Showing posts with label Drama work. Show all posts
Showing posts with label Drama work. Show all posts

Tuesday, 19 March 2024

புலம்பெயர் உறவுகளிடமிருந்து ஒரு பாராட்டுப் பத்திரம்

                                                                                                     

ஒரு மாலை வேளை (13.02.2022) கைதொலைபேசியில் ஒரு அழைப்பு உள்ளூர் இலக்கத்திலிருந்து வந்தது "சேர்" FATV லண்டன் ஞாயிறு நிகழ்ச்சிக்காக உடன் இணைய வேண்டும் கேட்ட குரல் சுவிசிலிருந்து கேட்ட குரலாயிற்றே என்று எண்ணுவதற்குள் "நாங்கள் நீங்கள் இருக்குமிடம் வருகிறோம் சேர்ந்தே சூமில் இணையலாம் என்றார்கள்."  ஆம் மெய்நிகர் வெளியில் சுவிசிலிருந்து நடித்த அவந்திகா அவர் குடும்பத்தினரை மெய்வெளியில் கண்டது மகிழ்ச்சி பாட்டி நாடகத்தில் சுவிசலண்ட், டென்மார், பெல்ஐியம் யேமன் நாடுகளின் சிறார்கள் ஒன்றாக சேர்ந்து அனுப்பிய பாராட்டு பட்டயத்தையும் தந்தார்கள் கொரோனா வருமோ என்றிருக்க இப்படி பாராட்டுப் பத்திரங்கள் நாடுகள் கடந்து வருவது மகிழ்ச்சி, நன்றி சிறார்கள் அவர்தம் பெற்றோருக்கு உரித்தாகட்டும்


Tuesday, 14 June 2022

போரில் சிக்கிய பெண்ணின் கதைபேசும் “பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்”


போர் எமக்குப் பாதுகாப்பாக இருந்த பலவற்றை அழித்தொழித்துச் சென்றுவிட்டது. எமது சூழல், உறவுகள், கட்டமைப்புக்கள் அனைத்தும் மீள் உருவாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. எமது பலமென்று நாம் சொல்லிவந்த “குடும்ப நிறுவனம்” சிதைவடைந்து உருமாறிக் கிடக்கிறது. வீட்டு மண்டபங்களில் வெள்ளை – கறுப்பு நிறங்களில் தொங்கிக் கிடந்த குடும்பப் படத்தை பார்க்கின்றபோதெல்லாம் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய குடும்பப் படத்தை இனி எவ்வாறு எடுப்பேன் என்று ஏங்கியபடி வீட்டுக்குள் கிடக்கும் பெரியவர்களின் துடிப்பு இருபது வருடப் போர் தந்த சீரழிவைச் சுட்டி நிற்கின்றன.

Sunday, 12 June 2022

'பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்' நாடகம்

 

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. 

 

இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற பெண்களுடனும் இணைந்து வேலை செய்த போது கிடைத்த அனுபவங்களை இந்நாடகத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள முயற்சித்ததை அவதானிக்க முடிந்தது. இந்நாடக அளிக்கையூடாக கிடைக்கின்ற நிதி பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில் பாதிப்புக்களுக்கு பரிகாரம் தேட வேண்டியதும் இனியும் பாதிப்புக்கள் வராது பாதுகாக்க வேண்டியதும் முக்கியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளை நாமே கண்டு கொள்ளல் அவசியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கான அபிவிருத்தியில் மன அபிவிருத்தி பற்றி சிந்தித்தல் மிக அவசியம். மன அபிவிருத்தியை ஏற்படுத்தும் செயற்திட்டத்தில் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அரங்கு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்குகின்ற செயல்திறன் அரங்க இயக்கம் (யுஉவiஎந வுhநயவநச ஆழஎநஅநவெ) இவ்வாறான பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது.  பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகத்தையும் செயல்திறன் அரங்க இயக்கமே தயாரித்துள்ளது. இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தே. தேவானந்த், ஒன்றரை மணிநேரத்தைக் கொண்ட இந்நாடக அளிக்கைக்கான இசையமைப்பை த. றொபேட் செய்துள்ளார்.

Sunday, 3 April 2022

ஆற்றுகை இதழில் ( 1997 )இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன.


 யாழ் திருமறைக்கலாமன்றத்தின் வெளியீடாக வெளிவருகின்ற ஆற்றுகை இதழில் ( 1997 )இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன. 
1. சுமைத்தணிப்பு பணியில் மரத்தடி அரங்கு
2. அரங்க நடவடிக்கையில் புதிய பரிமாணத்தை நோக்கி தெருவெளியரங்கு

இரண்டு கட்டுரைகளும் 1997 காலப்பகுதியில் அரங்கச் செயற்பாட்டுக்குழு இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நிகழ்த்திய தெருவெளி நாடகப்பட்டறிவு சார்ந்தவையாக வெளியாகியிருந்தன. 





Wednesday, 30 March 2022

Popular Tamil Drama : 'Akkiniperumuchchu'காணாமல் போனோர் பிரச்னையைப் பேசிய நாடகம் ‘அக்கினிப்பெருமூச்சு’

அற்புதம், பேரானந்தம்.

சென்னையில் ஒரு ஆத்மாத்தமான நண்பர் ஆமுதன்இ ஆசிரியர் தினமலர் நகரப்பதிப்பு. சென்னை செல்லும் போதெல்லாம் அவரைச்ந்திப்பதும் அவரது வீட்டில் உணவு உண்பதும் அவரோடு ஞாயிறு தினங்களில் கிராமங்களுக்கு பயணிப்பதும் சுவாரிசியமான அனுபவங்கள். மே 03இ 2019 அன்று அவருடன் இருளர் கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். பழங்குடிகளில் ஒருவகைமை சார்ந்தவர்கள் இருளர். அவர்களுடன் பணியாற்றும் சிலரை ஊக்குவிக்கும் முகமாக தன்னிடமிருந்த புத்தகச் சேகரிப்புக்கிளில் ஒரு தொகுதியை அந்தக்கிராமத்து சிறிய நூலகத்திற்காக அமுதண்ணா ஒப்படைத்தார் அப்போது அந்தச் சிறார்களோடு சேரந்து சில அரங்கச்செயற்திட்டங்களை செய்து மகிழந்தோம். அற்புதம் பேரானந்தம்.

Monday, 28 March 2022

‘ முற்றம் ’ : முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம்

Thevanayagam Thevananth

சென்னைப்பல்கலைக்கழகம் கல்விப்புலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி தனக்கான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. முறைசார்ந்த கல்வியின் சிகரமாக எழுந்து நிற்கின்றது. தமிழ் பழமையின் பாரம்பரியத்தின் சிகரமாக, சென்னை மாநகரின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு அழகு சேர்ப்பது   திராவிடப்பாணியில் அமைந்த அதன் கட்டடங்கள் அதில் முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது மணிக்கூட்டுக் கோபுரம். அதன் கீழே முறைசார்ந்த கல்விக்குள் ஒரு முறைசாராக் கல்விக்கூடம். அது ‘முற்றம்’. 
தொடர்பியல் மற்றும் இதழியல் துறை பெற்றெடுத்;த குழந்தை. அதன் வளர்ப்புத் தந்தை பேராசிரியர் கோ.இரவீந்திரன்.
முற்றத்தில் அழகாக கோலமிடமுடியும். ஆனால்  முற்றத்தை உருவாக்குவதென்பது சற்று சிரமமானது. புhரம்பரியமாக பழம் பெருமைபேசி எழுந்து நிற்கின்ற ஒரு பல்கலைக்கழகத்தில் நியமம் தாண்டிய கல்விக்கான களத்தை திறப்பது என்பது மிகக் கடினமானது. அதற்காக பாடாய்ப்பாடுபட வேண்டும். இது ஒரு  பண்பாட்டுப் புரட்சியும் கூட. அதைச் சாத்தியமாக்குவது மிக மிகக் கடினம்.

இந்தப் பண்பாட்டு புரட்சியை ஆரம்பித்து வைத்ததில்; யாழ்ப்பாணப்பல்கைலக்கழகத்திலிருந்து வந்திருந்த நானும் இருந்திருக்கிறேன் என்பதை மீள நினைக்கின்ற போது  பேரானந்தமே!.
பேராசிரியர் கோ. இரவிந்திரன் அவர்கள் அடிக்கடி சொல்கின்ற ‘வகுப்புக்கு வெளியே வகுப்பு’ என்ற தத்துவத்தின் செயல் வடிவம் தான் ‘ முற்றம்’.

Wednesday, 23 March 2022

Drama Books

 


1. Thevanayagam Thevananth, Theatre of Jaffna, Amazon Kindle Edition, May 19, 2020, ASIN : B088YLL9G3

2. Thevanayagam Thevananth,‘Nallur Drama Festival -2015’,Active Theatre Movement>Srilanka, March 2016 ,ISBN 

978-955-7664-04-0

3. Thevanayagam Thevananth,‘Drama: Akkiniperumuchchu’’ Active Theatre Movement, Srilanka, August 2005, ISBN :

955-98711-2-9

4. Thevanayagam Thevananth,‘Nenchuruthumkanal’,The Refugees Rehabilitation Organisation,Jaffna,Srilanka June,2003, ISBN: 955-1005-00-7

5.Thevanayagam Thevananth,  Edikarai Mann: Dramas , Kooththarangam >2007 / Amazon Kindle Online Edition, July 12, 2020, ASIN : B08CVVHBWN

Tuesday, 15 March 2022

நீண்ட இடைவெளியின் பின் உள்ளம் சஞ்சிகை





கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையத்தினரின் வெளியீடாக வெளிவருகின்ற உள்ளம் சஞ்சிகையில் குழந்தைகளின் ஆளுமை விருத்தியில் அரங்கு என்ற தலைப்பில் தேவநாயகம் தேவானந்தின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. 

Saturday, 23 May 2020

Jaffna play slates 'philosophy of submission'

Jaffna play slates 'philosophy of submission' 

Jaffna play slates 'philosophy of submission'

[TamilNet, Sunday, 25 March 2001, 17:11 GMT]
drama_1_250301.jpg"The philosophy of compromise and submission is being forced upon us. The spectre of fear surrounds us, preventing us from speaking about the suffering in our land. We are frozen by fear. As a consequence, we have buried many things deep in our heart. .

We are compelled to wear different masks imposed on us by the outsider and are compelled from moment to moment to change our personalities" said Mr. T. Thevananth, reading out the proclamation of the play Uyir Visai (Life Force) that was staged at the Kailasapthy Hall in the Jaffna University Sunday. Jaffna University students who organised the performance said that the proceeds from the play will go for the education of the children whose parents were arrested by the Sri Lanka army in 1996-97 and were reported missing

Uyir Visai was staged at 10.30 a.m. in the morning and 3.30 p.m. in the afternoon Sunday. The play depicted death and human suffering in Jaffna in the context of the Sri Lanka army's activities in the northern peninsula.

"Let us live! Uyir Visai loudly calls on those who destroyed our lives" "We want our land", said the play's proclamation.

The play is a continuation and development of the theme of Akkinip Perumoochchu (The Sigh of fire), directed by Thevananth and staged eleven times in many parts of Jaffna.

Akkinip Perumoochchu was written and produced from the experiences the Jaffna University students involved in the play had gathered from the families of the Tamil men and women who were arrested by the Sri Lanka army in the peninsula in 96-97 and were reported missing since then, believed to have been murdered by the military and buried in Chemmani.

Letters sent by the SLA to the kith and kin of the missing, claiming ignorance or assuring investigation were projected in the background during the performance of Akkinip Perumoochchu.

The play is not merely entertainment but a continuing catalyst and clarion call for action, the student producers told Tamilnet.

drama_2_250301.jpg
A scene from play.