Showing posts with label Jaffna Hindu Primary School. Show all posts
Showing posts with label Jaffna Hindu Primary School. Show all posts

Wednesday, 1 February 2017

“இரும்பு மனிசர்”



தொடர்ச்சியாக நாலு நாள் லீவு எண்டு போட்டு பேரப்பிள்ளைகள் நாண்டு கொண்டு நின்றுதுகள் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்துக்குப் போக வேணுமென்று அதில ஒரு நாள் கீரிமலை மாவிட்டபுரம் என்று ஒரு சுத்துச் சுத்தினவை. என்னையும் வரச்சொல்லி நிண்டாப்போல போகவேண்டியதாப் போச்சு. கிழடுகட்டைகள் என்றால் கோயில் குளம் போற காலமென்று தான் எல்லாற்ற நினைப்பும்.பிள்ளை பேரப்பிள்ளை எல்லாம் அப்பிடித் தான் நினைக்கினம். முதல் நாள் காங்கேசன்துறையில உந்த ஆமிக்காரன் கட்டி ஓகோவென்று நடத்துற தெல்செவினவோ என்னவோ என்று பெயர்வைச்சிருக்கிற ஹொட்டேலுக்கு போனவையள். அப்ப இந்தக் கிழடுகளைக் கூப்பிடக் கூடாதென்று விட்டிட்டு போயிட்டாங்கள். அது உந்த இளசுகள் கூடிக்குலாவிற இடமெல்லே அது கிழடுகளுக்கு ஒத்துவராது தானே.


Friday, 5 July 2013

‘மனித உன்னதம்’


நல்ல ஆசிரியர் ஒருவரால் நல்ல சமூகம் உருவாக்கப்படுகிறது. ஆசிரியர் சமூகத்தை வழிப்படுத்தி நல்லதொரு சமூகத்தை உருவாக்கும் பணியைச் செய்பவர்களில் அதிபர்கள் முக்கியமானவர்கள்.
சிறந்த அதிபரை கடலில் பணயிக்கின்ற கப்பலின் கப்ரனுக்கு ஒப்பிடுவார்கள்.; மிக குறுகிய காலத்தில் முடிந்து விடுகின்ற கப்பல் பணயத்தில் கப்பலை வழிநடத்துகின்ற கப்ரன் தன்னை எப்போதும் ‘விழிப்பு’ நிலையில் வைத்து கொண்டு தனது பல்திறனாலும்,  ஆற்றலாலும் பாதுகாப்பாக பயணிகளை கரை சேர்ப்பான்.