“நீதிக்கு இரு பக்கங்கள்” : ஒரு விமர்சன மதிப்புரை பகுதி - 02
-------------------------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு 12.07.2026 பிராந்திய பத்திரிகையில் மூத்த ஊடகவியலாளர் என்று குறிப்பிடப்படும், யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறையின் வருகை விரிவுரையாளர் எழுதிய பத்தி எழுத்து பற்றிய விமர்சன மதிப்புரை இங்கு முன்வைக்கப்படுகிறது. இது ஊடகக்கற்கைகள் துறை மேலும் காத்திரமாக வளமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கான விவாதத்திற்கான முன்மொழிவு.
இந்த மதிப்புரை, வழங்கப்பட்ட கட்டுரையின்
செய்தியியல் தரத்தை மட்டுமே
மதிப்பிடுகிறது. குற்றச்சாட்டின் உண்மைநிலை, சம்பந்தப்பட்ட நபர்களின்
சட்டப் பொறுப்பு அல்லது
பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல் பற்றி மதிப்பீடுசெய்யவில்லை என்பதை முதலில் தெளிவு
படுத்த விரும்புகிறேன்.
பகுதி -01 இல் குறிப்பிடப்பட்ட
நீதியியன் இருபக்கங்கள் கட்டுரையின் காணப்பட்ட செய்தியியல் குறைபாடுகளின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
“நீதிக்கு
இரு பக்கங்கள்”கட்டுரை கேள்வி
வடிவில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தல்
கட்டுரை தொடர்ச்சியாக வினாக்களைப் பயன்படுத்துகிறது:
“இது புலமைசார் காழ்ப்புணர்ச்சியா?”,
“ஒருவரை அகற்றும் முயற்சியா?”,
“பொறாமை கொண்டவர்களின் விமர்சனப்
பசியா?”
இவை பதில் தேடும்
நடுநிலையான கேள்விகளாக இல்லாமல், குறிப்பிட்ட
முடிவுகளுக்குத் தள்ளும் மொழிச்சாதனங்களாகத் தோன்றுகின்றன.
ஆதாரமின்றி நேரடியாகக் கூற முடியாத
கருத்தை வினா வடிவில்
முன்வைப்பது செய்தியியல் பொறுப்பிலிருந்து விடுவிப்பதில்லை.
குறிப்பாக, “தகைமைகள் இருந்தும் பதவி
கிடைக்காதவர்கள்”, “பொறாமை உணர்வு
கொண்ட சிலர்” போன்ற
குறிப்புகள் ஆதாரமற்ற நோக்க ஒதுக்கீடுகளாகும்.
இவை செய்தியின் மையப்
பொருளுக்கு அவசியமற்றவையும் அவதூறு அபாயத்தை
ஏற்படுத்தக்கூடியவையும் ஆகும்.
