ராஜபக்ச ஆட்சியல் ஏற்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிச் சூலில் ரணில் விக்ரமசிங்க பதவியைப் பொறுப்பெற்ற போது  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்னார். அந்த உரையில், அவர் {ஹணு வ(ட்)டயே' நாடகத்தின் குழந்தையைக் காப்பாற்றும் கதாபாத்திரமான க்ரு~h பாத்திரத்தைப் போன்று தான் இருப்பதாக குறிப்பிட்டார். 

‘ஹணு வ(ட்)டயே’ நாடகம் இரண்டு பேரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவையிரண்டும்; இறுதியில் ஒன்றாக வரும் இரண்டு கதைகள் எனலாம். முதலாவது கதை க்ருசா வின் கதை, இரண்டாவது கதை ஆட்சியதிகாரத்தின்; கதை. 

க்ருனிசியாவில் ஒரு நகரத்தை ஆளும் ஒரு பணக்கார ஆளுநருக்கு மைக்கேல் என்ற குழந்தை பிறந்தது, மேலும் அவரது மனைவி நாடெல்லா, பகட்டாரவாரமாக வாழ்கிறார்கள்.  ஈஸ்டர் ஞாயிறு அன்று கிளர்ச்சி நடக்கிறது.; அதில்; கவர்னரைக் கொன்றுவிடுகிறார்கள், ஆளுநரின் மனைவி தனது ஆடம்பரப்பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடுகிறாள் அப்போது அவசரத்தில் தன் குழந்தையை விட்டுச் செல்கிறாள். இதற்கிடையில், க்ருசா என்ற வேலைக்காரப் பெண் அந்தக்குழந்தையை தனியே விட்டுச்செல்ல விரும்பாது தூக்கி செல்ல விளைகிறாள். மற்றவர்கள் தடுக்கிறார்கள் இருந்தாலும் க்ருசா குழந்தையைக்காப்பாற்றிசெல்கிறாள். சதிப்புரட்சியின் குழப்பங்களுக்கு மத்தியில் க்ருசா சைமன் என்ற சிப்பாயும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவிக்கிறார்கள். சைமன் க்ரு~hவுக்கு அவர்களின் நிச்சயதார்த்தத்தின் அடையாளமாக ஒரு சங்கிலியில் ஒரு வெள்ளி சிலுவையைக் கொடுக்கிறான். சண்டைமுடிந்த பின்னர் அவர்கள் இணைவதாகக் கூறி பரிகிறார்கள். 


குழந்தைiயைப் க்ருசா அரண்மனையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முனைகிறாள்.  க்ருசா மைக்கேலுடன் கடினமான பயணத்தை ஆரம்பிக்கிறாள். அவர்கள் இருவரும் மலைகளுக்கு நடுவே குளிரில் பயணிக்கிறார்கள். க்ருசாவிடம் பணம் குறைவாகவே உள்ளது, பால் மற்றும் தங்குமிடத்திற்காக அவள் குடிசைகளில் பிச்சை எடுக்கிறாள். இவ்வாறாக மிகக்கடினமான பயணத்தில் குழந்தையைக்காப்பாற்றிச் செல்கிறாள். ஒரு கட்ட்தில்மலைக் கிராமங்களுக்கு செல்லும் ஒரு பனிப்பாறைக்கு க்ரு~h வரும்போது, ஆழமான பள்ளத்தாக்கு வழியாக தப்பிக்க வேண்டும் அதற்கு ஒரு பழைய பாலம் மோசமான நிலையில் இருந்த பாதையைக் கடக்க முயல்கிறார். பாலத்தில் கூடியிருந்த வணிகர்கள் க்ருசாவை அந்த பாதை ஆபத்தானது என்று எச்சரித்தாலும், அவள் பாலத்தில் ஏறி கடந்து ஓடுகிறாள்;. குழந்தையைத் துரத்தும் ஆபத்திலிருந்து தப்பிக்க க்ருசாவுக்கிருந்த ஒரே வழி அதுவாகத் தான் இருந்தது. க்ருசா மைக்கேலை மேலும் மலைகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.பின் தனது சகோதரன் வீட்டை அடைகிறாள். 

Wednesday, 11 October 2023

சிறுவர்களுக்கான நாடகப் பயிற்சி வகுப்புக்கள்

 

                                                                                          Drama Classes for Children
.....................................................                                                                                                        புதிய பயிற்சிப் பிரிவுகள் ஆரம்பமாகின்றன  இணைந்து கொள்ளலாம்.                                               .                                                                                                     ...................................
சிறுவர்களின் உடல், உள ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைப் பாடத்திட்டத்தைக்  கொண்ட பயிற்சி..                                                         பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் சிறுவர் நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.  அதனோடு வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்கு தோற்றமுடியும். 
பயிற்சி நடைபெறும் நாட்கள் நேரம் : வெள்ளி, சனி, ஞாயிறு
                                                                        மாலை 5.00 மணி - 08 மணி வரை 
வயதெல்லை : 10 - 15
பயிற்சி நடைபெறும் இடம் : 'முற்றம்' ,203/ 5 கச்சேரி நல்லூர் வீதி ( சென்.பெனடிக் பாடசாலை முன்பாக) நல்லூர் யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கான வட்சப் இல, ஈ.மெயில் : 0773112692, jaffnatheatre@gmail.com 

Thursday, 14 April 2022

நாடகர் நினைவோடை -01


 இ.தே.தே


நாடகர் ஒருவரது முப்பது வருடகால நாடகத்துறை அனுபவங்களை பதிவிடுவதாக இந்தத் தொடர் அமைகிறது எனலாம். ஈழத்தமிழரின் வரலாற்றின் முக்கியமான மூன்று தசாப்த காலத்தின் நாடக முயற்சிகளின் பதியப்படாத ஒரு பக்கத்தை பதிவிடுவதாக ‘நாடகர் நினைவோடை’; தொடர் அமையும். தொடருக்கான பெயரை முன்மொழிந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் மு.இராமசாமி அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன். 

தனிநபர் நினைவுகளை இரைமீட்பதாக இந்த முயற்சியமைந்தாலும்  நீண்ட பயணத்தின் பட்டறிவாக, நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உள்ளுணர்வுசார்ந்த சுயபார்வையாக மேலும்பலவாக நீளும்.

1990 – 2020 வரையான ஒரு மூன்று தசாப்தகாலம் இலங்கை வடபுலத்தில் எத்தனையோ சம்பவங்கள் பதிவாகி வரலாறாகியிருக்கின்றன.  இதே காலகட்டத்தில் பயணித்த அரங்கப்பயணமும் முக்கியமானது. . இதுவொரு காலப்பதிவு, அதுவே வரலாறாகி நிற்கிறது போலும்.  

நினைவிலிருந்து ஒரு தொடரை எழுத முற்சிக்கின்ற இந்த முற்சியை ‘நினைவு அரங்கு’ என்பதாகக் கொள்ள முடியும். இங்கு "நினைவு." அதன் பொதுவான பயன்பாட்டில், நினைவகத்தில் சேமிக்கப்பட்ட கடந்தகால அனுபவங்களைக் குறிக்கிறது. அந்த அனுபவங்களை நினைவுபடுத்துவது ஒரு திறன் சார்ந்த செயற்பாடு, சிலர் அனுபவங்களை மீள நினைவுபடுத்துவதில் கைதேர்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்வாறான திறன் உள்ளவர்களை நல்ல ஞாபக சக்தியுள்ளவர்கள்; என்று நாம் கூறுவது வழமை. நினைவாற்றல் என்பது அற்புதமான கலை எனலாம். நினைவு ஒருவரது தொடர்ச்சியான உணர்வுக்கு மற்றும் வாழ்விற்கு துணைநிற்கிறது. நினைவகத்தில் சேமிக்கப்படும் சம்பவங்கள் ஒரு மன, உடல் மற்றும் சமூக நிகழ்வு ஆகும். நினைவாற்றல்; ஒரு செயல்திறன் மிக்க செயல். ஒருவர் எதையாவது நினைவில் கொள்ளும்போது, பெரும்பாலும் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ ஒருவித நடத்தைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். எதிர்காலத்தில் சில பணிகளைச் செய்வதற்கான நினைவூட்டல்கள பயன்தரவல்லன. . இதனால் தான் ஞாபக சக்தி அவசியமென்கிறோம். ஞாபகம் வைத்திருப்பது என்பது ஒரு கடினமான வேலை. ஞாபகத்திலிருந்து தான் நினைவுகூரல் ஆரம்பமாகிறது. 

Saturday, 9 April 2022

பேரிடர்காலத்தில் சிறுவர் மனச்சுமைத் தணிப்பு அரங்கு


யாழ் தினக்குரல் பத்திரிகையில் ஞாயிறு தோறும் வெளிவந்த இந்தத் தொடர்  இங்கு மீள்பிரசுரமாகிறது. 

தொடர் -01 

தேவநாயகம் தேவானந்த்

COVID 19 வைரஸ் பரவல் உலகெங்கலும் பல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றது. சமூகமுடக்கம், பொருளாதார மந்த நிலை, புதிய வாய்ப்புக்களுக்கான வழிகள் திறக்கப்படாமை, கல்விக்கூடங்கள் மூடப்பட்டமை என்று பல நெருக்கடிகால நிலைமைகள் சிறுவர்கள் மீது பலவிதமான மன அழுத்தங்களைக் ஏற்படுத்தியிருக்கின்றன. பாடசாலைச்சூழல் இல்லாது போனதால் பாடசாலைப்பருவத்தின் மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் இல்லாது போகின்றன. சகபாடியுடன் உறவாடும் மற்றும்; நட்புக்கொள்ளும் வாய்ப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. நண்பர் வட்டத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல் போன்ற பல பாடசாலைப்பராய வனப்புக்கள் இல்லாமல் போயிருக்கின்றன. 

சும்மாயிருக்கும் சிறுவர்களுக்கு பாடங்களைகற்பித்தால் போதும் என்று சிந்திக்கப்படுகிறது. பாடங்களைக்கற்பதற்கு இணையவழிக்கல்வி ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. தொலைதூரத்திலிருந்தபடி மாணவரும் ஆசிரியரும் மென்செயலி வழி இணைந்து கற்றால் போதும் என்ற சிந்தனை உருவாகிறது, இருந்தாலும் அந்த புதிய கல்விக்கான களமும் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை காணலாம்.

Friday, 8 April 2022

மணிமுடியும் மக்களும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் மேடையேறிய ஈழத்தவரின் நாடகம் (2017)

சென்னைப்பல்கலைக்கழக இதழியல் துறைத முதுமாணி மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு 10 நாட்கள் தொடர்ச்சியாக நாடகக் களப்பயற்சி நடத்தி இறுதியாக மணிமுடியும் மக்களும் என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. களப்பயிற்சி வளவாளராகவும் நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்நத தேவநாயகம் தேவானந்த். இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அரங்கத் தொடர்பாடல்துறை வளவாளராக கடந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் சென்னைப்பல்கலைக்ழகத்தில் கல்வி கற்ற காலத்தில் முற்றம் கலைக்குழுவை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 6 April 2022

முயலார் முயல்கிறார் சிறுவர் நாடகம்( 2016)


குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதிய முயலார் முயல்கிறார் நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் நெறிப்படுத்தியிருந்தார். 





 

வண்டியும் தொந்தியும் நகைச்சுவை நாடகம் (2012)



அதிகாரிகள் தங்கள் பதவிக்கதிரைகளுக்காக படுகின்ற பாட்டை இந்த நாடகம் நகைச்சுவைப்பாங்கில் தருகின்றது. இதனை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தேவநாயகம் தேவானந்த். 2012 மேடையேற்றப்பட்டது. 


 

இது கூத்தல்ல நிஜம் நாடகம் (2005)



வன்னியில் யுத்தத்தின் பின்னர் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவது தொடர்பாக நாடகம் பேசுகிறது. செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்த இந்த நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் எழுதியிருந்தார். நாடகத்தை பு.ரஜனி நெறிப்படுத்தியிருந்தார் 




 

Tuesday, 5 April 2022

Arakkatu : Interview



 

சிரிப்பு மூடை சிறுவர் நாடகம் (2015)



இலங்கையில் ஐந்தாமாண்டு நடைபெறும் புலமைப்பரிசில் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை கொடுத்து வருவதும். சிரிப்பு தொலைந்து அதனை தேடமுற்படுவதுமான கதையாக நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களும் பெரியவர்களும் இணைந்து இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். மூன்று வயதில் மன்னனாக அஸ்வின் ராம் நடித்திருந்தார். ஈழத்தின் நாடக வரலாற்றில் சிரிப்பு மூடை முக்கியமான நாடகமாக பதியலாம். இது நூலாகவும் வெளிவந்துள்ளது. நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியர் தேவநாயகம் தேவானந்த்.செயல் திறன் அரங்க இயக்கம் இதனைத் தயாரித்து மேடையேற்றியிருந்தது.  


 

Tuesday, 15 March 2022

நீண்ட இடைவெளியின் பின் உள்ளம் சஞ்சிகை





கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையத்தினரின் வெளியீடாக வெளிவருகின்ற உள்ளம் சஞ்சிகையில் குழந்தைகளின் ஆளுமை விருத்தியில் அரங்கு என்ற தலைப்பில் தேவநாயகம் தேவானந்தின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. 

Wednesday, 1 December 2021

‘Mansumantha Manier’ Drama Emphasizing the Concepts of ‘The Nation is Made by People’

‘Mansumantha Manier’ Drama Emphasizing the Concepts of ‘The Nation is Made by People’

Thevanayagam Thevananth

Head, Makkall Ithazhyal Iyakkam, Yalpanam, Sri Lankahttp://orcid.org/0000-0002-1831-7730

Abstract 

 Is in play. The play is made up of everyday life activities. The place where the action takes place is defined as the stage. Drama is the best of human language that uses verbal and physical devices to reflect life.The stage is seen as a process and is used as a tool to achieve human development goals. The stage is a way to understand the nature of aggression. This is a collaborative effort of many. It invites people there to engage in creative processes. Creativity is defined as a process by which innovation can be achieved.The platform of the oppressed emerges from the belief that the role of society in changing oppression and achieving liberation from oppression can be critically explained.But drama for social change and liberation from oppression; has been used for years. This study explores the potential dynamics of drama to achieve an ideal goal based on theatrical literature.Theatrical font intended for content analysis methodology. The forum has helped people in Jaffna, Sri Lanka to develop their problem-solving skills to eliminate oppression, empower and strategize. It used theatrical methods to break down internal and external oppression into everyday life and future challenges.This study looks at how the Mansumanthamaniyar play, produced by Jaffna University students in the mid-1980s, which saw the intensification of the Tamil liberation struggle in Sri Lanka, motivated the youth and the people towards liberation and emphasized the principle of ‘the nation became the people’.

Key  Words:  Srilankan  ethnic  conflict,  Srilankan  Tamil  Drama,  Jaffna  University Drama,  Tamil  theatre,  Jaffna  theatre,  Mansumathameniyar  Drama,  Kulanthai M.Shanmugalingam, Liberation Theater, Sri Lanka Ethnic Issue, Mansumanthamaniyar, Tamil Theater.

Saturday, 27 January 2018

சிறுவர் நாடகக் கொண்டாட்டம் ஆரம்பம்.


 சிறுவர் நாடகக்  கொண்டாட்டம் 26.01.2018 அன்று  ஆரம்பமானது. சிறுவர் குதூகலிப்பதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ள இன்றய எமது பரபரப்பான வாழ்க்கைச் சூழழலில் வாய்விட்டுச் சிரித்து மகிழ சிறுவர்களுக்கான களங்களை நிறையவே உருவாக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முயற்சிகள் பெருமெடுப்பில் நடைபபெற வேண்டும். இந்த முயற்சியை சிறிதளவில் செயல் திறன் அரங்க இயக்கம் கடந்த 15 வருடங்களாக செய்து வருகிறது.

Wednesday, 3 January 2018

Post war Theatre In Northern Srilanka

வடஇலங்கையில் யுத்தத்தின் பின்னரான அரங்கு


---------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தத்தின் பின்னரான அரங்கு என்பதை முதலில் வரையறை செய்தல் வேண்டும். இதன் போது யுத்த கால அரங்கு மற்றும் யுத்தத்தின் முன்னரான அரங்கு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னர் இலங்கையரசு விடுதலைப்புலிகளை முற்றுமுழதாக இராணுவரீதியாக தோற்கடித்ததாக மார்தட்டிக் கொண்டதான 2009 ஆண்டுக்குப்பின்னரான சூழலை இங்கு நாம் யுத்தததின் பின்னரான சூழல் என்று வரையறுக்க முற்படுகின்றோம். கடந்த ஏட்டுவருடகாலங்கள் இதற்குள் அடங்கும் எனலாம்.


Tuesday, 2 January 2018

‘ முற்றம் ’ : முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம்



சென்னைப்பல்கலைக்கழகம் கல்விப்புலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி தனக்கான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. முறைசார்ந்த கல்வியின் சிகரமாக எழுந்து நிற்கின்றது. தமிழ் பழமையின் பாரம்பரியத்தின் சிகரமாக, சென்னை மாநகரின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது.