Sunday, 2 March 2025

அரிசிக்கு அரோகரா!!

 


Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை அரசி மற்றும் தேங்காய்த்தட்டுப்பாட்டில் திண்டாடுகிறது. பாராளுமன்றத்தில் இதற்கு விநோதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் அரிசித்தட்டுப்பாட்டுக்குக்காரணம் இலங்கையில் உள்ள  நாய்கள் என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏதிர்காலத்தில் நாய் ஒழிப்புத் திட்டம் ஒன்றுக்கான முன்மொழிவாகவும் அதனைக்கருதலாம். இந்தச் சுழலில் "அரிசிக்கு அரோகரா" என்று சொல்லத் தூண்டுகிறது. இது பொதுவாக அரிசிக்காக வாழ்த்தும் ஒரு கோஷமாக கருதமுடியும்.

Sunday, 23 February 2025

2025-ஆம் ஆண்டின் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை - விமர்சனப் பார்வை

Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் மலிந்து கிடக்கின்ற ஊழல், முறைகேடு போன்ற விடயங்களில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்கான முறைமை மாற்றத்தை முன்னினைப்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி அதனை நோக்கி நகர்கிறதா? ஆல்லது ஏலவே இருக்கின்ற அதிகாரக்கட்டமைப்புக்களில் ஏறிக்குந்தியிருந்து அதனைச்சுவைக்கிறதா? ஏன்ற கேள்வி வலுவாகிறது. கடந்த வாரம் பிரதமமந்திரி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார் அப்போது சிறுவர் உளநலமேம்பாடு தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்காக அவரைச்சந்திப்பதற்கு வாயப்புக்கேட்டு அமைச்சர் சந்திரசேகரத்தைத் தொடர்புகொண்டிருந்தோம். பின்னர் அவர் குறிப்பிட்ட ஒரு நபரைத் தொடர்பு கொண்டு இறுதியாக கந்தர்மடத்திலுள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். என்னொடு ஊடக நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அது ஏலவே சினிமாஅரங்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் வைத்திருந்த அலுவலகத்திற்கு ஒப்பானதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதே கேள்விகள்,அதே அணுகுமுறைகள், அதே மூடிய அறைகள், முறைத்த முகங்கள் என்று எந்த மாற்றத்தையும் காணவில்லை. தெளிவான பதில்கள் இல்லை, தமது அலுவலத்திலேயே மக்கள் அணுகும் முறைமையில் மாற்றத்தை செய்ய முடியாதவர்கள் எப்படி நீண்ட காலம் புரையோடிப்போன நிலைத்த கட்டமைப்புக்களில் மக்கள் சார்பு நிலையை உருவாக்கப்போகிறார்கள் என்பது புரியவில்லை. அது நிற்க,

Saturday, 15 February 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நியமனம் அரசியல் அசிக்கத்தைப் போக்குமா?



Dr. தேவநாயகம் தேவானந்த்

தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும் என்ற போராட்டம் மக்கள் மயப்பட்டுவருகின்ற சூழலில் யாழ்ப்பாண அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது போலும். இந்தத் தருணத்தில் இலங்கையின் பிரதமர் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கிறார். இது உள்ளுராட்சி தேர்தல் பிரச்சார ஆரம்பமாகவும் வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பை சமாளிப்க்கும் முயற்சியுமாகவே பார்க்கமுடிகிறது. இதற்கிடையில் பிரதமர் பொறுப்பு வகிக்கும் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு தலைவர், மூத்த பேராசிரியர் கபிலா சேனிவிரத்ன, அனைத்து பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கும் அவர்கள் பதவிகளை பெப் 13 திகதிக்கு முன்னர் ராஜினாமா செய்யுமாறு கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் ஏன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, தேசிய கொள்கையின் பரந்த அளவிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படுகின்றது.  

Saturday, 8 February 2025

சுதந்திரதின உரை : பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை


 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரை, ஒரு புறம் நாட்டின் நீண்ட அடிமைப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தது, அதில் நாடடின் வீழ்ச்சியும் அதனிலிருந்து எழவேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின்  எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தபோதும், அந்தக்கனவு தேசத்தை மக்கள்முன்வைக்க ஜனாதிபதி தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.  இந்த உரையில் வெளிப்பட்ட தூரப்பார்வை, அதன் அரசியல் உள்நோக்கங்கள், மற்றும் சமூக, பொருளாதார உண்மைகளுடன் கூடிய பிணைப்பு ஆகியவை சார்ந்து சிந்திக்கத்தூண்டுகிறது.

Monday, 3 February 2025

Questioning the Need for Continued NGO Politics in Sri Lanka


(The Article Published in Yarl Thinakural in Tamil, 02.02.2025)

Dr. Thevanayagam Thevananth

The re-election of Donald Trump as the President of the United States in 2025 has led to significant global policy shifts. In particular, his decisions regarding foreign aid and international development are expected to have a substantial impact worldwide. Shortly after taking office, Trump signed an executive order halting all U.S. foreign aid for 90 days. This decision presents a major challenge for NGOs operating in Sri Lanka, potentially forcing them to reduce efforts in human rights and social development. As these funding cuts take effect, organizations will need to find new ways to sustain their operations and ensure the continuation of essential projects. In the future, many NGOs could disappear due to financial constraints.

இலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் அரசியல் நிலைக்குமா?

 

(Yarl Thinakural Article ,02.02.2025 ) 

Dr. தேவநாயகம் தேவானந்த்

2025 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்க உலகளாவிய கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுததிருக்கிறது. குறிப்பாக , வெளிநாட்டு உதவி மற்றும் சர்வதேச வளர்ச்சி தொடர்பாக இவரது முடிவுகள் உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்ப்  பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார், இந்த முடிவுகளால் இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலை முன்வைக்கிறது, இது மனித உரிமைகள் மற்றும் சமூக மேம்பாட்டில் முயற்சிகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிதி வெட்டுக்கள் நடைமுறைக்கு வரும்போது, நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், அத்தியாவசியத் திட்டங்கள் தொடர்வதை உறுதி செய்யவும் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்தக் குறைப்புகளின்  விளைவாக எதிர்காலத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் காணாமல் போகக்கூடும்.  இந்தக்கணத்தில் பலவிடயங்களை நாங்கள் சிந்தித்தாக வேண்டியதாகிறது. இந்த அமெரிக்க நிதியுதவிகள் வடக்குக்கிழக்கில் எதை செய்தன என்பதையும் பார்த்தாக வேண்டும். இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் போர்காலத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிவந்தன, பின்னர் போருக்குப் பிந்தைய காலத்தில்நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக நிர்வாகத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த அமைப்புகளில் பல, ருளுயுஐனு மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் உட்பட சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து கணிசமான நிதியைப் பெறுகின்றன. இலங்கை நிதி அமைச்சின் கூற்றுப்படி, 1956 தொடக்கம் அமெரிக்கா 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவியை வழங்கியுள்ளது, 

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளால் வடக்கு கிழக்கு பகுதிகளில் நன்மைகள் பல இருந்தாலும் பாதிப்புக்களும் இருந்திருக்கின்றன. அதில் வடக்கு கிழக்கில் தனித்துவமாக மக்கள் அமைப்புக்களாக இருந்த பல அரசார்பற்ற நிறுவனங்களை செயலிக்கச் செய்தததைக் குறிப்பிடலாம். இதன் பயன் இன்று சர்வதேச

அரசசார்பற்ற நிறுவனங்களின் ஓலமாக ஒலிக்கும் சிவில் அமைப்புக்கள் செயலிழந்து போயுள்ளன, அவை விளைத்திறனுடன் இல்லை’ என்பதைக் கேட்க முடிகிறது. இந்த வினைத்திறன் இன்மைக்கு என்ன காரணம் என்று சிந்தித்தாக வேண்டும். 

Saturday, 25 January 2025

செய்தி அரசியலிலிருந்து செயற்பாட்டு அரசியலுக்கு நகர வேண்டும்.

 


Dr. தேவநாயகம் தேவானந்த்

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழர்களின் அடையாளமான பல விடயங்களை கொண்டிருக்கிறது. அதில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி , பொங்கு தமிழ் நினைவிடம், மாவீரர் சதுக்கம் என்று ஈழப்போராட்டத்தின் நினைவுகளைத் தாங்கிநிற்க்கும் நினைவுத்தூபிகள் குறிப்பிடத்தக்கன. 

2001 ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் பொதுமக்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி  பொங்கு தமிழ் பிடகடனத்தையும் வெளியிட்டார்கள்.. 2001 ஆண்டுமிக மோசமான இராணுவ அடக்குமுறைக்குள் யாழ் குடாநாடு இருந்த காலகட்டம், அப்போது வன்னிப்பெருநிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

Sunday, 19 January 2025

தமிழாராய்ச்சி மகாநாட்டிலிருந்து எங்கு புறப்பட்டோம் ? எதை அடைந்தோம் !!

Dr. தேவநாயகம் தேவானந்த்

(Sunday Yarl Thinakural 19.01.2025)

டிசம்பர் 17, 2022 அன்று, வடக்கு இலங்கை மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். டிசம்பர் 18 அன்று,  படகில் இருந்து 104 பேர் கொண்ட குழு மீட்க்கப்பட்டனர். கடற்படை அவர்களை மியான்மர் நாட்டின் ரோஹிங்கியர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.  ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடற்றவர்கள், மியான்மரில் இனஅழிப்பு செய்யப்படுவதால்; தமது வாழ்விடத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு தமது நாட்டைவிட்டு கடல்வழியாக வெளியேறியவர்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு கடற்படையால் மீட்கப்பட்டார்கள். 

Friday, 17 January 2025

உலகத் தமிழர் போற்றும் நாடக பேராளுமை ‘குழந்தை’

 Kalaikathir 28.01.2025


Dr. தேவநாயகம் தேவானந்த்

யாழப்பாணததின் மையப்பகுதியலில் இருக்கின்ற சிறிய முக்கியமான பகுதி திருநெல்வேலி .இந்தப் பகுதி ஈழத்து நவீன நாடக வரலாற்றில் முக்கியமான பகுதியாக இனம்காணமுடியும். 

திருநெல்வேலியில் அமைந்துள்ள இவரது வீட்டை ஒரு நாடகத்திண்ணையென்று குறிப்பிட விரும்புகின்றேன அதில்; நாடக உரையாடல்கள் தினம் நடந்து வந்தன. குழந்தை ம.சண்மகலிங்கம் தனது 93 வது வயதில் கலமாகியிருக்கிறார.அவர் உலகத் தமிழ் நாடக உலகில் வரலாறாகி நிற்பவர்.தனது நாடக எழுத்துருக்களால் உலகெங்கும் பேசப்படுபவர்.இவரது நாடக எழுத்துருக்கள் இன்றும் இலங்கையின் பல பாகங்களிலும் உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் மேடையேற்றப்படுகின்றன.இந்த உயர்ந்த கலைஞரை குழந்தை மாஸ்ரர் என்று அன்பாய் அழைப்பது வழமை.இந்தக் குழந்தை தமிழ் நாடகத்திண்ணையின் பேறு என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.

Saturday, 11 January 2025

மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்


Dr. தேவநாயகம் தேவானந்த்

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 25-ஆவது நினைவுப்பேருரையில், "மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்ந்தது. இந்த உரைத் தலைப்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் தமிழரசியல் சூழ்நிலைகளில் உருவாகியுள்ள மாற்றங்களை ஆழமாக ஆய்வு செய்யும் தேவையை முன்வைத்தது. ஆனால் உரையென்னமோ ’அரைத்தமாவை அரைப்பதாகவே’ காணப்பட்டது. இது தற்போது காணப்படும் புலமைத்துவ பின்னடைவை(Intellectual Bankruptcy) சுட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு பல்கலைக்கழக கல்விப்புலம்சார்ந்த ஒருவர் ஒரு மக்கள் தலைவனாகக் கருதப்பட்ட ஒருவரின் நினைவுப்பேருரையை புலமைத்துவ அடைவுளோடு முன்வைத்திருக்க வேண்டும். மாறாக  கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்ற கோதாவில் அந்தக்கட்சியின் கருத்துநிலையையே தனது நிலைப்பாடாகச் சொல்வதென்பது அவரது வங்குரோத்து நிலையையே சுட்டுகிறது என்லாம். சரி அது நிற்க,