Showing posts with label article. Show all posts
Showing posts with label article. Show all posts

Tuesday, 2 June 2026

Art-based activities contribute to children's psychological well-being and psychosocial development

 


At the 32nd Annual Sessions of the Jaffna Science Association, Dr. T. Thevananth delivered a presentation on the role of art activities in psychosocial work. The presentation focused on how art-based activities contribute to children's psychological well-being and psychosocial development, with particular emphasis on the “Saturday Drama Night” programme conducted by the Active Theatre Movement at Nallur.

The discussion was supported by several theoretical perspectives, including Sigmund Freud's theory of unconscious expression, Carl Jung's concept of symbolic expression, Erik Erikson's psychosocial development theory, and Lev Vygotsky's social learning theory. Through these frameworks, the presentation demonstrated how creative arts provide opportunities for emotional expression, identity formation, social interaction, confidence building, resilience, and psychological healing among children.

புதுவை அன்பன்: கலைக்கும் கொள்கைக்கும் உண்மையாக வாழ்ந்த அரங்கக் கலைஞர்

         கலாநிதி தேவநாயகம் தேவானந்த்

அறிமுகம்

புதுவை அன்பன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்தவர்  தனது சிறுவயதில் காவோலை கொழுத்தி அந்த வெளிச்சத்தில் கூத்தாடிய பரம்பரையில் வந்தவர். ஊரில் காத்தவராயன் கூத்தை அறுபது அடி நீள மேடையில் பிரமாண்டமாக நிகழ்த்தியவர். அந்தக் கூத்தை மேடையேற்றும்போது அதில் காணப்பட்ட பாலியல் விரசங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் கூறுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றை நீக்கி, புதிய சமூகப் பார்வையுடன் மறுவடிவமைத்தார்.

Monday, 2 June 2025

எமது சிறுவர்கள் புறயிலர் கோழிகளாக வளர்கிறார்கள், அதனைத் தவிர்ப்போம் !

- துளசி முத்துலிங்கம் / ஆங்கில ஊடகத்துறை


உலகின் பிற பகுதிகளைப் போலவே, யாழ்ப்பாணத்திலும் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. இதற்கு வேகமான புலம்பெயர்வு ஒரு காரணமாக இருந்தாலும். குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதும் முக்கியமான காரணமாகும். இப்போது யாழ்ப்பாணத்தின் பெற்றோர்கள் குறைந்த குழந்தைகளையே பெறுகிறார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான குடும்பங்களில் அதிகபட்சமாக இரண்டு; குழந்தைகள், பலர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இப்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சில ஆண்களும்,; பெண்களும் திருமணம் செய்யாதும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. இங்கு தனிப்பட்டவர்களின் முடிவின் மீது நான் கேள்வி கேட்கவில்லை - இந்த பொருளாதார நெருக்கடியில், திருமணம் செய்வதும் ,அதிக குழந்தைகளைப் பெறுவதும் முடியாது தான், அதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

Saturday, 31 May 2025

பெருநிறுவன உணவு தட்டில் தொலையும் யாழ்ப்பாணச் சுவை

 - திணிக்கப்படும் உணவு அரசியலுக்கெதிராக குரல் கொடுப்போம் - 

Dr.தேவநாயகம் தேவானந்த்


சென்ற வாரங்களில் சூடான செய்தியாக இருந்தது நல்லூரில் புதிதாகத் திறக்கப்பட்ட Barista உணவுப்பெரு நிறுவனத்தின் கிளை திறப்பும் அதற்கெதிராக சைவ அமைப்புக்களின் போராட்டமும் ஆகும். போராட்டத்திற்கான காரணம் நல்லூருக்கு அண்மையில் மாமிச உணவுப்பரிமாற்றம் கோவிலின் தூய்மையைக் கெடுக்கிறது என்பதாகும். இதில் முன்னெப்போதும் இல்லாது சைவ அமைப்புக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தியிருந்தன. இங்கு, பல்தேசிய உணவு வலையமைப்பு மாநகர சபையில் அனுமதி பெறாமலே அந்தக்கிளையைத் திறந்ததாகவும். மாநகர சபை அதற்கெதிராக வழக்குப்பதிவு செய்வதாகவும் பேசப்பட்டது. இதற்கிடையில் குறித்த பல்தேசிய உணவு வலையமைப்பு தாம் அந்தக்கிளையில் மாமிச உணவு பரிமாறமாட்டோம் என்று ஒரு பனர் வைத்ததோடு அந்தப்போராட்டம் நீர்த்துப்போனது. இதே போல சில மாதங்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு பிரியாணிக்கடைகள் அதிகளவில் வருகின்றன என்று தனது விசனத்தைப்பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் ஆழ அகலங்கள் பற்றி சிந்தித்து அதன் அரசியல் பற்றிய தெளிவோடு எமது அரசியல் தலைமைகள் செயற்படுகின்றனவா? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஏனெனில் இத்தனை கலவரங்களுக்கு மத்தியில் நல்லூருக்கு அண்மையில் இன்னொரு பல்தேசிய உணவு வலையமைப்பான Chinees Dragon தனது கிளையைத் திறக்க ஆயத்தமாகிறது.

Monday, 26 May 2025

Cultivating Children's Creativity through the Arts

By Thulasi Muthulingam


Just like across the rest of the world, people in Jaffna are having less and less children now.
The maximum in most families is two; many opt to stop at one, and some don't have any at all.
I am not questioning their judgement - in this economic crisis, people can't afford to have more children.
At the Jaffna Artists Group. we are just concerned about the wellbeing of the children in this fairly new dynamic.
Since many families are single child now, helicopter parenting has increased.
There are no siblings or enough neighbourhood children for the children to play with.
Helicopter parenting anywhere is a disaster but just imagine what the average Jaffna parent helicopter-parenting a single child would look like?
I can already see the results in my Gen Z adult students - who grew up with at least one other sibling often.

Sunday, 2 March 2025

அரிசிக்கு அரோகரா!!

 


Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை அரசி மற்றும் தேங்காய்த்தட்டுப்பாட்டில் திண்டாடுகிறது. பாராளுமன்றத்தில் இதற்கு விநோதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் அரிசித்தட்டுப்பாட்டுக்குக்காரணம் இலங்கையில் உள்ள  நாய்கள் என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏதிர்காலத்தில் நாய் ஒழிப்புத் திட்டம் ஒன்றுக்கான முன்மொழிவாகவும் அதனைக்கருதலாம். இந்தச் சுழலில் "அரிசிக்கு அரோகரா" என்று சொல்லத் தூண்டுகிறது. இது பொதுவாக அரிசிக்காக வாழ்த்தும் ஒரு கோஷமாக கருதமுடியும்.