Showing posts with label Sri Lankan. Show all posts
Showing posts with label Sri Lankan. Show all posts

Sunday, 19 January 2025

தமிழாராய்ச்சி மகாநாட்டிலிருந்து எங்கு புறப்பட்டோம் ? எதை அடைந்தோம் !!

Dr. தேவநாயகம் தேவானந்த்

(Sunday Yarl Thinakural 19.01.2025)

டிசம்பர் 17, 2022 அன்று, வடக்கு இலங்கை மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். டிசம்பர் 18 அன்று,  படகில் இருந்து 104 பேர் கொண்ட குழு மீட்க்கப்பட்டனர். கடற்படை அவர்களை மியான்மர் நாட்டின் ரோஹிங்கியர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.  ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடற்றவர்கள், மியான்மரில் இனஅழிப்பு செய்யப்படுவதால்; தமது வாழ்விடத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு தமது நாட்டைவிட்டு கடல்வழியாக வெளியேறியவர்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு கடற்படையால் மீட்கப்பட்டார்கள். 

Saturday, 11 January 2025

மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்


Dr. தேவநாயகம் தேவானந்த்

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 25-ஆவது நினைவுப்பேருரையில், "மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்ந்தது. இந்த உரைத் தலைப்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் தமிழரசியல் சூழ்நிலைகளில் உருவாகியுள்ள மாற்றங்களை ஆழமாக ஆய்வு செய்யும் தேவையை முன்வைத்தது. ஆனால் உரையென்னமோ ’அரைத்தமாவை அரைப்பதாகவே’ காணப்பட்டது. இது தற்போது காணப்படும் புலமைத்துவ பின்னடைவை(Intellectual Bankruptcy) சுட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு பல்கலைக்கழக கல்விப்புலம்சார்ந்த ஒருவர் ஒரு மக்கள் தலைவனாகக் கருதப்பட்ட ஒருவரின் நினைவுப்பேருரையை புலமைத்துவ அடைவுளோடு முன்வைத்திருக்க வேண்டும். மாறாக  கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்ற கோதாவில் அந்தக்கட்சியின் கருத்துநிலையையே தனது நிலைப்பாடாகச் சொல்வதென்பது அவரது வங்குரோத்து நிலையையே சுட்டுகிறது என்லாம். சரி அது நிற்க, 

Wednesday, 25 December 2024

‘பட்டம்’ , ‘பட்டம்’ பறக்குது பார்…

Dr. Thevanayagam Thevananth

2024 டிசம்பர் நடுப்பகுதியில் இலங்கை அரசியலில் சலசலப்புக்கு குறைவில்லை எனலாம். அதில் மூன்று சொற்பதங்கள (Jargons) முக்கியம் பெற்றன. அவை சேர் ( ‘Sir’ );  கௌரவத்திற்குரிய (‘Honorable’)   கலாநிதி (‘Doctorate’) இவை ஆங்கிலேயரிடமிருந்து எமக்கு கிடைத்த பொக்கிசங்கள் என்றால் மிகையாகாது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த அடிமைக் கல்வியைப் பின்பற்றுவதன் விளைவுகள். ஏங்கள் தலைகளில் குந்தியுள்ள அடிமை மனப்பாங்கின் பிரதிபலிப்புக்கள் . இவை முறைமை மாற்றத்திற்கு தடையாக உள்ள சிந்தனைகள் எனலாம். இதிலிருந்து விடுபடுவதான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு அடிநிலை மட்டத்திலும் ஏற்படுத்தப்படும் போது தான் நாம் பொருளாதார நிலையில் முன்னேற முடியும். ஆப்போது தான் நாம் எமக்கான பாதையை கண்டுபிடிக்க முடியும். 

Sunday, 15 December 2024

This is not your land and you are not our king.


 

Dr. Thevanayagam Thevananth

In the past few months, incidents in two parliaments have drawn the attention of the world.

Last October, King Charles of Britain visited Australia, where he remains the constitutional head of state. On the second day of his visit, while addressing the Australian Parliament, an independent senator exclaimed, "You are not my king." Lydia Thorpe, representing the Aboriginal people of Australia, made this statement. However, security personnel escorted her out of the premises.

The senator, representing Australia’s Indigenous population, protested by declaring, “This is not your land; you are not our king,” and accused Britain of genocide against Indigenous Australians. She later told the BBC that her intention was to send a clear message to King Charles. She remarked, “If you are to remain as head of state, you must belong to this land. The King is not of this land. His ancestors were perpetrators of genocide, involved in widespread massacres.”