Showing posts with label Thevananth. Show all posts
Showing posts with label Thevananth. Show all posts

Friday, 23 May 2025

இலங்கையின் பழைய காவலர் கறைபடிந்த மரபுக்குச் சொந்தக்காரன்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரபல ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் தொகுத்து வழங்கிய அல் ஜசீராவின் "ஹெட் டு ஹெட்" நிகழ்ச்சியில் ஒரு உயர்மட்ட நேர்காணலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி யூடியூப்பில் மார்ச் 6 அன்று முதன்முதலில் ஒளிபரப்பரப்பப்பட்டது. இது ரணிலின் அரசியல் வாழ்வை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. அவரது முரண்பட்ட அரசியல் சிந்தாந்த்தை வெளிப்படுத்தி நிற்கிறது. 

நிலைத்த அபிவிருத்திக்கு அரசியல் தைரியம் வேண்டும்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை வடபகுதியில் கடந்த வாரம் முழுவதும் பிரதேசசெயலர் ரீதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் வெறும் தனிப்பட்ட வசைபாடல்களாகவே நிறைவுற்றிருக்கின்றன. அரசியல்தீர்விற்கு முன்னர் அபிவிருத்தியிலேயே தாம் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகச் சொல்கின்ற அரசாங்கம் தனது அபிவிருத்திக்கான தெளிவான திட்டங்களை அறிவிக்கவில்லை. அதிலும் என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் மக்களுக்கு அபிவிருத்திசெய்யவதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் எம்மை தெரிவு செய்தார்கள் என்று மார்தட்டுவதையும் காணமுடிகிறது. அபிவிருத்திபற்றி பேசும் போது நிலைத்த அபிவிருத்தி பற்றிச்சிநதித்தாக வேண்டும். அதில் நிலையான இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடும் ஒருங்கிணைப்பும் முக்கியமானதாகும். அதற்கான முயற்சிகளும் சமாந்தரமாக எடுக்கப்படுகின்ற போதுததான் நிலைத்த அபிவிருத்தி சாத்தியமாகும்.  

Tuesday, 2 January 2024

இலங்கையில் ஊடக சுதந்திரம்’


- ஈழத்தின் மிகப்பெரும் ஊடகப்படுகொலை தினத்தை அடியொற்றிய கருத்துநிலை
(ஈழத்தின் மிகப்பெரிய ஊடகப்படுகொலை தினமாக வர்ணிக்கப்படுகின்ற மே 02 இன் பத்தாவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் முகமாக 02.05.2016 அன்று யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை)

Wednesday, 11 October 2023

சிறுவர்களுக்கான நாடகப் பயிற்சி வகுப்புக்கள்

 

                                                                                          Drama Classes for Children
.....................................................                                                                                                        புதிய பயிற்சிப் பிரிவுகள் ஆரம்பமாகின்றன  இணைந்து கொள்ளலாம்.                                               .                                                                                                     ...................................
சிறுவர்களின் உடல், உள ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைப் பாடத்திட்டத்தைக்  கொண்ட பயிற்சி..                                                         பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் சிறுவர் நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.  அதனோடு வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்கு தோற்றமுடியும். 
பயிற்சி நடைபெறும் நாட்கள் நேரம் : வெள்ளி, சனி, ஞாயிறு
                                                                        மாலை 5.00 மணி - 08 மணி வரை 
வயதெல்லை : 10 - 15
பயிற்சி நடைபெறும் இடம் : 'முற்றம்' ,203/ 5 கச்சேரி நல்லூர் வீதி ( சென்.பெனடிக் பாடசாலை முன்பாக) நல்லூர் யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கான வட்சப் இல, ஈ.மெயில் : 0773112692, jaffnatheatre@gmail.com 

Sunday, 1 January 2023

‘பொன் விளையும் பூமியிலிருந்து வெளியேறு’ என்ற குரல் அடங்கியது.


- சமூகப்பணியாளர் அமரர் எஸ்.பரமநாதன் பற்றிய குறிப்பு

தலைவர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம்
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’   என்று மக்கள் பணி செய்து கிடந்த அமரர் எஸ்.பரமநாதனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தனது பணி ஓய்வுக்காலத்திலும் ஓயாது உழைத்தவர். தமது பக்கபலமான ஒரு தோழனைஇ சக பணியாளனை இழந்த துயரில் சமூகப்பணியாளர்கள் பலரும் உள்ளார்கள்.அவர்களோடு நாமும் துயருகி;றோம். வையத்துள் வாழ்ந்தவர்களில் சிலரே அவர்களின் இறப்பின் பின்னரும் போற்றப்படுகிறார்கள். தாமும்இ தமது குடும்பமும் என்று சிவனே என்று கிடக்கின்ற இன்றைய எமது சூழலில் அமரர் பரமநாதன் மகத்தானவர், போற்றப்பட வேண்டியவர்.

Saturday, 23 May 2020

Jaffna play slates 'philosophy of submission'

Jaffna play slates 'philosophy of submission' 

Jaffna play slates 'philosophy of submission'

[TamilNet, Sunday, 25 March 2001, 17:11 GMT]
drama_1_250301.jpg"The philosophy of compromise and submission is being forced upon us. The spectre of fear surrounds us, preventing us from speaking about the suffering in our land. We are frozen by fear. As a consequence, we have buried many things deep in our heart. .

We are compelled to wear different masks imposed on us by the outsider and are compelled from moment to moment to change our personalities" said Mr. T. Thevananth, reading out the proclamation of the play Uyir Visai (Life Force) that was staged at the Kailasapthy Hall in the Jaffna University Sunday. Jaffna University students who organised the performance said that the proceeds from the play will go for the education of the children whose parents were arrested by the Sri Lanka army in 1996-97 and were reported missing

Uyir Visai was staged at 10.30 a.m. in the morning and 3.30 p.m. in the afternoon Sunday. The play depicted death and human suffering in Jaffna in the context of the Sri Lanka army's activities in the northern peninsula.

"Let us live! Uyir Visai loudly calls on those who destroyed our lives" "We want our land", said the play's proclamation.

The play is a continuation and development of the theme of Akkinip Perumoochchu (The Sigh of fire), directed by Thevananth and staged eleven times in many parts of Jaffna.

Akkinip Perumoochchu was written and produced from the experiences the Jaffna University students involved in the play had gathered from the families of the Tamil men and women who were arrested by the Sri Lanka army in the peninsula in 96-97 and were reported missing since then, believed to have been murdered by the military and buried in Chemmani.

Letters sent by the SLA to the kith and kin of the missing, claiming ignorance or assuring investigation were projected in the background during the performance of Akkinip Perumoochchu.

The play is not merely entertainment but a continuing catalyst and clarion call for action, the student producers told Tamilnet.

drama_2_250301.jpg
A scene from play.

 

Friday, 14 September 2018

தென்றல் என்னைத் தொட்டதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்.


தமிழ் தலைவன் மு.கருணாநிதி -04

கருணாநிதியின் அரியல் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியதில் சிவாஜி கணேசன் முதல் முதல் நடித்;து வெளிவந்த பராசக்திப் படம் முக்கியமானது. ஆதற்கு கருணாநிதியே வசனம் எழுதியிருந்தார். ஆதில் வரும் நீதிமன்றக்காட்சியினல் சிவாஜி கணேசன் மிக அற்புதமாக சமூகநீதிக்கருத்துக்களை கருணாநிதியின் வசனத்தில் அசத்துவார். அதில் ஒரு வசனம் தான் ‘தென்றல் என்னைத் தொட்டதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்.’ என்பது.
கருணாநிதியின் வாழ்வில் தென்றல் வீசுகிறது. அவரது ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்று அவரது தோழனும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அப்போதைய பொருளாளருமான எம்.ஜி.ஆர் போர்கொடி தூக்கினார். ஏம்.ஜி.ஆர் என்ற அந்த நெருப்பைத் தாண்டுவதற்கு கருணாநிதி படாதபாடுபட்டார். இருந்தாலும் கட்சியைக் காத்து தீயைத் தாண்டி வந்திருக்கிறார்.

Sunday, 31 December 2017

இணையத்தைப் பலப்படுத்துவோம்


அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் தனது 27 ஆண்டை நிறைவு செய்து தனது பயணத்தை  தொடர்கிறது.பலர் இணைந்து கால் நூறாண்டு மேலாக பயணிப்பதென்பது மிகக்கடினமான பணி;. இது இன்று வரை சாத்தியப்பட்டிருப்பது தான் இந்த அமைப்பின் பலம். இந்தப்பலத்திலிருந்து எமது பயணத்தை நாம் மேலும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
மக்களுக்கான சேவையை வழங்குவற்கு நிறுவனங்களை பலப்படுத்துவதோடு ஒன்றிணைந்து செயற்படுவதென்பது மிகக்கடினமான செயல். இது சாத்தியமாகியிருப்பது சாதனையன்றி வேறென்ன!.

Wednesday, 1 February 2017

முதுகெலும்பில்லாத செயலாளர் -03


விடியக்காத்தால கண்ணமுழிச்சு கட்டிலால எழும்ப கேற்றடியில் “அப்புச்சி….அப்புச்சி “ என்று கூப்பிட்டுக் கொண்டு சொந்தக்காரர் ஒருத்தர் வாசல்ல வந்து நின்றார். அவசரமா வந்த சலத்தையும் அடக்கிக்கொண்டு ஓடிப்போய் கேற்றத் திறக்க “அப்புச்சி நீ உலகம் தெரிஞ்சனி உரெல்லாம் நியாயங்கள் பிளக்கிறாய். இஞ்ச சொந்தத்துக்க நடக்கிற பிடுங்குப்பாடுகள் ஒன்றும் உனக்குத் தெரியாது…”என்று கேற்றத்திறந்து உள்ளுக்க வராதுக்கு முன்னமே அந்தாள் குழறத்தொடங்கிட்டு.

ஜெயலலிதாவைப் பற்றி வாசகர்களுக்கு முழுமையாக அறியத்தந்துள்ளார்

 க.அருள்நேசன்,குருநகர்

பலர் ஒரு சில துறைகளில் சிறந்து விளங்குவர். ஒரு சிலர் பல துறைகளில் சிறந்து விளங்குவர். இதில் இரண்டாவது நிலையிலேயே தே.தேவானந் அவர்களை ஒப்பிடலாம். காரணம் தேவானந் அவர்கள் நாடகம, ஊடகம்; மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பதை நான் இதுவரை அறிந்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உதயன் பத்திரிகையில் எழுத ஆரம்பித்த பிற்பாடே அறிந்துகொண்டேன்.

Saturday, 21 January 2017

உத்தம வில்லன்


விடிகாலை சலப்பை முட்டி அடிவயிற்றில உதைக்க கண்முழிச்சன். இன்னும் சூரிய வெளிச்சம் முழுசா வரேல்ல. எழும்பி பாத்ரூமுக்க போய் சிரம பரிகாரம் செய்து போட்டு தண்ணியை அடிக்க பிளாஸை பிடிச்சு அமர்த்தினன். அது உடைஞ்சு கையோட வந்திட்டிது. இனி என்ன செய்யிறதெண்டு வாளியில தண்ணியப்பிடிச்சு அள்ளி ஊத்த வேண்டியதாப் போச்சு. இன்றைக்கு உவன் பிளம்பருக்கு பின்னால திரியிற வேலையொன்று வந்து போச்சு.

Friday, 6 January 2017

' தமிழக மக்கள் தான் தமது சொத்து என்றவர் முதல்வர்” ' ஜெ'



தமிழ்நாட்டு அரசியல் மூன்று முதலமைச்சர்களை தனது பதவிக்காலத்தில் இழந்திருக்கிறது. பேரறிஞர் இண்ணாத்துரை, மக்கள் திலகம் எம்.ஸி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலிதா. இதில் இரண்டு தலைவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழத்தைச சார்ந்தவர்கள். ஆட்சியில் இருக்கும் போது சாவடைவதென்பது அந்த மக்களின் துயரங்களின் எல்லையில்லாத் தன்மையையும் கொடுப்பதோடு ஆட்சி ஆட்டம் காணுவதும் கட்சிகள் பிளவு படுவதும் நடைபெறுகின்ற. எம்.ஜி.ஆர் இறந்தபோது அ.தி.மு ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரவேண்டியிருந்தது.

Sunday, 6 November 2016

காலைக்கதிர் பத்திரிகை இதழியல் பரப்பிற்கு புதிய வீச்சைக் கொடுக்கட்டும்.


இலங்கைத் தமிழ் இதழியல் வரலாறு தேசியப்பத்திரிகைகளில் மையம் கொண்டிருந்த காலம் மாற்றமடைந்து பிராந்தியப்பத்திரிகைகளில் மையம் கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. அதில் யாழ்ப்பாணம்  மையப்புள்ளி எனலாம். இந்த மைய நீரோட்டத்தில் ‘காலைக்கதிர்’ என்ற புதிய தினப்பத்திரிகையும் வந்து கலப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். 

Monday, 26 September 2016

Reigniting theatrical interest in Jaffna’s younger generations

This article was published  in Daily FT web site on 23 August 2014 


By Thulasi Muttulingam
An eight day festival of drama and theatre, specifically targeting children (but also catering to adults), recently came to an end in Jaffna.
Timed to coincide with the Nallur Festival currently ongoing, when people are in a relaxed, entertainment seeking mood as they wend their way along the roads leading out of  the temple after their evening prayers, the festival occurred in a by-lane adjoining the temple precincts from 12-20 August.

Nallur Festival of Theatre Reviving drama and theatre in the peninsula



Published in DailyFT website on 10 September 2016
 23  88

untitled-2

Monday, 16 September 2013

இளையோர் நாடக விழா -2013


ஈழத்து நாடக வரலாறு புதிய பண்டநுகர்வுக் பண்பாட்டுக்குள் தன்னை புதிப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறது போலும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கான ஏது நிலை மேலும் வளர்ச்சியடைய வேண்டிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் நாடகம் என்ற பலர் இணைந்து பணிசெய்கின்ற கலையைப் பொறுத்தமட்டில் படைப்பு கருக்கொண்டு பிரசவித்தல் வரையில் தடைகள் ஏராளம். இதனால் படைப்பு தறுக்கணித்துவிடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இலக்கியப்படைப்பாளி தன் கதையையோ, கட்டுரையையோ, கவிதையையோ தான்விரும்பிய படி எல்லை கடந்து பயணித்து படைக்க முடியும் அவற்றை இன்றைய தகவல் தொழிலநுட்பப் உலகில் பிரசுரிக்கவும் வாய்ப்புக்கள் ஏராளம்.