Showing posts with label jaffna theatre. Show all posts
Showing posts with label jaffna theatre. Show all posts

Tuesday, 14 June 2022

போரில் சிக்கிய பெண்ணின் கதைபேசும் “பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்”


போர் எமக்குப் பாதுகாப்பாக இருந்த பலவற்றை அழித்தொழித்துச் சென்றுவிட்டது. எமது சூழல், உறவுகள், கட்டமைப்புக்கள் அனைத்தும் மீள் உருவாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. எமது பலமென்று நாம் சொல்லிவந்த “குடும்ப நிறுவனம்” சிதைவடைந்து உருமாறிக் கிடக்கிறது. வீட்டு மண்டபங்களில் வெள்ளை – கறுப்பு நிறங்களில் தொங்கிக் கிடந்த குடும்பப் படத்தை பார்க்கின்றபோதெல்லாம் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய குடும்பப் படத்தை இனி எவ்வாறு எடுப்பேன் என்று ஏங்கியபடி வீட்டுக்குள் கிடக்கும் பெரியவர்களின் துடிப்பு இருபது வருடப் போர் தந்த சீரழிவைச் சுட்டி நிற்கின்றன.

Wednesday, 3 January 2018

Post war Theatre In Northern Srilanka

வடஇலங்கையில் யுத்தத்தின் பின்னரான அரங்கு


---------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தத்தின் பின்னரான அரங்கு என்பதை முதலில் வரையறை செய்தல் வேண்டும். இதன் போது யுத்த கால அரங்கு மற்றும் யுத்தத்தின் முன்னரான அரங்கு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னர் இலங்கையரசு விடுதலைப்புலிகளை முற்றுமுழதாக இராணுவரீதியாக தோற்கடித்ததாக மார்தட்டிக் கொண்டதான 2009 ஆண்டுக்குப்பின்னரான சூழலை இங்கு நாம் யுத்தததின் பின்னரான சூழல் என்று வரையறுக்க முற்படுகின்றோம். கடந்த ஏட்டுவருடகாலங்கள் இதற்குள் அடங்கும் எனலாம்.


Monday, 26 September 2016

Nallur Festival of Theatre Reviving drama and theatre in the peninsula



Published in DailyFT website on 10 September 2016
 23  88

untitled-2

Thevananth Thevanayagam, jack-of-all-trades in theatre



This Interview was published in Daily FT on 10 September 2016 
 3  85

Thevananth Thevanayagam (46) is the Founder and Director of the Active Theatre Movement, a fast-growing and popular theatre troupe in the Northern Province. He and fellow theatre lovers in the north have worked hard over the years to re-popularise drama and theatre among the local populace. Following are excerpts from an interview: 


Monday, 16 September 2013

இளையோர் நாடக விழா -2013


ஈழத்து நாடக வரலாறு புதிய பண்டநுகர்வுக் பண்பாட்டுக்குள் தன்னை புதிப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறது போலும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கான ஏது நிலை மேலும் வளர்ச்சியடைய வேண்டிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் நாடகம் என்ற பலர் இணைந்து பணிசெய்கின்ற கலையைப் பொறுத்தமட்டில் படைப்பு கருக்கொண்டு பிரசவித்தல் வரையில் தடைகள் ஏராளம். இதனால் படைப்பு தறுக்கணித்துவிடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இலக்கியப்படைப்பாளி தன் கதையையோ, கட்டுரையையோ, கவிதையையோ தான்விரும்பிய படி எல்லை கடந்து பயணித்து படைக்க முடியும் அவற்றை இன்றைய தகவல் தொழிலநுட்பப் உலகில் பிரசுரிக்கவும் வாய்ப்புக்கள் ஏராளம்.