Thursday 30 June 2022

அடிப்படை மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறி மலையக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு

அடிப்படை மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறி மலையக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு கடந்த 12.06.2022 அன்று ஹட்டன் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் நடைபெற்றது. யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் 2021 ஆண்டு இணையவழியாக நடத்திய அடிப்படை மனிதவுரிமைகள் தொடர்பான கற்றைநெறியை பூர்த்திசெய்த மலையக மாணவர்கள் நாற்பது பேருக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதில் யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார் நிகழ்வு அரங்கு நிறைந்த பார்வையாளருன் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் மானுடம் சுடரும் என்ற மனிதவுரிமை மேம்பாட்டு அமைப் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மனிதவுரிமை பயிற்சிபெற்ற மாணவர்களை உள்ளடக்கியதாக வடக்கு கிழக்கு மலையம் ஆகிய மூன்று பகுதிகளிளைச்சார்ந்தவர்கள் இணைந்து செயற்படும் அமைப்பாக விளங்கும்.இதனை யாழ்மாவட்ட தேவநாயகம் தேவானந்த் ஒருங்கிணைப்பார். மலையத்துக்கான ஒருங்கிணைப்பாளராக திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி அவர்கள் செயற்படுவார். எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் இதற்கான இயங்குநிலைக்குழு உருவாக்கப்படும்.



















 

No comments:

Post a Comment