Sunday 18 June 2017

யுத்தத்தின் நினைவிடங்கள்




ஜேர்மனினியிலிருந்து ஜேர்மானிய ஊடக நண்பர்களுடன் ருனிசியா இராக் மற்றும் இலங்கை ஊடக நண்பர்களுடன் போலட் நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு எமது பயணம் அறிந்து நாடக நண்பர் ஜெராக் 200 கி.மீ தூரம் இருந்து ஓடி வந்து என்னை தனது காரில் ஏற்றிக் கொண்டு சில முக்கியமான இடங்களைச் சுற்றிக் காட்டினார். 
 நாங்கள் இருந்த இடம் இரண்டாம் உலகப்போரில் அதிகளவு பாதிக்கப்பட்ட இடம். ஜேர்மன் படைகள் ரஷ்சியாவை நோக்கி போலண்ட் வழியாகவே சென்றார்கள் அப்போது ஆற்றங்கரையொன்றில் இரண்டு படைகளுக்கும் இடையில் கடுமையான யுத்தம் நடைபெற்றது. அதில் பல ரஷசிய வீரர்கள் உயிரிழந்தார்கள். அவர்களின் நினைவிடம் இப்போதும் உள்ளது. இறந்த ரஷ்சிய வீரர்களின் பெயர்கள் அவர்களின் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. முன்பெல்லாம் இந்த நினைவிடங்களுக்கு அதிகளவு முக்கியத்தவம் கொடுக்கப்பட்டதாகவும். இப்போது இவ்வாறான நினைவிடங்கள் முக்கியமற்று வருவதாகவும் ஜெராக் சொன்னார். யுத்ததத்தில் வென்றவர்கள் வெற்றிக்கான நினைவிடங்களை அமைத்துக் கொண்டாடுவதென்பது எல்லா இடங்களிலும் நடப்பது. அது தேவையற்றது என்பதான நினைவு வருவதற்கு காலம் அதிகம் தேவைபோலும்.

2 comments: