Showing posts with label Jaffna. Show all posts
Showing posts with label Jaffna. Show all posts

Thursday, 5 October 2023

இலங்கைத் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து புலிகளின் குரல் ஒலிபரப்பு

தொன்னூறுகளில் விடுதலைப்புலிகள், விடுதலை இயக்கத்தின் போராட்ட நோக்கத்தை மக்களுக்கு உணர்த்தவும் இயக்கத்திற்கும்
மக்களுக்கும் இடையே தொடர்பை விரிவுபடுத்தி வலுப்படுத்தவும்; ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். இதற்குக்காரணம் விடுதலைப்புலிகள் ;தமது தலைமறைவு வாழ்வை மெல்ல முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் முன் வெளிப்படையாக வந்தார்கள், தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் மக்கள் முன் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை காணப்பட்டது போலும். தமது முகங்களைக்காட்டி பொதுவெளிக்கு வந்த பின்னர் மக்களின் கேள்விகளுக்கு விடைகொடுக்க வேண்டிய சூழல் இயல்பாகவே தோன்றியிருந்தது இதனை புலிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இதனை எதிர்கொள்வதற்காக ஊடகங்களை நன்கு திட்டமிட்டு தந்திரோபாயமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்தக்காலகட்டம் புலிகள் கரந்தடிப்படையாக இருந்து மரபுவழி இராணுவமாகவும் தம்மை பரிணாம வளர்ச்சிக்குள் இட்டுச் சென்ற செயல் முறையும் நடைபெற்றதை இனங்காண முடியும்.

Tuesday, 25 February 2020

ஈழத்தின் மூத்த நாடகக் கலைஞர் இளைய பத்மநாதன்



ஈழத்தின் மூத்த நாடகக் கலைஞர் இளைய பத்மநாதன், அவரை சென்னையில் பேராசிரியர் வீ.அரசு மற்றும் மங்கை வீட்டில் சந்திக்க நேர்ந்தது. 23.02.2020 அன்று தினமலர் அமுதன் அண்ணாவுடன் சென்றிருந்தேன். அங்கு பத்தண்ணா என்று அழைக்கப்படும் இளையபத்மநாதனைக் காணக்கிடைத்தது மகிழ்ச்சி. முதல் முறையாக அவரை நேரில் சந்திக்கிறேன். குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் தோற்றமும் வாகையும் அவரில் தெரிந்தது. மகிழ்ச்சியாக உரையாடினோம். தான் அண்மையில் வெளியிட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தையும் தான் இது வரை எழுதிய ஏழு நாடக நூல்களையும் எனக்குத் தந்தார். அவற்றை எவ்வாறு யாழ்ப்பாணம் கொண்டு சேர்ப்பது என்ற பயம் ஒரு புறம் இருக்க, அவரது கைகளால் கிடைத்த பரிசு மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.

Wednesday, 1 February 2017

முதுகெலும்பில்லாத செயலாளர் -03


விடியக்காத்தால கண்ணமுழிச்சு கட்டிலால எழும்ப கேற்றடியில் “அப்புச்சி….அப்புச்சி “ என்று கூப்பிட்டுக் கொண்டு சொந்தக்காரர் ஒருத்தர் வாசல்ல வந்து நின்றார். அவசரமா வந்த சலத்தையும் அடக்கிக்கொண்டு ஓடிப்போய் கேற்றத் திறக்க “அப்புச்சி நீ உலகம் தெரிஞ்சனி உரெல்லாம் நியாயங்கள் பிளக்கிறாய். இஞ்ச சொந்தத்துக்க நடக்கிற பிடுங்குப்பாடுகள் ஒன்றும் உனக்குத் தெரியாது…”என்று கேற்றத்திறந்து உள்ளுக்க வராதுக்கு முன்னமே அந்தாள் குழறத்தொடங்கிட்டு.