Dr.தேவநாயகம் தேவானந்த்
இலங்கை வடபகுதியில் கடந்த வாரம் முழுவதும் பிரதேசசெயலர் ரீதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் வெறும் தனிப்பட்ட வசைபாடல்களாகவே நிறைவுற்றிருக்கின்றன. அரசியல்தீர்விற்கு முன்னர் அபிவிருத்தியிலேயே தாம் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகச் சொல்கின்ற அரசாங்கம் தனது அபிவிருத்திக்கான தெளிவான திட்டங்களை அறிவிக்கவில்லை. அதிலும் என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் மக்களுக்கு அபிவிருத்திசெய்யவதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் எம்மை தெரிவு செய்தார்கள் என்று மார்தட்டுவதையும் காணமுடிகிறது. அபிவிருத்திபற்றி பேசும் போது நிலைத்த அபிவிருத்தி பற்றிச்சிநதித்தாக வேண்டும். அதில் நிலையான இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடும் ஒருங்கிணைப்பும் முக்கியமானதாகும். அதற்கான முயற்சிகளும் சமாந்தரமாக எடுக்கப்படுகின்ற போதுததான் நிலைத்த அபிவிருத்தி சாத்தியமாகும்.