Showing posts with label Kulanthai M.Shanmugalingam. Show all posts
Showing posts with label Kulanthai M.Shanmugalingam. Show all posts

Friday, 17 January 2025

உலகத் தமிழர் போற்றும் நாடக பேராளுமை ‘குழந்தை’

 Kalaikathir 28.01.2025


Dr. தேவநாயகம் தேவானந்த்

யாழப்பாணததின் மையப்பகுதியலில் இருக்கின்ற சிறிய முக்கியமான பகுதி திருநெல்வேலி .இந்தப் பகுதி ஈழத்து நவீன நாடக வரலாற்றில் முக்கியமான பகுதியாக இனம்காணமுடியும். 

திருநெல்வேலியில் அமைந்துள்ள இவரது வீட்டை ஒரு நாடகத்திண்ணையென்று குறிப்பிட விரும்புகின்றேன அதில்; நாடக உரையாடல்கள் தினம் நடந்து வந்தன. குழந்தை ம.சண்மகலிங்கம் தனது 93 வது வயதில் கலமாகியிருக்கிறார.அவர் உலகத் தமிழ் நாடக உலகில் வரலாறாகி நிற்பவர்.தனது நாடக எழுத்துருக்களால் உலகெங்கும் பேசப்படுபவர்.இவரது நாடக எழுத்துருக்கள் இன்றும் இலங்கையின் பல பாகங்களிலும் உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் மேடையேற்றப்படுகின்றன.இந்த உயர்ந்த கலைஞரை குழந்தை மாஸ்ரர் என்று அன்பாய் அழைப்பது வழமை.இந்தக் குழந்தை தமிழ் நாடகத்திண்ணையின் பேறு என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.