Monday 16 May 2022

ஆய்வு மகாநாடும் ஆய்வுநூல் வெளியீடும்

 


யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் சமூகவிஞ்ஞானப்பிரிவு நடத்துகின்ற ஆய்வரங்கத் தொடரின் ஏழாவது அமர்வு எதிர்வரும் 19.05.2022 அன்று மாலை 7.00 மணிக்கு இணையவழி நடைபெறவுள்ளது. இதற்கான வளவாளராக தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் மற்றும் இதழியல்துறை பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்கள் வழிவநத்துகின்றார். இந்த அமர்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கு கொள்கிறார்கள். இந்தத் தொடரின் நிறைவாக இலங்கை தமிழர் வாழ்வியல் சார்ந்த 15 தலைப்புக்களின் பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்களின் வழிகாட்டலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை  ஆய்வுமகாநாட்டில் சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்த ஆய்வு மாகாநாடு ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளது. அதில் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வு நூல் வெளியிடப்படும்.அந்த ஆய்வரங்குகளை யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் சமூக விஞ:ஞானப்பிரிவு தலைவர் தேவநாயகம் தேவானந்த் ஒருங்கிணைக்கிறார்.

No comments:

Post a Comment