Showing posts with label IMF & Sri Lanka. Show all posts
Showing posts with label IMF & Sri Lanka. Show all posts

Sunday, 2 March 2025

அரிசிக்கு அரோகரா!!

 


Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை அரசி மற்றும் தேங்காய்த்தட்டுப்பாட்டில் திண்டாடுகிறது. பாராளுமன்றத்தில் இதற்கு விநோதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் அரிசித்தட்டுப்பாட்டுக்குக்காரணம் இலங்கையில் உள்ள  நாய்கள் என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏதிர்காலத்தில் நாய் ஒழிப்புத் திட்டம் ஒன்றுக்கான முன்மொழிவாகவும் அதனைக்கருதலாம். இந்தச் சுழலில் "அரிசிக்கு அரோகரா" என்று சொல்லத் தூண்டுகிறது. இது பொதுவாக அரிசிக்காக வாழ்த்தும் ஒரு கோஷமாக கருதமுடியும்.

Sunday, 23 February 2025

2025-ஆம் ஆண்டின் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை - விமர்சனப் பார்வை

Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் மலிந்து கிடக்கின்ற ஊழல், முறைகேடு போன்ற விடயங்களில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்கான முறைமை மாற்றத்தை முன்னினைப்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி அதனை நோக்கி நகர்கிறதா? ஆல்லது ஏலவே இருக்கின்ற அதிகாரக்கட்டமைப்புக்களில் ஏறிக்குந்தியிருந்து அதனைச்சுவைக்கிறதா? ஏன்ற கேள்வி வலுவாகிறது. கடந்த வாரம் பிரதமமந்திரி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார் அப்போது சிறுவர் உளநலமேம்பாடு தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்காக அவரைச்சந்திப்பதற்கு வாயப்புக்கேட்டு அமைச்சர் சந்திரசேகரத்தைத் தொடர்புகொண்டிருந்தோம். பின்னர் அவர் குறிப்பிட்ட ஒரு நபரைத் தொடர்பு கொண்டு இறுதியாக கந்தர்மடத்திலுள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். என்னொடு ஊடக நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அது ஏலவே சினிமாஅரங்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் வைத்திருந்த அலுவலகத்திற்கு ஒப்பானதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதே கேள்விகள்,அதே அணுகுமுறைகள், அதே மூடிய அறைகள், முறைத்த முகங்கள் என்று எந்த மாற்றத்தையும் காணவில்லை. தெளிவான பதில்கள் இல்லை, தமது அலுவலத்திலேயே மக்கள் அணுகும் முறைமையில் மாற்றத்தை செய்ய முடியாதவர்கள் எப்படி நீண்ட காலம் புரையோடிப்போன நிலைத்த கட்டமைப்புக்களில் மக்கள் சார்பு நிலையை உருவாக்கப்போகிறார்கள் என்பது புரியவில்லை. அது நிற்க,

Saturday, 8 February 2025

சுதந்திரதின உரை : பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை


 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை, ஒரு புறம் நாட்டின் நீண்ட அடிமைப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தது, அதில் நாடடின் வீழ்ச்சியும் அதனிலிருந்து எழவேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின்  எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தபோதும், அந்தக்கனவு தேசத்தை மக்கள்முன்வைக்க ஜனாதிபதி தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.  இந்த உரையில் வெளிப்பட்ட தூரப்பார்வை, அதன் அரசியல் உள்நோக்கங்கள், மற்றும் சமூக, பொருளாதார உண்மைகளுடன் கூடிய பிணைப்பு ஆகியவை சார்ந்து சிந்திக்கத்தூண்டுகிறது.

Saturday, 4 January 2025

"உலகமயமாதலுக்கு பதில் அமெரிக்கமயமாதல்"



Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் புதிய அரசாங்கம், பல சவால்களைஎதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார சரிவிற்குப் பிந்தைய முன்னேற்றத்திற்கு உலக வங்கி, IMF போன்ற அமைப்புகளின் உதவியை நாடி நிதி பூர்த்தியை மேம்படுத்த முயற்சிக்கிறது. சமூக நல்லிணக்கம் இந்த அரசின் முதன்மை வேலைத்திட்டமாகச்சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து சமூகங்களை இணைத்து அரசியல் நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாய சூழலும் காணப்படுகின்றது. அதே வேளை வெளிநாட்டு உறவுகளை தந்திரோபாயமாக முன்நகர்த்த வேண்டியுள்ளது.  இந்தியா, சீனா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான சிறந்த தந்திரோபாயங்களை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த அத்தனை விடயங்களும்; நிலையான அரசியல் சூழலை உருவாக்குவதனூடாக பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்கும் நோக்கம் கொண்டன.