Showing posts with label Thevananth/tamil kavithal/Jaffna/tamil poiem. Show all posts
Showing posts with label Thevananth/tamil kavithal/Jaffna/tamil poiem. Show all posts

Monday, 9 January 2023

தங்கத் தட்டில் வைத்து எனக்கு தலைமைப்பதவி தரப்படவில்லை ‘ஜெ


தேவநாயகம் தேவானந்த்

தமிழ்நாட்டு திராவிட அரசியல் நீரோட்டத்தில் புதிய கிளை நதியை உருவாக்கியர் எம.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அதே போல ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர். ஏம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பன்னர் அவரது வாரிசான nயைலலிதா புரட்சித் தலைவி என்று அழைக்கப்பட்டார். இருவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். இருவரும் முதல்வராக இரக்கும் போதே உயிர் நீத்தார்கள். இருவரும் அப்பலோ மருத்துவமனையில் அனுமகிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்கள். ஜெயலலிதா 75 நாட்கள் அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமையை நவீன அறிவியல் படு கொலை என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

Wednesday, 1 February 2017

“இரும்பு மனிசர்”



தொடர்ச்சியாக நாலு நாள் லீவு எண்டு போட்டு பேரப்பிள்ளைகள் நாண்டு கொண்டு நின்றுதுகள் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்துக்குப் போக வேணுமென்று அதில ஒரு நாள் கீரிமலை மாவிட்டபுரம் என்று ஒரு சுத்துச் சுத்தினவை. என்னையும் வரச்சொல்லி நிண்டாப்போல போகவேண்டியதாப் போச்சு. கிழடுகட்டைகள் என்றால் கோயில் குளம் போற காலமென்று தான் எல்லாற்ற நினைப்பும்.பிள்ளை பேரப்பிள்ளை எல்லாம் அப்பிடித் தான் நினைக்கினம். முதல் நாள் காங்கேசன்துறையில உந்த ஆமிக்காரன் கட்டி ஓகோவென்று நடத்துற தெல்செவினவோ என்னவோ என்று பெயர்வைச்சிருக்கிற ஹொட்டேலுக்கு போனவையள். அப்ப இந்தக் கிழடுகளைக் கூப்பிடக் கூடாதென்று விட்டிட்டு போயிட்டாங்கள். அது உந்த இளசுகள் கூடிக்குலாவிற இடமெல்லே அது கிழடுகளுக்கு ஒத்துவராது தானே.


Monday, 26 September 2016

Reigniting theatrical interest in Jaffna’s younger generations

This article was published  in Daily FT web site on 23 August 2014 


By Thulasi Muttulingam
An eight day festival of drama and theatre, specifically targeting children (but also catering to adults), recently came to an end in Jaffna.
Timed to coincide with the Nallur Festival currently ongoing, when people are in a relaxed, entertainment seeking mood as they wend their way along the roads leading out of  the temple after their evening prayers, the festival occurred in a by-lane adjoining the temple precincts from 12-20 August.

Tuesday, 10 April 2012

தமிழ் தேசியம்


தமிழ் தேசியம்

தமிழ் தேசியம் வியாபாரி கையில்
வேசிவீட்டு வெத்திலத்தட்டமாய் வீதியில் கிடக்கிறது
வருவோன் போவோனெல்லாம் பாக்கு, சுண்ணாம்பு தடவி 
வெற்றிலை மடித்து வாயில் போட்டு மென்று துப்பினர்
சொலக்கென வீதியில் எச்சிலை
துப்பியது எச்சில் தான் ஆனால் ரெத்த நிறத்தில் கிடந்தது
மீடியாவொன்று தலைப்பிட்டது
வேசி பெற்ற பிள்ளையொன்று பற்றைக்குள் கிடந்ததென்று
சொல்லியழ கண்ணீரும் இல்லை, போத்தலில் அடைத்து  கூவி விக்கிறார்
‘ஆண்ட பரம்பரை அடிமையாய் கிடப்பதா’!!


கரண்ட் பிரச்னை



தலைக்கு மேலே காற்றாடி
அதன் அடிமையாய்
சியஸ்ரா மெத்தையில் என் சரீரம்
இப்போதெல்லாம் சாமத்தில் கண்முழிப்பேன்
வேர்வை சகதியில்
காற்றாடி நின்றிருக்கும்
பக்கத்தில் கிடந்த குழந்தையும்
எரிச்சலில் முணு முணுக்கும்
யன்னலைத் திறந்தால் காற்று வரும்
நித்திரை வராது
நாய் அடிக்கடி குரைக்கும்
என்னடா இது என்றாள் மனைவி
எல்லாம் ‘கரண்ட’; பிரச்னை
தீர்ப்பார் ராஐபக்சே? என்றேன்.






காப்பற் றோட்டு

வீடு இடிச்சு வளவு பறிச்சு
இடுப்பெலும்பை விலத்தி
வயித்துப்பிழைப்பை கெடுத்து
வீதி அகலிப்பு
மெகா அபிவிருத்தி
என்ர சைக்கிள் தடியை ஓட முடியாதாம்
காபற் போட்டதாம்
காசும்  கேட்கிறார்

 தே.தேவானந்த்

11.04.2012