Wednesday 11 October 2023

சிறுவர்களுக்கான நாடகப் பயிற்சி வகுப்புக்கள்

 

                                                                                          Drama Classes for Children
.....................................................                                                                                                        புதிய பயிற்சிப் பிரிவுகள் ஆரம்பமாகின்றன  இணைந்து கொள்ளலாம்.                                               .                                                                                                     ...................................
சிறுவர்களின் உடல், உள ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைப் பாடத்திட்டத்தைக்  கொண்ட பயிற்சி..                                                         பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் சிறுவர் நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.  அதனோடு வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்கு தோற்றமுடியும். 
பயிற்சி நடைபெறும் நாட்கள் நேரம் : வெள்ளி, சனி, ஞாயிறு
                                                                        மாலை 5.00 மணி - 08 மணி வரை 
வயதெல்லை : 10 - 15
பயிற்சி நடைபெறும் இடம் : 'முற்றம்' ,203/ 5 கச்சேரி நல்லூர் வீதி ( சென்.பெனடிக் பாடசாலை முன்பாக) நல்லூர் யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கான வட்சப் இல, ஈ.மெயில் : 0773112692, jaffnatheatre@gmail.com 

Thursday 30 June 2022

அடிப்படை மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறி மலையக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு

அடிப்படை மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறி மலையக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு கடந்த 12.06.2022 அன்று ஹட்டன் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் நடைபெற்றது. யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் 2021 ஆண்டு இணையவழியாக நடத்திய அடிப்படை மனிதவுரிமைகள் தொடர்பான கற்றைநெறியை பூர்த்திசெய்த மலையக மாணவர்கள் நாற்பது பேருக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதில் யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார் நிகழ்வு அரங்கு நிறைந்த பார்வையாளருன் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் மானுடம் சுடரும் என்ற மனிதவுரிமை மேம்பாட்டு அமைப் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மனிதவுரிமை பயிற்சிபெற்ற மாணவர்களை உள்ளடக்கியதாக வடக்கு கிழக்கு மலையம் ஆகிய மூன்று பகுதிகளிளைச்சார்ந்தவர்கள் இணைந்து செயற்படும் அமைப்பாக விளங்கும்.இதனை யாழ்மாவட்ட தேவநாயகம் தேவானந்த் ஒருங்கிணைப்பார். மலையத்துக்கான ஒருங்கிணைப்பாளராக திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி அவர்கள் செயற்படுவார். எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் இதற்கான இயங்குநிலைக்குழு உருவாக்கப்படும்.

Wednesday 29 June 2022

கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னான் சந்திப்பு


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கனா உயர்ஸ்தானிகர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து நாட்டின் நிலைமைகள் பற்றி உரையாடினார். யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இந்தச்சந்திப்பு 22.06.22 அன்று மாலை 2.30மணிக்கு நடைபெற்றது.இதில் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் சார்பாக அதன் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் கலந்து. எதிர்காலத்தில் கனடா நாட்டின் நிதியுதவிகள் வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கானதாக இருக்க வேண்டும. அதற்கேற்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 


 

Tuesday 14 June 2022

போரில் சிக்கிய பெண்ணின் கதைபேசும் “பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்”


போர் எமக்குப் பாதுகாப்பாக இருந்த பலவற்றை அழித்தொழித்துச் சென்றுவிட்டது. எமது சூழல், உறவுகள், கட்டமைப்புக்கள் அனைத்தும் மீள் உருவாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. எமது பலமென்று நாம் சொல்லிவந்த “குடும்ப நிறுவனம்” சிதைவடைந்து உருமாறிக் கிடக்கிறது. வீட்டு மண்டபங்களில் வெள்ளை – கறுப்பு நிறங்களில் தொங்கிக் கிடந்த குடும்பப் படத்தை பார்க்கின்றபோதெல்லாம் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய குடும்பப் படத்தை இனி எவ்வாறு எடுப்பேன் என்று ஏங்கியபடி வீட்டுக்குள் கிடக்கும் பெரியவர்களின் துடிப்பு இருபது வருடப் போர் தந்த சீரழிவைச் சுட்டி நிற்கின்றன.

Sunday 12 June 2022

'பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்' நாடகம்

 

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. 

 

இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற பெண்களுடனும் இணைந்து வேலை செய்த போது கிடைத்த அனுபவங்களை இந்நாடகத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள முயற்சித்ததை அவதானிக்க முடிந்தது. இந்நாடக அளிக்கையூடாக கிடைக்கின்ற நிதி பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில் பாதிப்புக்களுக்கு பரிகாரம் தேட வேண்டியதும் இனியும் பாதிப்புக்கள் வராது பாதுகாக்க வேண்டியதும் முக்கியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளை நாமே கண்டு கொள்ளல் அவசியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கான அபிவிருத்தியில் மன அபிவிருத்தி பற்றி சிந்தித்தல் மிக அவசியம். மன அபிவிருத்தியை ஏற்படுத்தும் செயற்திட்டத்தில் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அரங்கு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்குகின்ற செயல்திறன் அரங்க இயக்கம் (யுஉவiஎந வுhநயவநச ஆழஎநஅநவெ) இவ்வாறான பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது.  பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகத்தையும் செயல்திறன் அரங்க இயக்கமே தயாரித்துள்ளது. இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தே. தேவானந்த், ஒன்றரை மணிநேரத்தைக் கொண்ட இந்நாடக அளிக்கைக்கான இசையமைப்பை த. றொபேட் செய்துள்ளார்.

Sunday 29 May 2022

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 02

தேவநாயகம் தேவானந்த் 

இலங்கையில் ராஜபக்ச ஆட்சியல் ஏற்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிச் சூலில் ரணில் விக்ரமசிங்க பதவியைப் பொறுப்பெற்ற போது  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்னார். அந்த உரையில், அவர் {ஹணு வ(ட்)டயே' நாடகத்தின் குழந்தையைக் காப்பாற்றும் கதாபாத்திரமான க்ரு~h பாத்திரத்தைப் போன்று தான் இருப்பதாக குறிப்பிட்டார். 

‘ஹணு வ(ட்)டயே’ நாடகம் இரண்டு பேரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவையிரண்டும்; இறுதியில் ஒன்றாக வரும் இரண்டு கதைகள் எனலாம். முதலாவது கதை க்ருசா வின் கதை, இரண்டாவது கதை ஆட்சியதிகாரத்தின்; கதை. 

க்ருனிசியாவில் ஒரு நகரத்தை ஆளும் ஒரு பணக்கார ஆளுநருக்கு மைக்கேல் என்ற குழந்தை பிறந்தது, மேலும் அவரது மனைவி நாடெல்லா, பகட்டாரவாரமாக வாழ்கிறார்கள்.  ஈஸ்டர் ஞாயிறு அன்று கிளர்ச்சி நடக்கிறது.; அதில்; கவர்னரைக் கொன்றுவிடுகிறார்கள், ஆளுநரின் மனைவி தனது ஆடம்பரப்பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடுகிறாள் அப்போது அவசரத்தில் தன் குழந்தையை விட்டுச் செல்கிறாள். இதற்கிடையில், க்ருசா என்ற வேலைக்காரப் பெண் அந்தக்குழந்தையை தனியே விட்டுச்செல்ல விரும்பாது தூக்கி செல்ல விளைகிறாள். மற்றவர்கள் தடுக்கிறார்கள் இருந்தாலும் க்ருசா குழந்தையைக்காப்பாற்றிசெல்கிறாள். சதிப்புரட்சியின் குழப்பங்களுக்கு மத்தியில் க்ருசா சைமன் என்ற சிப்பாயும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவிக்கிறார்கள். சைமன் க்ரு~hவுக்கு அவர்களின் நிச்சயதார்த்தத்தின் அடையாளமாக ஒரு சங்கிலியில் ஒரு வெள்ளி சிலுவையைக் கொடுக்கிறான். சண்டைமுடிந்த பின்னர் அவர்கள் இணைவதாகக் கூறி பரிகிறார்கள். 


குழந்தைiயைப் க்ருசா அரண்மனையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முனைகிறாள்.  க்ருசா மைக்கேலுடன் கடினமான பயணத்தை ஆரம்பிக்கிறாள். அவர்கள் இருவரும் மலைகளுக்கு நடுவே குளிரில் பயணிக்கிறார்கள். க்ருசாவிடம் பணம் குறைவாகவே உள்ளது, பால் மற்றும் தங்குமிடத்திற்காக அவள் குடிசைகளில் பிச்சை எடுக்கிறாள். இவ்வாறாக மிகக்கடினமான பயணத்தில் குழந்தையைக்காப்பாற்றிச் செல்கிறாள். ஒரு கட்ட்தில்மலைக் கிராமங்களுக்கு செல்லும் ஒரு பனிப்பாறைக்கு க்ரு~h வரும்போது, ஆழமான பள்ளத்தாக்கு வழியாக தப்பிக்க வேண்டும் அதற்கு ஒரு பழைய பாலம் மோசமான நிலையில் இருந்த பாதையைக் கடக்க முயல்கிறார். பாலத்தில் கூடியிருந்த வணிகர்கள் க்ருசாவை அந்த பாதை ஆபத்தானது என்று எச்சரித்தாலும், அவள் பாலத்தில் ஏறி கடந்து ஓடுகிறாள்;. குழந்தையைத் துரத்தும் ஆபத்திலிருந்து தப்பிக்க க்ருசாவுக்கிருந்த ஒரே வழி அதுவாகத் தான் இருந்தது. க்ருசா மைக்கேலை மேலும் மலைகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.பின் தனது சகோதரன் வீட்டை அடைகிறாள். 

Friday 27 May 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 01


‘நாடகம் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிஜவாழ்க்கையில் நாடகம் இருக்கிறது.’ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இலங்கையின் தற்போதைய நிலைமை காணப்படுகின்றது போலும்.  இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியைத் தோறு;றுவித்ததோடு நாடுமுழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச பதவிவிலகவேண்டியேற்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக பாராளுமன்றில் ஒரே ஒரு உறுப்பினராரைமட்டுமே கொண்ட  ரணில் விக்ரமசிங்க பதவியேற்றர். இதன் பின்னர்,  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்னார். அந்த உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

“நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.” என்று ரணில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

அப்போது பேட்;டோல் பிறெக்டடின் சிங்கள மொழிபெர்ப்பு நாடகமான 'ஹணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருசா (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதான காட்சியை குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க  அதே போன்ற நிலையில் தான் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது பணி "அதை விடவும் ஆபத்தான சவாலாகும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“நான் பொறுப்பேற்றது அபாயகரமான சவால்,  கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. பாலத்தின் கீழே மிகவும் ஆழமானது அடியே தெரியவில்லை. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அதனடியில் கூர்மையான இருப்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலைமையில் குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன். எனது உயிரைப்பணயம் வைத்து சவாலுக்கு முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன்.” என்று தன்னை வெண்கட்டி வட்ட நாடகத்தில் குழந்தையைகாப்பாற்றும் க்ருசா பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆக, இங்கு நாடக நிஜம் அல்லது மேடைநிஜம் வாழ்வியல் நிஜமாகியிருக்கிறது என்பதைக்காணலாம்.  ரணில் விக்கிரமசிங்க தான் பார்த்த ஒரு நாடகத்தின் பாத்திரமொன்றுடன் தன்னை உருவகப்படுத்துகின்றார். அந்தப்பாத்திரம் போன்று குழந்தையைக்காப்பாற் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக நம்புகிறார் போலும். 

Sunday 22 May 2022

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'ஆப்பிழுத்த குரங்குபோலானார்'

இலங்கையில் 2022 ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகாரணமாக ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் தெரிவிக்கும் கருத்துக்கள் இதில் பார்க்கலாம்.யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் (பிரிவு டி) மற்றும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இணைந்து 20.05.2022 @ 7.00 pm நடத்திய கருத்தரங்கின் ஒளி,ஒலி வடிவம்