தமிழ் தலைவன் மு.கருணாநிதி – 03
‘'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்'.’ இது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதியின் முழக்கம்.
கருணாநிதி தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். ஓவ்வொரு போராட்டங்களையும் தனது எழுச்சிமிகு பேச்சாலும் எழுத்தாலும் தொண்டர்களைத் தட்டியெழுப்பி வென்றிருக்கிறார். தனது கடுமையான ஓயாத உழைப்பால் சவால்களை முறியடித்திருக்கிறார். ஆதனால் தான் தன் கல்லறையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்’ என்ற வாசங்களை எழுதச் சொல்லியிருந்தார்.