Showing posts with label chief minister. Show all posts
Showing posts with label chief minister. Show all posts

Monday, 9 January 2023

தங்கத் தட்டில் வைத்து எனக்கு தலைமைப்பதவி தரப்படவில்லை ‘ஜெ


தேவநாயகம் தேவானந்த்

தமிழ்நாட்டு திராவிட அரசியல் நீரோட்டத்தில் புதிய கிளை நதியை உருவாக்கியர் எம.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அதே போல ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர். ஏம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பன்னர் அவரது வாரிசான nயைலலிதா புரட்சித் தலைவி என்று அழைக்கப்பட்டார். இருவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். இருவரும் முதல்வராக இரக்கும் போதே உயிர் நீத்தார்கள். இருவரும் அப்பலோ மருத்துவமனையில் அனுமகிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்கள். ஜெயலலிதா 75 நாட்கள் அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமையை நவீன அறிவியல் படு கொலை என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

Wednesday, 1 February 2017

ஜெயலலிதாவைப் பற்றி வாசகர்களுக்கு முழுமையாக அறியத்தந்துள்ளார்

 க.அருள்நேசன்,குருநகர்

பலர் ஒரு சில துறைகளில் சிறந்து விளங்குவர். ஒரு சிலர் பல துறைகளில் சிறந்து விளங்குவர். இதில் இரண்டாவது நிலையிலேயே தே.தேவானந் அவர்களை ஒப்பிடலாம். காரணம் தேவானந் அவர்கள் நாடகம, ஊடகம்; மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பதை நான் இதுவரை அறிந்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உதயன் பத்திரிகையில் எழுத ஆரம்பித்த பிற்பாடே அறிந்துகொண்டேன்.

Saturday, 21 January 2017

உத்தம வில்லன்


விடிகாலை சலப்பை முட்டி அடிவயிற்றில உதைக்க கண்முழிச்சன். இன்னும் சூரிய வெளிச்சம் முழுசா வரேல்ல. எழும்பி பாத்ரூமுக்க போய் சிரம பரிகாரம் செய்து போட்டு தண்ணியை அடிக்க பிளாஸை பிடிச்சு அமர்த்தினன். அது உடைஞ்சு கையோட வந்திட்டிது. இனி என்ன செய்யிறதெண்டு வாளியில தண்ணியப்பிடிச்சு அள்ளி ஊத்த வேண்டியதாப் போச்சு. இன்றைக்கு உவன் பிளம்பருக்கு பின்னால திரியிற வேலையொன்று வந்து போச்சு.

Monday, 9 January 2017

‘ஜே‘ : 43 வழக்குகளோடு அரசியல் அரங்கில் வெற்றிகளைக் குவித்தவர் -04


தென்னாசியாவில்எந்தவொரு அரசியல் பினபுலமும் இல்லாது பெண்ணொருவர் அரசியலுக்கு வருவதென்பது இமாலயச்சாதனை எனலாம். அதுவும் திருமணமாகாத தனியொருவராக அரசியலில் நிலைப்பபென்பது மிக கடினமான பயணமாகும். சினிமாவிலிருந்து குறிப்பாக வெகுசன ஊடகங்களில் இருந்து ஆண் ஒருவர் அரசியல் தலைமைக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஏம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் திரையில் தோன்றும் தங்கள் பரட்சிகரப்பாத்திரங்களின் பிம்பங்களுடனேயே நிஜவாழ்வில் தோன்றி வெற்றி பெற முடியும்.

Friday, 6 January 2017

' தமிழக மக்கள் தான் தமது சொத்து என்றவர் முதல்வர்” ' ஜெ'



தமிழ்நாட்டு அரசியல் மூன்று முதலமைச்சர்களை தனது பதவிக்காலத்தில் இழந்திருக்கிறது. பேரறிஞர் இண்ணாத்துரை, மக்கள் திலகம் எம்.ஸி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலிதா. இதில் இரண்டு தலைவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழத்தைச சார்ந்தவர்கள். ஆட்சியில் இருக்கும் போது சாவடைவதென்பது அந்த மக்களின் துயரங்களின் எல்லையில்லாத் தன்மையையும் கொடுப்பதோடு ஆட்சி ஆட்டம் காணுவதும் கட்சிகள் பிளவு படுவதும் நடைபெறுகின்ற. எம்.ஜி.ஆர் இறந்தபோது அ.தி.மு ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரவேண்டியிருந்தது.