Showing posts with label Thinakural. Show all posts
Showing posts with label Thinakural. Show all posts

Friday, 23 May 2025

நிலைத்த அபிவிருத்திக்கு அரசியல் தைரியம் வேண்டும்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை வடபகுதியில் கடந்த வாரம் முழுவதும் பிரதேசசெயலர் ரீதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் வெறும் தனிப்பட்ட வசைபாடல்களாகவே நிறைவுற்றிருக்கின்றன. அரசியல்தீர்விற்கு முன்னர் அபிவிருத்தியிலேயே தாம் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகச் சொல்கின்ற அரசாங்கம் தனது அபிவிருத்திக்கான தெளிவான திட்டங்களை அறிவிக்கவில்லை. அதிலும் என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் மக்களுக்கு அபிவிருத்திசெய்யவதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் எம்மை தெரிவு செய்தார்கள் என்று மார்தட்டுவதையும் காணமுடிகிறது. அபிவிருத்திபற்றி பேசும் போது நிலைத்த அபிவிருத்தி பற்றிச்சிநதித்தாக வேண்டும். அதில் நிலையான இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடும் ஒருங்கிணைப்பும் முக்கியமானதாகும். அதற்கான முயற்சிகளும் சமாந்தரமாக எடுக்கப்படுகின்ற போதுததான் நிலைத்த அபிவிருத்தி சாத்தியமாகும்.  

Saturday, 8 February 2025

சுதந்திரதின உரை : பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை


 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை, ஒரு புறம் நாட்டின் நீண்ட அடிமைப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தது, அதில் நாடடின் வீழ்ச்சியும் அதனிலிருந்து எழவேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின்  எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தபோதும், அந்தக்கனவு தேசத்தை மக்கள்முன்வைக்க ஜனாதிபதி தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.  இந்த உரையில் வெளிப்பட்ட தூரப்பார்வை, அதன் அரசியல் உள்நோக்கங்கள், மற்றும் சமூக, பொருளாதார உண்மைகளுடன் கூடிய பிணைப்பு ஆகியவை சார்ந்து சிந்திக்கத்தூண்டுகிறது.