Showing posts with label North srilankan media. Show all posts
Showing posts with label North srilankan media. Show all posts

Saturday, 8 February 2025

சுதந்திரதின உரை : பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை


 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை, ஒரு புறம் நாட்டின் நீண்ட அடிமைப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தது, அதில் நாடடின் வீழ்ச்சியும் அதனிலிருந்து எழவேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின்  எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தபோதும், அந்தக்கனவு தேசத்தை மக்கள்முன்வைக்க ஜனாதிபதி தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.  இந்த உரையில் வெளிப்பட்ட தூரப்பார்வை, அதன் அரசியல் உள்நோக்கங்கள், மற்றும் சமூக, பொருளாதார உண்மைகளுடன் கூடிய பிணைப்பு ஆகியவை சார்ந்து சிந்திக்கத்தூண்டுகிறது.

Wednesday, 25 December 2024

‘பட்டம்’ , ‘பட்டம்’ பறக்குது பார்…

Dr. Thevanayagam Thevananth

2024 டிசம்பர் நடுப்பகுதியில் இலங்கை அரசியலில் சலசலப்புக்கு குறைவில்லை எனலாம். அதில் மூன்று சொற்பதங்கள (Jargons) முக்கியம் பெற்றன. அவை சேர் ( ‘Sir’ );  கௌரவத்திற்குரிய (‘Honorable’)   கலாநிதி (‘Doctorate’) இவை ஆங்கிலேயரிடமிருந்து எமக்கு கிடைத்த பொக்கிசங்கள் என்றால் மிகையாகாது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த அடிமைக் கல்வியைப் பின்பற்றுவதன் விளைவுகள். ஏங்கள் தலைகளில் குந்தியுள்ள அடிமை மனப்பாங்கின் பிரதிபலிப்புக்கள் . இவை முறைமை மாற்றத்திற்கு தடையாக உள்ள சிந்தனைகள் எனலாம். இதிலிருந்து விடுபடுவதான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு அடிநிலை மட்டத்திலும் ஏற்படுத்தப்படும் போது தான் நாம் பொருளாதார நிலையில் முன்னேற முடியும். ஆப்போது தான் நாம் எமக்கான பாதையை கண்டுபிடிக்க முடியும். 

Sunday, 6 November 2016

காலைக்கதிர் பத்திரிகை இதழியல் பரப்பிற்கு புதிய வீச்சைக் கொடுக்கட்டும்.


இலங்கைத் தமிழ் இதழியல் வரலாறு தேசியப்பத்திரிகைகளில் மையம் கொண்டிருந்த காலம் மாற்றமடைந்து பிராந்தியப்பத்திரிகைகளில் மையம் கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. அதில் யாழ்ப்பாணம்  மையப்புள்ளி எனலாம். இந்த மைய நீரோட்டத்தில் ‘காலைக்கதிர்’ என்ற புதிய தினப்பத்திரிகையும் வந்து கலப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம்.