( Yarl Thinakural Article 29th Dec, 2024)
Dr. தேவநாயகம் தோனந்த்
அண்மைக் காலங்களின் இந்தியாவின் அயலுறவு கொள்கை ஒரு பதட்டமான நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியாவின் அயல்நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் அதன் விளைவாக அந்த நாடுகள் சீனாவின் பக்கம் நகரும் தோற்றப்பாடுகள் போன்ற நிலைமைகளால் இந்திய வெளியுறவுக் கொள்கை பதட்டத்தில் காணப்படுகிறது எனலாம்.
பொதுவாக இந்தியாவின் அயல்நாடுகளில் ஆட்சியமைப்பவர்கள் தமது முதல் வெளிநாட்டுப்பயணத்தை இந்தியாவிற்கு சென்று ஆரம்பிப்பது வழமை. இது அயலில் உள்ள பெரியண்ணையைப் ( Big Brother ) பார்க்காது போவது தவறாகிவிடும் என்ற பய உணர்வு சார்ந்தது என்ற விமர்சனங்களையும் மறுப்பதற்கில்லை.