Showing posts with label Thevanayagam Thevananth. Show all posts
Showing posts with label Thevanayagam Thevananth. Show all posts

Friday, 17 January 2025

உலகத் தமிழர் போற்றும் நாடக பேராளுமை ‘குழந்தை’

 Kalaikathir 28.01.2025


Dr. தேவநாயகம் தேவானந்த்

யாழப்பாணததின் மையப்பகுதியலில் இருக்கின்ற சிறிய முக்கியமான பகுதி திருநெல்வேலி .இந்தப் பகுதி ஈழத்து நவீன நாடக வரலாற்றில் முக்கியமான பகுதியாக இனம்காணமுடியும். 

திருநெல்வேலியில் அமைந்துள்ள இவரது வீட்டை ஒரு நாடகத்திண்ணையென்று குறிப்பிட விரும்புகின்றேன அதில்; நாடக உரையாடல்கள் தினம் நடந்து வந்தன. குழந்தை ம.சண்மகலிங்கம் தனது 93 வது வயதில் கலமாகியிருக்கிறார.அவர் உலகத் தமிழ் நாடக உலகில் வரலாறாகி நிற்பவர்.தனது நாடக எழுத்துருக்களால் உலகெங்கும் பேசப்படுபவர்.இவரது நாடக எழுத்துருக்கள் இன்றும் இலங்கையின் பல பாகங்களிலும் உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் மேடையேற்றப்படுகின்றன.இந்த உயர்ந்த கலைஞரை குழந்தை மாஸ்ரர் என்று அன்பாய் அழைப்பது வழமை.இந்தக் குழந்தை தமிழ் நாடகத்திண்ணையின் பேறு என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.

Sunday, 6 October 2024

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 01


‘நாடகம் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிஜவாழ்க்கையில் நாடகம் இருக்கிறது.’ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இலங்கையின் தற்போதைய நிலைமை காணப்படுகின்றது போலும்.  இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியைத் தோறு;றுவித்ததோடு நாடுமுழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச பதவிவிலகவேண்டியேற்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக பாராளுமன்றில் ஒரே ஒரு உறுப்பினராரைமட்டுமே கொண்ட  ரணில் விக்ரமசிங்க பதவியேற்றர். இதன் பின்னர்,  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்னார். அந்த உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

“நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.” என்று ரணில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

அப்போது பேட்;டோல் பிறெக்டடின் சிங்கள மொழிபெர்ப்பு நாடகமான 'ஹணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருசா (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதான காட்சியை குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க  அதே போன்ற நிலையில் தான் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது பணி "அதை விடவும் ஆபத்தான சவாலாகும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“நான் பொறுப்பேற்றது அபாயகரமான சவால்,  கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. பாலத்தின் கீழே மிகவும் ஆழமானது அடியே தெரியவில்லை. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அதனடியில் கூர்மையான இருப்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலைமையில் குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன். எனது உயிரைப்பணயம் வைத்து சவாலுக்கு முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன்.” என்று தன்னை வெண்கட்டி வட்ட நாடகத்தில் குழந்தையைகாப்பாற்றும் க்ருசா பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆக, இங்கு நாடக நிஜம் அல்லது மேடைநிஜம் வாழ்வியல் நிஜமாகியிருக்கிறது என்பதைக்காணலாம்.  ரணில் விக்கிரமசிங்க தான் பார்த்த ஒரு நாடகத்தின் பாத்திரமொன்றுடன் தன்னை உருவகப்படுத்துகின்றார். அந்தப்பாத்திரம் போன்று குழந்தையைக்காப்பாற் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக நம்புகிறார் போலும். 

Saturday, 14 September 2024

'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்’.


தமிழ் தலைவன் மு.கருணாநிதி – 03


‘'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்'.’ இது  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதியின் முழக்கம்.
கருணாநிதி தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். ஓவ்வொரு போராட்டங்களையும் தனது எழுச்சிமிகு பேச்சாலும் எழுத்தாலும் தொண்டர்களைத் தட்டியெழுப்பி வென்றிருக்கிறார். தனது கடுமையான ஓயாத உழைப்பால் சவால்களை முறியடித்திருக்கிறார். ஆதனால் தான் தன் கல்லறையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்’ என்ற வாசங்களை எழுதச் சொல்லியிருந்தார்.

பிறப்பு ஒரு சம்பவமானாலும் இறப்பு வரலாறாக இருக்க வேண்டும்.


தமிழ்த் தலைவன் மு.கருணாநிதி -02


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின்  மறைவு உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தலைவன் இல்லாத ஒரு நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது எனலாம். தலைவனைத் தேடும் பணியில் அல்லது தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் நிலையில் தமிழ் இனம் இருக்கிறது போலும்.
ஓவ்வொரு தலைவனும் இறக்கும் போது தனக்கு அடுத்தபடியாக தலைவர்களைத் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருப்பது வழமை. கருணாநிதி தனது மறைவுக்கு முன்னரே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை அறிவித்துச் சென்றிருக்கிறார்.

தமிழ் எங்கள் தாலாட்டு மரணம் எங்கள் விளையாட்டு


தமிழ் தலைவன் மு.கருணாநிதி -01

கருணாநிதி காலமானார். காலமாகியும் காலத்துள் வாழும் தலைவர்கள் மிகச்சிலர்.  அவர்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி அவர்களும் ஒருவர் என்பது மிகையல்ல.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ‘தமிழ்தலைவன்’ என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரே தலைவனாக மு.கருணாநிதி அவர்களையே இனங்காணமுடியும்.
கொஞ்சும் தமிழைத் தனது அரசியலின் அத்திவாரமாகவும் தமிழன் வராற்றுப்பொக்கிசங்களான இலங்கியங்களை தூண்களாகவும் நிறுத்தி அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழ் தலைவனாக உலகத் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தில் இருக்கின்ற கருணாதிநி உலகத் தமிழர் வராற்றின் ஒரு பகுதி எனலாம்.

Tuesday, 19 March 2024

புலம்பெயர் உறவுகளிடமிருந்து ஒரு பாராட்டுப் பத்திரம்

                                                                                                     

ஒரு மாலை வேளை (13.02.2022) கைதொலைபேசியில் ஒரு அழைப்பு உள்ளூர் இலக்கத்திலிருந்து வந்தது "சேர்" FATV லண்டன் ஞாயிறு நிகழ்ச்சிக்காக உடன் இணைய வேண்டும் கேட்ட குரல் சுவிசிலிருந்து கேட்ட குரலாயிற்றே என்று எண்ணுவதற்குள் "நாங்கள் நீங்கள் இருக்குமிடம் வருகிறோம் சேர்ந்தே சூமில் இணையலாம் என்றார்கள்."  ஆம் மெய்நிகர் வெளியில் சுவிசிலிருந்து நடித்த அவந்திகா அவர் குடும்பத்தினரை மெய்வெளியில் கண்டது மகிழ்ச்சி பாட்டி நாடகத்தில் சுவிசலண்ட், டென்மார், பெல்ஐியம் யேமன் நாடுகளின் சிறார்கள் ஒன்றாக சேர்ந்து அனுப்பிய பாராட்டு பட்டயத்தையும் தந்தார்கள் கொரோனா வருமோ என்றிருக்க இப்படி பாராட்டுப் பத்திரங்கள் நாடுகள் கடந்து வருவது மகிழ்ச்சி, நன்றி சிறார்கள் அவர்தம் பெற்றோருக்கு உரித்தாகட்டும்


Tuesday, 14 June 2022

போரில் சிக்கிய பெண்ணின் கதைபேசும் “பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்”


போர் எமக்குப் பாதுகாப்பாக இருந்த பலவற்றை அழித்தொழித்துச் சென்றுவிட்டது. எமது சூழல், உறவுகள், கட்டமைப்புக்கள் அனைத்தும் மீள் உருவாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. எமது பலமென்று நாம் சொல்லிவந்த “குடும்ப நிறுவனம்” சிதைவடைந்து உருமாறிக் கிடக்கிறது. வீட்டு மண்டபங்களில் வெள்ளை – கறுப்பு நிறங்களில் தொங்கிக் கிடந்த குடும்பப் படத்தை பார்க்கின்றபோதெல்லாம் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய குடும்பப் படத்தை இனி எவ்வாறு எடுப்பேன் என்று ஏங்கியபடி வீட்டுக்குள் கிடக்கும் பெரியவர்களின் துடிப்பு இருபது வருடப் போர் தந்த சீரழிவைச் சுட்டி நிற்கின்றன.

Tuesday, 17 May 2022

இணையவழி கருத்தாடல் களம் : ‘ரணில் விக்கிரமசிங்க இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பாரா?’


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலையை தோற்றுவித்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.   மக்கள் தமது விரக்தியை வன்முறையாகவும் வெளிப்படுத்தத் தலைப்படுகிறார்கள் போலும். ஒரு ஸ்திரமான அரசாங்த்தை கொண்டிருந்த கட்சியிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாறுமளவிற்கு பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக வலுப்பெற்று நீண்டு செல்கிறது. இந்தச்சூழலில் தனியொருவராக தனது கட்சியைப்பிரதிநிதித்துவப்படுத்தும் ரணில் விங்கிரமசிங்க நாட்டைமீட்டெடுக்க துணிந்து பிரதமர்பதவியைப் பொறுப்பெடுத்திருக்கிறார்.

 பாராளுமன்ற அரசியல், மக்கள் கொந்தளிப்பு, பொருளாதார மீட்டெடுப்பு என்ற பல விடயங்கள் தனிமனிதனை மையப்படுத்தியே நகர்வது போன்றதான நிலைப்பாடு காணப்படுவதான சு}ழலில் மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள். இந்தச்சூழலில் விழிப்பூட்டும் நோக்கம் கொண்டு இந்த கருத்தாடல் களம் இணையவழி ஒழுங்குபடுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் மற்றும் யாழ்ப்பாண விஞ:ஞர்னச் சங்கம் (பிரிவு டி) இணைந்து இந்தக்கருத்தாடல் களத்தை ஒழுங்குசெய்துள்ளனர்.

Monday, 16 May 2022

ஆய்வு மகாநாடும் ஆய்வுநூல் வெளியீடும்

 


யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் சமூகவிஞ்ஞானப்பிரிவு நடத்துகின்ற ஆய்வரங்கத் தொடரின் ஏழாவது அமர்வு எதிர்வரும் 19.05.2022 அன்று மாலை 7.00 மணிக்கு இணையவழி நடைபெறவுள்ளது. இதற்கான வளவாளராக தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் மற்றும் இதழியல்துறை பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்கள் வழிவநத்துகின்றார். இந்த அமர்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கு கொள்கிறார்கள். இந்தத் தொடரின் நிறைவாக இலங்கை தமிழர் வாழ்வியல் சார்ந்த 15 தலைப்புக்களின் பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்களின் வழிகாட்டலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை  ஆய்வுமகாநாட்டில் சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்த ஆய்வு மாகாநாடு ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளது. அதில் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வு நூல் வெளியிடப்படும்.அந்த ஆய்வரங்குகளை யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் சமூக விஞ:ஞானப்பிரிவு தலைவர் தேவநாயகம் தேவானந்த் ஒருங்கிணைக்கிறார்.

Thursday, 14 April 2022

நாடகர் நினைவோடை -01


 இ.தே.தே


நாடகர் ஒருவரது முப்பது வருடகால நாடகத்துறை அனுபவங்களை பதிவிடுவதாக இந்தத் தொடர் அமைகிறது எனலாம். ஈழத்தமிழரின் வரலாற்றின் முக்கியமான மூன்று தசாப்த காலத்தின் நாடக முயற்சிகளின் பதியப்படாத ஒரு பக்கத்தை பதிவிடுவதாக ‘நாடகர் நினைவோடை’; தொடர் அமையும். தொடருக்கான பெயரை முன்மொழிந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் மு.இராமசாமி அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன். 

தனிநபர் நினைவுகளை இரைமீட்பதாக இந்த முயற்சியமைந்தாலும்  நீண்ட பயணத்தின் பட்டறிவாக, நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உள்ளுணர்வுசார்ந்த சுயபார்வையாக மேலும்பலவாக நீளும்.

1990 – 2020 வரையான ஒரு மூன்று தசாப்தகாலம் இலங்கை வடபுலத்தில் எத்தனையோ சம்பவங்கள் பதிவாகி வரலாறாகியிருக்கின்றன.  இதே காலகட்டத்தில் பயணித்த அரங்கப்பயணமும் முக்கியமானது. . இதுவொரு காலப்பதிவு, அதுவே வரலாறாகி நிற்கிறது போலும்.  

நினைவிலிருந்து ஒரு தொடரை எழுத முற்சிக்கின்ற இந்த முற்சியை ‘நினைவு அரங்கு’ என்பதாகக் கொள்ள முடியும். இங்கு "நினைவு." அதன் பொதுவான பயன்பாட்டில், நினைவகத்தில் சேமிக்கப்பட்ட கடந்தகால அனுபவங்களைக் குறிக்கிறது. அந்த அனுபவங்களை நினைவுபடுத்துவது ஒரு திறன் சார்ந்த செயற்பாடு, சிலர் அனுபவங்களை மீள நினைவுபடுத்துவதில் கைதேர்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்வாறான திறன் உள்ளவர்களை நல்ல ஞாபக சக்தியுள்ளவர்கள்; என்று நாம் கூறுவது வழமை. நினைவாற்றல் என்பது அற்புதமான கலை எனலாம். நினைவு ஒருவரது தொடர்ச்சியான உணர்வுக்கு மற்றும் வாழ்விற்கு துணைநிற்கிறது. நினைவகத்தில் சேமிக்கப்படும் சம்பவங்கள் ஒரு மன, உடல் மற்றும் சமூக நிகழ்வு ஆகும். நினைவாற்றல்; ஒரு செயல்திறன் மிக்க செயல். ஒருவர் எதையாவது நினைவில் கொள்ளும்போது, பெரும்பாலும் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ ஒருவித நடத்தைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். எதிர்காலத்தில் சில பணிகளைச் செய்வதற்கான நினைவூட்டல்கள பயன்தரவல்லன. . இதனால் தான் ஞாபக சக்தி அவசியமென்கிறோம். ஞாபகம் வைத்திருப்பது என்பது ஒரு கடினமான வேலை. ஞாபகத்திலிருந்து தான் நினைவுகூரல் ஆரம்பமாகிறது. 

Saturday, 9 April 2022

பேரிடர்காலத்தில் சிறுவர் மனச்சுமைத் தணிப்பு அரங்கு


யாழ் தினக்குரல் பத்திரிகையில் ஞாயிறு தோறும் வெளிவந்த இந்தத் தொடர்  இங்கு மீள்பிரசுரமாகிறது. 

தொடர் -01 

தேவநாயகம் தேவானந்த்

COVID 19 வைரஸ் பரவல் உலகெங்கலும் பல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றது. சமூகமுடக்கம், பொருளாதார மந்த நிலை, புதிய வாய்ப்புக்களுக்கான வழிகள் திறக்கப்படாமை, கல்விக்கூடங்கள் மூடப்பட்டமை என்று பல நெருக்கடிகால நிலைமைகள் சிறுவர்கள் மீது பலவிதமான மன அழுத்தங்களைக் ஏற்படுத்தியிருக்கின்றன. பாடசாலைச்சூழல் இல்லாது போனதால் பாடசாலைப்பருவத்தின் மகிழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் இல்லாது போகின்றன. சகபாடியுடன் உறவாடும் மற்றும்; நட்புக்கொள்ளும் வாய்ப்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது. நண்பர் வட்டத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல் போன்ற பல பாடசாலைப்பராய வனப்புக்கள் இல்லாமல் போயிருக்கின்றன. 

சும்மாயிருக்கும் சிறுவர்களுக்கு பாடங்களைகற்பித்தால் போதும் என்று சிந்திக்கப்படுகிறது. பாடங்களைக்கற்பதற்கு இணையவழிக்கல்வி ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. தொலைதூரத்திலிருந்தபடி மாணவரும் ஆசிரியரும் மென்செயலி வழி இணைந்து கற்றால் போதும் என்ற சிந்தனை உருவாகிறது, இருந்தாலும் அந்த புதிய கல்விக்கான களமும் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை காணலாம்.

Friday, 8 April 2022

மணிமுடியும் மக்களும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் மேடையேறிய ஈழத்தவரின் நாடகம் (2017)

சென்னைப்பல்கலைக்கழக இதழியல் துறைத முதுமாணி மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு 10 நாட்கள் தொடர்ச்சியாக நாடகக் களப்பயற்சி நடத்தி இறுதியாக மணிமுடியும் மக்களும் என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. களப்பயிற்சி வளவாளராகவும் நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்நத தேவநாயகம் தேவானந்த். இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அரங்கத் தொடர்பாடல்துறை வளவாளராக கடந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் சென்னைப்பல்கலைக்ழகத்தில் கல்வி கற்ற காலத்தில் முற்றம் கலைக்குழுவை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 7 April 2022

பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகம் (2004)

பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகம் யுத்தத்தில் அல்லலுறும் பெண்கள் பற்றிப் பேசுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இதனைத் தயாரித்திருந்தது. எழுதி நெறிப்படுத்தியவர் தேவநாயகம் தேவானந்த்.

 

Wednesday, 6 April 2022

இது கூத்தல்ல நிஜம் நாடகம் (2005)



வன்னியில் யுத்தத்தின் பின்னர் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவது தொடர்பாக நாடகம் பேசுகிறது. செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்த இந்த நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் எழுதியிருந்தார். நாடகத்தை பு.ரஜனி நெறிப்படுத்தியிருந்தார் 




 

Tuesday, 5 April 2022

சிரிப்பு மூடை சிறுவர் நாடகம் (2015)



இலங்கையில் ஐந்தாமாண்டு நடைபெறும் புலமைப்பரிசில் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை கொடுத்து வருவதும். சிரிப்பு தொலைந்து அதனை தேடமுற்படுவதுமான கதையாக நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களும் பெரியவர்களும் இணைந்து இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். மூன்று வயதில் மன்னனாக அஸ்வின் ராம் நடித்திருந்தார். ஈழத்தின் நாடக வரலாற்றில் சிரிப்பு மூடை முக்கியமான நாடகமாக பதியலாம். இது நூலாகவும் வெளிவந்துள்ளது. நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியர் தேவநாயகம் தேவானந்த்.செயல் திறன் அரங்க இயக்கம் இதனைத் தயாரித்து மேடையேற்றியிருந்தது.  


 

Saturday, 26 March 2022

C.V : Thevanayagam Thevananth

  

Thevanayagam Thevananth

CURRICULUM VITAE

                     Mr. Thevanayagam Thevananth

Wednesday, 23 March 2022

Drama Books

 


1. Thevanayagam Thevananth, Theatre of Jaffna, Amazon Kindle Edition, May 19, 2020, ASIN : B088YLL9G3

2. Thevanayagam Thevananth,‘Nallur Drama Festival -2015’,Active Theatre Movement>Srilanka, March 2016 ,ISBN 

978-955-7664-04-0

3. Thevanayagam Thevananth,‘Drama: Akkiniperumuchchu’’ Active Theatre Movement, Srilanka, August 2005, ISBN :

955-98711-2-9

4. Thevanayagam Thevananth,‘Nenchuruthumkanal’,The Refugees Rehabilitation Organisation,Jaffna,Srilanka June,2003, ISBN: 955-1005-00-7

5.Thevanayagam Thevananth,  Edikarai Mann: Dramas , Kooththarangam >2007 / Amazon Kindle Online Edition, July 12, 2020, ASIN : B08CVVHBWN

Research Work on Theatre & Media

 


Research Paper Presentations – International Conferences.

 1. Thevanayagam Thevananth has presented a research paper on ‘Metaphoric Theatre Training Method in Modern Sri Lankan Tamil Theatre’ at the 2nd International Conference on Intangible Cultural Heritage (ICICH 2020), ‘Enriching Global Citizens through Traditional Insights’ on 18th - 19th, December 2020. 

2. Thevanayagam Thevananth has presented a research paper on ‘Media criminality when reporting crime news in Sri Lanka: A case study of school girl gang raped and murdered ‘at the International conference on “Media and Contemporary culture on communication”,Naeayanaguru college of Engineering, Kanyakumari, Tamilnadu on 21 March 2020

 3. Thevanayagam Thevananth has presented a research paper on ‘Nallur Drama Festival: Speaking Loudly about political Issues’ at the International Seminar on Media Technologies and Accessibility: Politics, Representations and Paradigms, School of Media & Communication, Pondicherry University, India on January 21-22,2020 

4. Thevanayagam Thevananth has presented a research paper on ‘”Ulakaḷāviya kirāmam”eṇṇakkaruvil verittās vāṉoli’ at the 26th Annual scientific sessions of the Jaffna science association on 31st July,1&2 ,August 2019 

5. Thevanayagam Thevananth has presented a research paper on ‘An Auto –Ethnographic Account of Post-war dramas’, 4 th International Tamil Journalism Conference, ‘Journalism for People’, Jaffna, Sri Lanka on 05-06 April, 2019 

6. Thevanayagam Thevananth has presented a research paper on ‘Media ethics and victims rights’’ 4 th International Tamil Journalism Conference ‘Journalism for People’, Jaffna, Sri Lanka on 05-06 April, 2019 

7. Thevanayagam Thevananth has presented a research paper on ‘An ethnography perspective in theatre training for professional learning context’ at the 26th Annual scientific sessions of the Jaffna science association on 31st July,1&2 ,August 2019

 8. Thevanayagam Thevananth has presented a research paper on ‘Theatre is the way of establishing the freedom of expression for women’ at the International Women Conference Sri Lanka 2018 ‘Women empowerment and leadership in post-war context’ on 21st & 22nd July 2018.

 9.Thevanayagam Thevananth has presented a research paper on ‘Ethnic war and theatre activities in northern part of Sri Lanka’, at the 16th Annual Pedagogy and Theatre of the Oppressed (PTO) Conference at Austin University, Texas, America on June 3-6, 2010. 

Wednesday, 1 December 2021

‘Mansumantha Manier’ Drama Emphasizing the Concepts of ‘The Nation is Made by People’

‘Mansumantha Manier’ Drama Emphasizing the Concepts of ‘The Nation is Made by People’

Thevanayagam Thevananth

Head, Makkall Ithazhyal Iyakkam, Yalpanam, Sri Lankahttp://orcid.org/0000-0002-1831-7730

Abstract 

 Is in play. The play is made up of everyday life activities. The place where the action takes place is defined as the stage. Drama is the best of human language that uses verbal and physical devices to reflect life.The stage is seen as a process and is used as a tool to achieve human development goals. The stage is a way to understand the nature of aggression. This is a collaborative effort of many. It invites people there to engage in creative processes. Creativity is defined as a process by which innovation can be achieved.The platform of the oppressed emerges from the belief that the role of society in changing oppression and achieving liberation from oppression can be critically explained.But drama for social change and liberation from oppression; has been used for years. This study explores the potential dynamics of drama to achieve an ideal goal based on theatrical literature.Theatrical font intended for content analysis methodology. The forum has helped people in Jaffna, Sri Lanka to develop their problem-solving skills to eliminate oppression, empower and strategize. It used theatrical methods to break down internal and external oppression into everyday life and future challenges.This study looks at how the Mansumanthamaniyar play, produced by Jaffna University students in the mid-1980s, which saw the intensification of the Tamil liberation struggle in Sri Lanka, motivated the youth and the people towards liberation and emphasized the principle of ‘the nation became the people’.

Key  Words:  Srilankan  ethnic  conflict,  Srilankan  Tamil  Drama,  Jaffna  University Drama,  Tamil  theatre,  Jaffna  theatre,  Mansumathameniyar  Drama,  Kulanthai M.Shanmugalingam, Liberation Theater, Sri Lanka Ethnic Issue, Mansumanthamaniyar, Tamil Theater.