Showing posts with label Dramas. Show all posts
Showing posts with label Dramas. Show all posts

Sunday, 12 June 2022

'பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்' நாடகம்

 

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. 

 

இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற பெண்களுடனும் இணைந்து வேலை செய்த போது கிடைத்த அனுபவங்களை இந்நாடகத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள முயற்சித்ததை அவதானிக்க முடிந்தது. இந்நாடக அளிக்கையூடாக கிடைக்கின்ற நிதி பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில் பாதிப்புக்களுக்கு பரிகாரம் தேட வேண்டியதும் இனியும் பாதிப்புக்கள் வராது பாதுகாக்க வேண்டியதும் முக்கியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளை நாமே கண்டு கொள்ளல் அவசியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கான அபிவிருத்தியில் மன அபிவிருத்தி பற்றி சிந்தித்தல் மிக அவசியம். மன அபிவிருத்தியை ஏற்படுத்தும் செயற்திட்டத்தில் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அரங்கு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்குகின்ற செயல்திறன் அரங்க இயக்கம் (யுஉவiஎந வுhநயவநச ஆழஎநஅநவெ) இவ்வாறான பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது.  பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகத்தையும் செயல்திறன் அரங்க இயக்கமே தயாரித்துள்ளது. இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தே. தேவானந்த், ஒன்றரை மணிநேரத்தைக் கொண்ட இந்நாடக அளிக்கைக்கான இசையமைப்பை த. றொபேட் செய்துள்ளார்.

Wednesday, 6 April 2022

இது கூத்தல்ல நிஜம் நாடகம் (2005)



வன்னியில் யுத்தத்தின் பின்னர் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவது தொடர்பாக நாடகம் பேசுகிறது. செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்த இந்த நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் எழுதியிருந்தார். நாடகத்தை பு.ரஜனி நெறிப்படுத்தியிருந்தார் 




 

Tuesday, 5 April 2022

சிரிப்பு மூடை சிறுவர் நாடகம் (2015)



இலங்கையில் ஐந்தாமாண்டு நடைபெறும் புலமைப்பரிசில் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை கொடுத்து வருவதும். சிரிப்பு தொலைந்து அதனை தேடமுற்படுவதுமான கதையாக நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களும் பெரியவர்களும் இணைந்து இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். மூன்று வயதில் மன்னனாக அஸ்வின் ராம் நடித்திருந்தார். ஈழத்தின் நாடக வரலாற்றில் சிரிப்பு மூடை முக்கியமான நாடகமாக பதியலாம். இது நூலாகவும் வெளிவந்துள்ளது. நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியர் தேவநாயகம் தேவானந்த்.செயல் திறன் அரங்க இயக்கம் இதனைத் தயாரித்து மேடையேற்றியிருந்தது.