Showing posts with label Basharan. Show all posts
Showing posts with label Basharan. Show all posts

Tuesday, 2 June 2026

கண்ணுக்குப்புலனாகா சமூகப் போராளி அமரர் ச. பாஸ்கரன்

கலாநிதி தே.தேவானந்த்

நாடகக் கலைஞரும் ஆயுள் வேத வைத்தியருமான . பாஸ்கரன் அவர்கள் 28 மே 2026 அன்று லண்டனில் காலமானார். அமைதியான சுபாவம், தமிழர் விடுதலையின் மீதான ஆழ்ந்த பற்றுறுதி, நாடகக் கலையின் மீதான அளப்பரிய ஈடுபாடு, சமூகச் சிந்தனை ஆகிய உயரிய பண்புகளைக் கொண்டவர் அவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்ததுடன், சிறந்த தொடர்பாடல் திறனும் மனிதநேயப் பண்பும் கொண்டவராக அறியப்பட்டார். உறவுகளைப் பேணுவதிலும் மனிதர்களை இணைத்துச் செயற்படுத்துவதிலும் தனித்திறன் மிக்கவராக விளங்கினார். சிறந்த சாரணர், சாரணப்பண்பாட்டின் வழி வந்தர்.