Showing posts with label Uthayan news paper. Show all posts
Showing posts with label Uthayan news paper. Show all posts

Monday, 3 February 2025

இலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் அரசியல் நிலைக்குமா?

 

(Yarl Thinakural Article ,02.02.2025 ) 

Dr. தேவநாயகம் தேவானந்த்

2025 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்க உலகளாவிய கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுததிருக்கிறது. குறிப்பாக , வெளிநாட்டு உதவி மற்றும் சர்வதேச வளர்ச்சி தொடர்பாக இவரது முடிவுகள் உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்ப்  பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார், இந்த முடிவுகளால் இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலை முன்வைக்கிறது, இது மனித உரிமைகள் மற்றும் சமூக மேம்பாட்டில் முயற்சிகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிதி வெட்டுக்கள் நடைமுறைக்கு வரும்போது, நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், அத்தியாவசியத் திட்டங்கள் தொடர்வதை உறுதி செய்யவும் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்தக் குறைப்புகளின்  விளைவாக எதிர்காலத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் காணாமல் போகக்கூடும்.  இந்தக்கணத்தில் பலவிடயங்களை நாங்கள் சிந்தித்தாக வேண்டியதாகிறது. இந்த அமெரிக்க நிதியுதவிகள் வடக்குக்கிழக்கில் எதை செய்தன என்பதையும் பார்த்தாக வேண்டும். இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் போர்காலத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிவந்தன, பின்னர் போருக்குப் பிந்தைய காலத்தில்நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக நிர்வாகத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த அமைப்புகளில் பல, ருளுயுஐனு மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் உட்பட சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து கணிசமான நிதியைப் பெறுகின்றன. இலங்கை நிதி அமைச்சின் கூற்றுப்படி, 1956 தொடக்கம் அமெரிக்கா 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவியை வழங்கியுள்ளது, 

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளால் வடக்கு கிழக்கு பகுதிகளில் நன்மைகள் பல இருந்தாலும் பாதிப்புக்களும் இருந்திருக்கின்றன. அதில் வடக்கு கிழக்கில் தனித்துவமாக மக்கள் அமைப்புக்களாக இருந்த பல அரசார்பற்ற நிறுவனங்களை செயலிக்கச் செய்தததைக் குறிப்பிடலாம். இதன் பயன் இன்று சர்வதேச

அரசசார்பற்ற நிறுவனங்களின் ஓலமாக ஒலிக்கும் சிவில் அமைப்புக்கள் செயலிழந்து போயுள்ளன, அவை விளைத்திறனுடன் இல்லை’ என்பதைக் கேட்க முடிகிறது. இந்த வினைத்திறன் இன்மைக்கு என்ன காரணம் என்று சிந்தித்தாக வேண்டும். 

Saturday, 14 September 2024

'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்’.


தமிழ் தலைவன் மு.கருணாநிதி – 03


‘'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்'.’ இது  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதியின் முழக்கம்.
கருணாநிதி தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். ஓவ்வொரு போராட்டங்களையும் தனது எழுச்சிமிகு பேச்சாலும் எழுத்தாலும் தொண்டர்களைத் தட்டியெழுப்பி வென்றிருக்கிறார். தனது கடுமையான ஓயாத உழைப்பால் சவால்களை முறியடித்திருக்கிறார். ஆதனால் தான் தன் கல்லறையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்’ என்ற வாசங்களை எழுதச் சொல்லியிருந்தார்.

பிறப்பு ஒரு சம்பவமானாலும் இறப்பு வரலாறாக இருக்க வேண்டும்.


தமிழ்த் தலைவன் மு.கருணாநிதி -02


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின்  மறைவு உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தலைவன் இல்லாத ஒரு நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது எனலாம். தலைவனைத் தேடும் பணியில் அல்லது தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் நிலையில் தமிழ் இனம் இருக்கிறது போலும்.
ஓவ்வொரு தலைவனும் இறக்கும் போது தனக்கு அடுத்தபடியாக தலைவர்களைத் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருப்பது வழமை. கருணாநிதி தனது மறைவுக்கு முன்னரே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை அறிவித்துச் சென்றிருக்கிறார்.

தமிழ் எங்கள் தாலாட்டு மரணம் எங்கள் விளையாட்டு


தமிழ் தலைவன் மு.கருணாநிதி -01

கருணாநிதி காலமானார். காலமாகியும் காலத்துள் வாழும் தலைவர்கள் மிகச்சிலர்.  அவர்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி அவர்களும் ஒருவர் என்பது மிகையல்ல.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ‘தமிழ்தலைவன்’ என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரே தலைவனாக மு.கருணாநிதி அவர்களையே இனங்காணமுடியும்.
கொஞ்சும் தமிழைத் தனது அரசியலின் அத்திவாரமாகவும் தமிழன் வராற்றுப்பொக்கிசங்களான இலங்கியங்களை தூண்களாகவும் நிறுத்தி அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழ் தலைவனாக உலகத் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தில் இருக்கின்ற கருணாதிநி உலகத் தமிழர் வராற்றின் ஒரு பகுதி எனலாம்.

Tuesday, 2 January 2024

இலங்கையில் ஊடக சுதந்திரம்’


- ஈழத்தின் மிகப்பெரும் ஊடகப்படுகொலை தினத்தை அடியொற்றிய கருத்துநிலை
(ஈழத்தின் மிகப்பெரிய ஊடகப்படுகொலை தினமாக வர்ணிக்கப்படுகின்ற மே 02 இன் பத்தாவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் முகமாக 02.05.2016 அன்று யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை)

Monday, 9 January 2023

தங்கத் தட்டில் வைத்து எனக்கு தலைமைப்பதவி தரப்படவில்லை ‘ஜெ


தேவநாயகம் தேவானந்த்

தமிழ்நாட்டு திராவிட அரசியல் நீரோட்டத்தில் புதிய கிளை நதியை உருவாக்கியர் எம.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அதே போல ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர். ஏம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பன்னர் அவரது வாரிசான nயைலலிதா புரட்சித் தலைவி என்று அழைக்கப்பட்டார். இருவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். இருவரும் முதல்வராக இரக்கும் போதே உயிர் நீத்தார்கள். இருவரும் அப்பலோ மருத்துவமனையில் அனுமகிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்கள். ஜெயலலிதா 75 நாட்கள் அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமையை நவீன அறிவியல் படு கொலை என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

Friday, 14 September 2018

தென்றல் என்னைத் தொட்டதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்.


தமிழ் தலைவன் மு.கருணாநிதி -04

கருணாநிதியின் அரியல் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியதில் சிவாஜி கணேசன் முதல் முதல் நடித்;து வெளிவந்த பராசக்திப் படம் முக்கியமானது. ஆதற்கு கருணாநிதியே வசனம் எழுதியிருந்தார். ஆதில் வரும் நீதிமன்றக்காட்சியினல் சிவாஜி கணேசன் மிக அற்புதமாக சமூகநீதிக்கருத்துக்களை கருணாநிதியின் வசனத்தில் அசத்துவார். அதில் ஒரு வசனம் தான் ‘தென்றல் என்னைத் தொட்டதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்.’ என்பது.
கருணாநிதியின் வாழ்வில் தென்றல் வீசுகிறது. அவரது ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்று அவரது தோழனும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அப்போதைய பொருளாளருமான எம்.ஜி.ஆர் போர்கொடி தூக்கினார். ஏம்.ஜி.ஆர் என்ற அந்த நெருப்பைத் தாண்டுவதற்கு கருணாநிதி படாதபாடுபட்டார். இருந்தாலும் கட்சியைக் காத்து தீயைத் தாண்டி வந்திருக்கிறார்.

Wednesday, 1 February 2017

முதுகெலும்பில்லாத செயலாளர் -03


விடியக்காத்தால கண்ணமுழிச்சு கட்டிலால எழும்ப கேற்றடியில் “அப்புச்சி….அப்புச்சி “ என்று கூப்பிட்டுக் கொண்டு சொந்தக்காரர் ஒருத்தர் வாசல்ல வந்து நின்றார். அவசரமா வந்த சலத்தையும் அடக்கிக்கொண்டு ஓடிப்போய் கேற்றத் திறக்க “அப்புச்சி நீ உலகம் தெரிஞ்சனி உரெல்லாம் நியாயங்கள் பிளக்கிறாய். இஞ்ச சொந்தத்துக்க நடக்கிற பிடுங்குப்பாடுகள் ஒன்றும் உனக்குத் தெரியாது…”என்று கேற்றத்திறந்து உள்ளுக்க வராதுக்கு முன்னமே அந்தாள் குழறத்தொடங்கிட்டு.

“இரும்பு மனிசர்”



தொடர்ச்சியாக நாலு நாள் லீவு எண்டு போட்டு பேரப்பிள்ளைகள் நாண்டு கொண்டு நின்றுதுகள் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்துக்குப் போக வேணுமென்று அதில ஒரு நாள் கீரிமலை மாவிட்டபுரம் என்று ஒரு சுத்துச் சுத்தினவை. என்னையும் வரச்சொல்லி நிண்டாப்போல போகவேண்டியதாப் போச்சு. கிழடுகட்டைகள் என்றால் கோயில் குளம் போற காலமென்று தான் எல்லாற்ற நினைப்பும்.பிள்ளை பேரப்பிள்ளை எல்லாம் அப்பிடித் தான் நினைக்கினம். முதல் நாள் காங்கேசன்துறையில உந்த ஆமிக்காரன் கட்டி ஓகோவென்று நடத்துற தெல்செவினவோ என்னவோ என்று பெயர்வைச்சிருக்கிற ஹொட்டேலுக்கு போனவையள். அப்ப இந்தக் கிழடுகளைக் கூப்பிடக் கூடாதென்று விட்டிட்டு போயிட்டாங்கள். அது உந்த இளசுகள் கூடிக்குலாவிற இடமெல்லே அது கிழடுகளுக்கு ஒத்துவராது தானே.


Saturday, 21 January 2017

உத்தம வில்லன்


விடிகாலை சலப்பை முட்டி அடிவயிற்றில உதைக்க கண்முழிச்சன். இன்னும் சூரிய வெளிச்சம் முழுசா வரேல்ல. எழும்பி பாத்ரூமுக்க போய் சிரம பரிகாரம் செய்து போட்டு தண்ணியை அடிக்க பிளாஸை பிடிச்சு அமர்த்தினன். அது உடைஞ்சு கையோட வந்திட்டிது. இனி என்ன செய்யிறதெண்டு வாளியில தண்ணியப்பிடிச்சு அள்ளி ஊத்த வேண்டியதாப் போச்சு. இன்றைக்கு உவன் பிளம்பருக்கு பின்னால திரியிற வேலையொன்று வந்து போச்சு.

Friday, 6 January 2017

' தமிழக மக்கள் தான் தமது சொத்து என்றவர் முதல்வர்” ' ஜெ'



தமிழ்நாட்டு அரசியல் மூன்று முதலமைச்சர்களை தனது பதவிக்காலத்தில் இழந்திருக்கிறது. பேரறிஞர் இண்ணாத்துரை, மக்கள் திலகம் எம்.ஸி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலிதா. இதில் இரண்டு தலைவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழத்தைச சார்ந்தவர்கள். ஆட்சியில் இருக்கும் போது சாவடைவதென்பது அந்த மக்களின் துயரங்களின் எல்லையில்லாத் தன்மையையும் கொடுப்பதோடு ஆட்சி ஆட்டம் காணுவதும் கட்சிகள் பிளவு படுவதும் நடைபெறுகின்ற. எம்.ஜி.ஆர் இறந்தபோது அ.தி.மு ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரவேண்டியிருந்தது.