Dr. தேவநாயகம் தேவானந்த்
(Sunday Yarl Thinakural 19.01.2025)
டிசம்பர் 17, 2022 அன்று, வடக்கு இலங்கை மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். டிசம்பர் 18 அன்று, படகில் இருந்து 104 பேர் கொண்ட குழு மீட்க்கப்பட்டனர். கடற்படை அவர்களை மியான்மர் நாட்டின் ரோஹிங்கியர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடற்றவர்கள், மியான்மரில் இனஅழிப்பு செய்யப்படுவதால்; தமது வாழ்விடத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு தமது நாட்டைவிட்டு கடல்வழியாக வெளியேறியவர்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு கடற்படையால் மீட்கப்பட்டார்கள்.