கலாநிதி
தேவநாயகம் தேவானந்த்
அறிமுகம்
புதுவை அன்பன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்தவர் தனது சிறுவயதில் காவோலை கொழுத்தி அந்த வெளிச்சத்தில் கூத்தாடிய பரம்பரையில் வந்தவர். ஊரில் காத்தவராயன் கூத்தை அறுபது அடி நீள மேடையில் பிரமாண்டமாக நிகழ்த்தியவர். அந்தக் கூத்தை மேடையேற்றும்போது அதில் காணப்பட்ட பாலியல் விரசங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் கூறுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றை நீக்கி, புதிய சமூகப் பார்வையுடன் மறுவடிவமைத்தார்.