Showing posts with label USAID. Show all posts
Showing posts with label USAID. Show all posts

Monday, 3 February 2025

Questioning the Need for Continued NGO Politics in Sri Lanka


(The Article Published in Yarl Thinakural in Tamil, 02.02.2025)

Dr. Thevanayagam Thevananth

The re-election of Donald Trump as the President of the United States in 2025 has led to significant global policy shifts. In particular, his decisions regarding foreign aid and international development are expected to have a substantial impact worldwide. Shortly after taking office, Trump signed an executive order halting all U.S. foreign aid for 90 days. This decision presents a major challenge for NGOs operating in Sri Lanka, potentially forcing them to reduce efforts in human rights and social development. As these funding cuts take effect, organizations will need to find new ways to sustain their operations and ensure the continuation of essential projects. In the future, many NGOs could disappear due to financial constraints.

இலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் அரசியல் நிலைக்குமா?

 

(Yarl Thinakural Article ,02.02.2025 ) 

Dr. தேவநாயகம் தேவானந்த்

2025 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்க உலகளாவிய கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுததிருக்கிறது. குறிப்பாக , வெளிநாட்டு உதவி மற்றும் சர்வதேச வளர்ச்சி தொடர்பாக இவரது முடிவுகள் உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்ப்  பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார், இந்த முடிவுகளால் இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலை முன்வைக்கிறது, இது மனித உரிமைகள் மற்றும் சமூக மேம்பாட்டில் முயற்சிகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிதி வெட்டுக்கள் நடைமுறைக்கு வரும்போது, நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், அத்தியாவசியத் திட்டங்கள் தொடர்வதை உறுதி செய்யவும் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்தக் குறைப்புகளின்  விளைவாக எதிர்காலத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் காணாமல் போகக்கூடும்.  இந்தக்கணத்தில் பலவிடயங்களை நாங்கள் சிந்தித்தாக வேண்டியதாகிறது. இந்த அமெரிக்க நிதியுதவிகள் வடக்குக்கிழக்கில் எதை செய்தன என்பதையும் பார்த்தாக வேண்டும். இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் போர்காலத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிவந்தன, பின்னர் போருக்குப் பிந்தைய காலத்தில்நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக நிர்வாகத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த அமைப்புகளில் பல, ருளுயுஐனு மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் உட்பட சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து கணிசமான நிதியைப் பெறுகின்றன. இலங்கை நிதி அமைச்சின் கூற்றுப்படி, 1956 தொடக்கம் அமெரிக்கா 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவியை வழங்கியுள்ளது, 

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளால் வடக்கு கிழக்கு பகுதிகளில் நன்மைகள் பல இருந்தாலும் பாதிப்புக்களும் இருந்திருக்கின்றன. அதில் வடக்கு கிழக்கில் தனித்துவமாக மக்கள் அமைப்புக்களாக இருந்த பல அரசார்பற்ற நிறுவனங்களை செயலிக்கச் செய்தததைக் குறிப்பிடலாம். இதன் பயன் இன்று சர்வதேச

அரசசார்பற்ற நிறுவனங்களின் ஓலமாக ஒலிக்கும் சிவில் அமைப்புக்கள் செயலிழந்து போயுள்ளன, அவை விளைத்திறனுடன் இல்லை’ என்பதைக் கேட்க முடிகிறது. இந்த வினைத்திறன் இன்மைக்கு என்ன காரணம் என்று சிந்தித்தாக வேண்டும்.