Dr.தேவநயாகம் தேவானந்த்
கடந்த சில மாதங்களின் இரண்டு நாடபளுமன்றங்களில் நடந்த சம்பவங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன.
கடந்த ஒக்ரோபர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் பிரித்தானிய மன்னர் சார்ல்ள்ஸ் அவரே அவுஸ்ரேலியாவின் குடியரசு தலைவராக தற்போதும் இருக்கிறார். அவுஸ்திரேலிய விஜயத்தின் இரண்டாவது நாளன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் 'நீங்கள் எனது மன்னரில்லை' என கோசம்எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டுள்ளார். ஆனால் அவரை பாதுகாப்பு ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் இல்லை என தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ள செனெட்டர் மன்னர் சார்ல்சிற்கு தெளிவான செய்தியை தான் தெரிவிக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவராக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த நிலத்தவராகயிருக்கவேண்டும். மன்னர் இந்த நாட்டவர் இல்லை . சார்ல்ஸின் மூதாதையர்களே இனப்படுகொலையில் ஈடுபட்டனர். பாரிய படுகொலைகளில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சப்பவத்தின் பின்னர் குடியரசு குறித்த விவாதங்கள் அவுஸ்திரேலியாவில் தீவிரமடைந்துள்ளன. இதிலும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போது செனட்டர் தனது பழங்குடிகளின் தோலாலான பாரம்பரிய உடையணிந்திருந்தார். இது பாராளுமன்ற உடைப்பாரம்பரியத்திற்கு மாறானதாக இருந்தது.
