Showing posts with label Sri Lankan Tamil Politics. Show all posts
Showing posts with label Sri Lankan Tamil Politics. Show all posts

Saturday, 11 January 2025

மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்


Dr. தேவநாயகம் தேவானந்த்

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 25-ஆவது நினைவுப்பேருரையில், "மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்ந்தது. இந்த உரைத் தலைப்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் தமிழரசியல் சூழ்நிலைகளில் உருவாகியுள்ள மாற்றங்களை ஆழமாக ஆய்வு செய்யும் தேவையை முன்வைத்தது. ஆனால் உரையென்னமோ ’அரைத்தமாவை அரைப்பதாகவே’ காணப்பட்டது. இது தற்போது காணப்படும் புலமைத்துவ பின்னடைவை(Intellectual Bankruptcy) சுட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு பல்கலைக்கழக கல்விப்புலம்சார்ந்த ஒருவர் ஒரு மக்கள் தலைவனாகக் கருதப்பட்ட ஒருவரின் நினைவுப்பேருரையை புலமைத்துவ அடைவுளோடு முன்வைத்திருக்க வேண்டும். மாறாக  கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்ற கோதாவில் அந்தக்கட்சியின் கருத்துநிலையையே தனது நிலைப்பாடாகச் சொல்வதென்பது அவரது வங்குரோத்து நிலையையே சுட்டுகிறது என்லாம். சரி அது நிற்க, 

Saturday, 28 December 2024

பெருவெற்றி யாருக்கு ?

( Yarl Thinakural Article 29th Dec, 2024)


Dr. தேவநாயகம் தோனந்த்

அண்மைக் காலங்களின் இந்தியாவின் அயலுறவு கொள்கை ஒரு பதட்டமான நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியாவின் அயல்நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் அதன் விளைவாக அந்த நாடுகள் சீனாவின் பக்கம் நகரும் தோற்றப்பாடுகள் போன்ற நிலைமைகளால் இந்திய வெளியுறவுக் கொள்கை பதட்டத்தில் காணப்படுகிறது எனலாம். 

பொதுவாக இந்தியாவின் அயல்நாடுகளில் ஆட்சியமைப்பவர்கள் தமது முதல் வெளிநாட்டுப்பயணத்தை இந்தியாவிற்கு சென்று ஆரம்பிப்பது வழமை. இது அயலில் உள்ள பெரியண்ணையைப் ( Big Brother ) பார்க்காது போவது தவறாகிவிடும் என்ற பய உணர்வு சார்ந்தது என்ற விமர்சனங்களையும் மறுப்பதற்கில்லை. 

Wednesday, 25 December 2024

‘பட்டம்’ , ‘பட்டம்’ பறக்குது பார்…

Dr. Thevanayagam Thevananth

2024 டிசம்பர் நடுப்பகுதியில் இலங்கை அரசியலில் சலசலப்புக்கு குறைவில்லை எனலாம். அதில் மூன்று சொற்பதங்கள (Jargons) முக்கியம் பெற்றன. அவை சேர் ( ‘Sir’ );  கௌரவத்திற்குரிய (‘Honorable’)   கலாநிதி (‘Doctorate’) இவை ஆங்கிலேயரிடமிருந்து எமக்கு கிடைத்த பொக்கிசங்கள் என்றால் மிகையாகாது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த அடிமைக் கல்வியைப் பின்பற்றுவதன் விளைவுகள். ஏங்கள் தலைகளில் குந்தியுள்ள அடிமை மனப்பாங்கின் பிரதிபலிப்புக்கள் . இவை முறைமை மாற்றத்திற்கு தடையாக உள்ள சிந்தனைகள் எனலாம். இதிலிருந்து விடுபடுவதான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு அடிநிலை மட்டத்திலும் ஏற்படுத்தப்படும் போது தான் நாம் பொருளாதார நிலையில் முன்னேற முடியும். ஆப்போது தான் நாம் எமக்கான பாதையை கண்டுபிடிக்க முடியும். 

Sunday, 15 December 2024

இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் இல்லை !!???

 Dr.தேவநயாகம் தேவானந்த்


கடந்த சில மாதங்களின் இரண்டு நாடபளுமன்றங்களில் நடந்த சம்பவங்கள்  உலகின் கவனத்தை ஈர்த்தன. 

கடந்த ஒக்ரோபர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்  பிரித்தானிய மன்னர் சார்ல்ள்ஸ் அவரே அவுஸ்ரேலியாவின் குடியரசு தலைவராக  தற்போதும் இருக்கிறார்.  அவுஸ்திரேலிய விஜயத்தின் இரண்டாவது நாளன்று  அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சார்ல்ஸ் உரையாற்றிய பின்னர் சுயேட்சை கட்சியின் செனெட்டர் ஒருவர் 'நீங்கள் எனது மன்னரில்லை' என கோசம்எழுப்பியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லிடியா தோர்ப்பே இவ்வாறு சத்தமிட்டுள்ளார். ஆனால் அவரை பாதுகாப்பு ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். 

அவுஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளை பிரிட்டன் இனப்படுகொலைக்கு உட்படுத்தியது என சத்தமிட்ட செனெட்டர் இது உங்களது நிலமில்லை நீங்கள் எங்கள் மன்னரும் இல்லை என தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ள செனெட்டர் மன்னர் சார்ல்சிற்கு தெளிவான செய்தியை தான் தெரிவிக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவராக  இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த நிலத்தவராகயிருக்கவேண்டும். மன்னர் இந்த நாட்டவர் இல்லை . சார்ல்ஸின் மூதாதையர்களே இனப்படுகொலையில் ஈடுபட்டனர். பாரிய படுகொலைகளில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சப்பவத்தின் பின்னர் குடியரசு குறித்த விவாதங்கள் அவுஸ்திரேலியாவில் தீவிரமடைந்துள்ளன. இதிலும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போது செனட்டர் தனது பழங்குடிகளின் தோலாலான பாரம்பரிய உடையணிந்திருந்தார். இது பாராளுமன்ற உடைப்பாரம்பரியத்திற்கு மாறானதாக இருந்தது.