வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க, செயற்திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) மூலம் கிளிநொச்சி சிறுவர் பாதுகாப்பு இல்லம், அச்சுவேலி சான்றளிக்கப்பட்ட பாடசாலை மற்றும் சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள ஆண், பெண் சிறுவர்களுக்கான உளசமூக மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் மொத்தமாக 220 சிறுவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பயிற்சியும் ஆறு மணித்தியாலங்கள் கொண்டதாக அமைந்ததுடன், அவை செயற்திறன் அரங்க இயக்கத்தின் பணிப்பாளரும் அரங்கியல் பயிற்சியாளருமான கலாநிதி தே. தேவானந்த் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டன.
Tuesday, 2 June 2026
'குட்டி நல்ல சுட்டி' நாடக மேடையேற்றமும் அரங்கினூடான உளசமூகப்பணியும்
வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க, செயற்திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) மூலம் கிளிநொச்சி சிறுவர் பாதுகாப்பு இல்லம், அச்சுவேலி சான்றளிக்கப்பட்ட பாடசாலை மற்றும் சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள ஆண், பெண் சிறுவர்களுக்கான உளசமூக மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் மொத்தமாக 220 சிறுவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பயிற்சியும் ஆறு மணித்தியாலங்கள் கொண்டதாக அமைந்ததுடன், அவை செயற்திறன் அரங்க இயக்கத்தின் பணிப்பாளரும் அரங்கியல் பயிற்சியாளருமான கலாநிதி தே. தேவானந்த் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டன.
Art-based activities contribute to children's psychological well-being and psychosocial development
At the 32nd Annual Sessions of the Jaffna Science Association, Dr. T. Thevananth delivered a presentation on the role of art activities in psychosocial work. The presentation focused on how art-based activities contribute to children's psychological well-being and psychosocial development, with particular emphasis on the “Saturday Drama Night” programme conducted by the Active Theatre Movement at Nallur.
புதுவை அன்பன்: கலைக்கும் கொள்கைக்கும் உண்மையாக வாழ்ந்த அரங்கக் கலைஞர்
கலாநிதி
தேவநாயகம் தேவானந்த்
அறிமுகம்
புதுவை அன்பன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்தவர் தனது சிறுவயதில் காவோலை கொழுத்தி அந்த வெளிச்சத்தில் கூத்தாடிய பரம்பரையில் வந்தவர். ஊரில் காத்தவராயன் கூத்தை அறுபது அடி நீள மேடையில் பிரமாண்டமாக நிகழ்த்தியவர். அந்தக் கூத்தை மேடையேற்றும்போது அதில் காணப்பட்ட பாலியல் விரசங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் கூறுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றை நீக்கி, புதிய சமூகப் பார்வையுடன் மறுவடிவமைத்தார்.
கண்ணுக்குப்புலனாகா சமூகப் போராளி அமரர் ச. பாஸ்கரன்
கலாநிதி தே.தேவானந்த்
நாடகக் கலைஞரும் ஆயுள் வேத வைத்தியருமான ச. பாஸ்கரன் அவர்கள் 28 மே 2026 அன்று லண்டனில் காலமானார். அமைதியான சுபாவம், தமிழர் விடுதலையின் மீதான ஆழ்ந்த பற்றுறுதி, நாடகக் கலையின் மீதான அளப்பரிய ஈடுபாடு, சமூகச் சிந்தனை ஆகிய உயரிய பண்புகளைக் கொண்டவர் அவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்ததுடன், சிறந்த தொடர்பாடல் திறனும் மனிதநேயப் பண்பும் கொண்டவராக அறியப்பட்டார். உறவுகளைப் பேணுவதிலும் மனிதர்களை இணைத்துச் செயற்படுத்துவதிலும் தனித்திறன் மிக்கவராக விளங்கினார். சிறந்த சாரணர், சாரணப்பண்பாட்டின் வழி வந்தர்.
Sunday, 19 April 2026
நீளிரா: ஈழத்தமிழர் அரசியல் நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது.
நீளிரா: சினிமா விமர்சனம்
Dr தேவநாயகம் தேவானந்த்
நீளிரா திரைப்படத்தின் முக்கியமான
பகுதி, இந்திய அமைதிப்படையினர் விடுதலைப்புலிகளைத் தாக்கும் நோக்கில் திருமண வீட்டிற்கு
அருகில் முகாமிடும் காட்சியிலிருந்து தொடங்குகிறது. யுத்த யதார்த்தத்தில், பதுங்கித்
தாக்குதல் (ambush) என்பது மறைவு, இரகசியம் மற்றும் திடீர் தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டதாகும். ஆனால் இத்திரைப்படத்தில், மக்கள் கூடியிருக்கும் வெளிச்சமான இடத்தில்
படையினர் பதுங்கியிருப்பது, யதார்த்தத்தை மீறும் காட்சியமைப்பாகத் தோன்றுகிறது.
இந்த
இடத்தில் திரைப்படம் யதார்த்தப் பாணியை மீறி சினிமா மாயைக்குள் நுழைகிறது. இங்கு இராணுவத்தினர்
ஊரார்வீட்டுக் கோழியை உரிமையாகப் பிடித்து வாட்டி, சப்பாத்தி செய்து ஆறுதலாக உண்பது
போன்ற காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இதனை மேல்மாடியில் இருந்து தொலைநோக்கி மூலம்
சிறுவர்கள் பார்ப்பதும், “சப்பாத்தி” என்ற உணவு அவர்களுக்கு புதிதாக இருப்பதும், யதார்த்தத்தை
மீறும் சினிமா மாயைக் காட்சிகளாக அமைகின்றன.
அதேவேளை, அந்த இராணுவக் குழு வழிதவறி வீட்டிற்குள் நுழைகிறது என்ற காட்சியமைப்பு யதார்த்த ரீதியாக பலவீனமாகத் தோன்றுகிறது. காட்டுப் பகுதிகளில் வழிதவறுவது சாத்தியமானதாயினும், குடியிருப்புப் பகுதிகளில் அவ்வாறு வழிதவறுவது நம்பத்தகுந்ததாகத் தோன்றுவதில்லை. எனினும், திட்டமிட்டே “வழிதவறல்” என்ற நாடகத்தைக் கையாள்ந்து பொதுமக்களைத் துன்புறுத்தும் இராணுவ மனப்பாங்கை வெளிப்படுத்தும் முயற்சியாக இதை அணுகலாம். கலைப்படைப்பில் அனைத்தும் காரண-காரியத் தொடர்போடு அமைய வேண்டிய அவசியமில்லை; கலைச் சுதந்திரம் பல்வேறு வெளிப்பாட்டு வழிகளை உருவாக்குகிறது.
இத்திரைப்படத்தின்
மையக் குடும்பம் பெண்தலைமை தாங்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தக் குடும்பத்தின் தலைவி,
“எனது அனுமதி இன்றி நீங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடாது” என்று இராணுவத்தினரிடம் கூறும்
காட்சி முக்கியமான அரசியல் அடையாளமாகும். ‘இந்த
வீட்டிலயாவது சமாதானத்தை நிலைநாட்டுங்கோ’ என்று கெஞ்சுவது இது, இந்திய அரசு ஈழத் தமிழர்களின்
வாழ்க்கையில் அனுமதியின்றி தலையீடு செய்ததற்கான விமர்சனமாகப் படைக்கப்பட்டுள்ளது எனக்
கருதலாம்.
இங்கு,
பதுங்கித் தாக்குதல் நோக்கத்துடன் வந்த இராணுவம் ஏன் பொதுமக்களின் வீட்டிற்குள் நுழைகிறது
என்பதற்கான தர்க்க ரீதியான விளக்கம் தெளிவாக இல்லை.
Saturday, 18 April 2026
நீளிரா: ‘போர் விளையாட்டுகளை’ வெளிப்படுத்தும் சினிமா
Dr தேவநாயகம் தேவானந்த்
அரசியல் அதிகாரம் என்பது வெறும் இராணுவ வலிமையாலோ அல்லது நேரடி கட்டுப்பாட்டாலோ மட்டுமே நிலைநிறுத்தப்படுவது அல்ல. அது சமூகத்தின் சிந்தனை, கலாசாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளின் வழியாக இயல்பான ஒன்றாக உருவாக்கப்படுகிறது. இந்தக் கருத்தை தெளிவாக முன்வைத்தவர் இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்ஸ்சி (Antonio Gramsci) ஆவார். அவரது hegemony (ஆட்சி ஆதிக்கம்) என்ற கோட்பாடு, அரசியல் ஆட்சி எவ்வாறு மக்களின் சம்மதத்தை உருவாக்கி, அதே நேரத்தில் மறைமுகமான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது என்பதை விளக்குகிறது.
நடிப்பு முறைகளின் கலப்பு புத்தாக்கம் அல்ல அது புரிதலற்ற செயற்பாடு
நடிப்பு முறைகளின் கலப்பு புத்தாக்கம் அல்ல அது புரிதலற்ற செயற்பாடு
------------------------------------------------
பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இன்று சமூக ஊடகங்களில் (17.04.2026) பிரசுரித்த ‘நடிப்பு முறைகளின் கலப்பு’ என்ற தலைப்பிலான கட்டுரைக்கான ஒரு விவாத களத்தை உருவாக்கும் நோக்குடன் இந்த பதிலிறுப்பு அமைகிறது. துறைசார்ந்தோருக்கிடையிலான மோதல்கள் ஆராக்கியமான விவாதங்களுக்கும் கற்றலுக்கும் வழிவகிக்கும் என்ற நம்பிக்கையில் இதனை பிரசுரிக்கிறேன்.
பேராசிரியர் மௌனகுருவின் இந்தக் கட்டுரை ‘நடிப்பு முறைகளின் கலப்பு’ என்று விளக்குகிறது. ஆனால் இந்த அணுகுமுறை நடிப்பின் அடிப்படை இயல்பை தவறாகப் புரிந்து கொள்ளும் ஒரு பொதுமைப்படுத்தலாகும். நடிப்பு என்பது வெளியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பாணி/கூறுகளின் சேர்க்கை அல்ல; அது நடிகனின் உள்ளார்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு.
“‘கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கவனத்திற்காக..!’: கவனயீர்ப்புக் கட்டுரைக்கான விமர்சனப் பார்வை”
“‘கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கவனத்திற்காக..!’: கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர்களின் கவனயீர்ப்புக் கட்டுரைக்கான விமர்சனப் பார்வை”
---------------------------------------------------------------------------------------------
இந்த விமர்சனத்தில் முன்வைக்கப்படும் சில கவலைகள் ஏற்புடையவையே. இவ்வாறான திறந்த உரையாடல்கள் மூலம் அவை எதிர்காலத்தில் சீர்செய்யப்பட வேண்டும். அந்த உரையாடல் வெளியைத் திறந்ததற்காக கிழக்குப் பல்கலைக்கழக நாடகத் துறை விரிவுரையாளர்களுக்கு நன்றி. குறிப்பாக ஆய்வரங்குகளின் தரம், தேர்வு செய்யப்பட்ட தலைப்புகள் மற்றும் பங்கேற்பாளர்களின் பொருத்தம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானவை.
ஆனால், இந்த விமர்சனம் சுயபரிசோதனைக்கும் சுயவிமர்சனத்திற்கும் உரியதாகவும் அமைகிறது. இங்கு விமர்சனத்தை முன்வைப்பவர்கள் தம்மைத்தாமே ஒரு முக்கியமான முரண்பாட்டில் நிறுத்துகின்றனர். ஏனெனில் இங்கு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் நாடக மற்றும் அரங்கியல் துறைகளுக்குள் சாதாரணமாக நிலவி வருகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை.
நீளிரா: சினிமா விமர்சனம்
யுத்த நினைவுகளின் சினிமா
Dr.தேவநாயகம் தேவானந்த்
சினிமா
என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது
ஒரு மொழி. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை இனங்களுக்கு, தமது வரலாறு, நினைவுகள்
மற்றும் அரசியல் அனுபவங்களை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த காட்சிமொழியாக அது செயல்படுகிறது.
ஈழத் தமிழர்களின் யுத்த அனுபவங்களும் அதனுடன் தொடர்புடைய மனநிலைகளும் சினிமா வழியாகவும் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம்
உள்ளது. அந்த வகையில், நீளிரா திரைப்படம் ஒரு கலைப்படைப்பாக மட்டுமல்லாது, ஒரு
இனத்தின் நினைவுகளையும் குரலையும் வெளிப்படுத்தும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படக்
கூடியது.
ஈழத்
தமிழ் சினிமாவை யுத்தத்திற்கு முன், யுத்தகாலம் மற்றும் யுத்தத்தின் பின் என்று பிரித்து
பார்க்க வேண்டியுள்ளது. எமக்கான சினிமா, எமக்கான வானொலி, எமக்கான தொலைக்காட்சி தேவை
என்பதை நீண்ட நாட்களாகவே ஈழத் தமிழர்கள் உணர்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக, ஈழ விடுதலைப்
போராட்ட காலத்தில் இத்துறைகளுக்கான கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
Monday, 2 June 2025
எமது சிறுவர்கள் புறயிலர் கோழிகளாக வளர்கிறார்கள், அதனைத் தவிர்ப்போம் !
- துளசி முத்துலிங்கம் / ஆங்கில ஊடகத்துறை
உலகின் பிற பகுதிகளைப் போலவே, யாழ்ப்பாணத்திலும் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. இதற்கு வேகமான புலம்பெயர்வு ஒரு காரணமாக இருந்தாலும். குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதும் முக்கியமான காரணமாகும். இப்போது யாழ்ப்பாணத்தின் பெற்றோர்கள் குறைந்த குழந்தைகளையே பெறுகிறார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான குடும்பங்களில் அதிகபட்சமாக இரண்டு; குழந்தைகள், பலர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இப்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சில ஆண்களும்,; பெண்களும் திருமணம் செய்யாதும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. இங்கு தனிப்பட்டவர்களின் முடிவின் மீது நான் கேள்வி கேட்கவில்லை - இந்த பொருளாதார நெருக்கடியில், திருமணம் செய்வதும் ,அதிக குழந்தைகளைப் பெறுவதும் முடியாது தான், அதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.









