Monday, 2 June 2025

எமது சிறுவர்கள் புறயிலர் கோழிகளாக வளர்கிறார்கள், அதனைத் தவிர்ப்போம் !

- துளசி முத்துலிங்கம் / ஆங்கில ஊடகத்துறை


உலகின் பிற பகுதிகளைப் போலவே, யாழ்ப்பாணத்திலும் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. இதற்கு வேகமான புலம்பெயர்வு ஒரு காரணமாக இருந்தாலும். குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதும் முக்கியமான காரணமாகும். இப்போது யாழ்ப்பாணத்தின் பெற்றோர்கள் குறைந்த குழந்தைகளையே பெறுகிறார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான குடும்பங்களில் அதிகபட்சமாக இரண்டு; குழந்தைகள், பலர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இப்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சில ஆண்களும்,; பெண்களும் திருமணம் செய்யாதும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. இங்கு தனிப்பட்டவர்களின் முடிவின் மீது நான் கேள்வி கேட்கவில்லை - இந்த பொருளாதார நெருக்கடியில், திருமணம் செய்வதும் ,அதிக குழந்தைகளைப் பெறுவதும் முடியாது தான், அதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

Saturday, 31 May 2025

பெருநிறுவன உணவு தட்டில் தொலையும் யாழ்ப்பாணச் சுவை

 - திணிக்கப்படும் உணவு அரசியலுக்கெதிராக குரல் கொடுப்போம் - 

Dr.தேவநாயகம் தேவானந்த்


சென்ற வாரங்களில் சூடான செய்தியாக இருந்தது நல்லூரில் புதிதாகத் திறக்கப்பட்ட Barista உணவுப்பெரு நிறுவனத்தின் கிளை திறப்பும் அதற்கெதிராக சைவ அமைப்புக்களின் போராட்டமும் ஆகும். போராட்டத்திற்கான காரணம் நல்லூருக்கு அண்மையில் மாமிச உணவுப்பரிமாற்றம் கோவிலின் தூய்மையைக் கெடுக்கிறது என்பதாகும். இதில் முன்னெப்போதும் இல்லாது சைவ அமைப்புக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தியிருந்தன. இங்கு, பல்தேசிய உணவு வலையமைப்பு மாநகர சபையில் அனுமதி பெறாமலே அந்தக்கிளையைத் திறந்ததாகவும். மாநகர சபை அதற்கெதிராக வழக்குப்பதிவு செய்வதாகவும் பேசப்பட்டது. இதற்கிடையில் குறித்த பல்தேசிய உணவு வலையமைப்பு தாம் அந்தக்கிளையில் மாமிச உணவு பரிமாறமாட்டோம் என்று ஒரு பனர் வைத்ததோடு அந்தப்போராட்டம் நீர்த்துப்போனது. இதே போல சில மாதங்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்திற்கு பிரியாணிக்கடைகள் அதிகளவில் வருகின்றன என்று தனது விசனத்தைப்பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் ஆழ அகலங்கள் பற்றி சிந்தித்து அதன் அரசியல் பற்றிய தெளிவோடு எமது அரசியல் தலைமைகள் செயற்படுகின்றனவா? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஏனெனில் இத்தனை கலவரங்களுக்கு மத்தியில் நல்லூருக்கு அண்மையில் இன்னொரு பல்தேசிய உணவு வலையமைப்பான Chinees Dragon தனது கிளையைத் திறக்க ஆயத்தமாகிறது.

Tuesday, 27 May 2025

ஓபன் மைக் உங்களுக்கானது

நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோவொன்றில் திறமைசாலிகள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் திறமையை வெளிக்காட்ட உங்களுக்கு களம் கிடைக்கவில்லை அல்லது சந்தர்ப்பம் கிடைக்கவில்லை . இதோ உங்களுக்கான வாய்ப்பு ஓபன் மைக். நீங்கள் கலைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் மீது நம்பிக்கை கொண்டவராக உங்கள் திறமையை வெளிக்காட்ட துணிந்து ஓபின் மைக் நிகழ்ச்சிக்கு வாருங்கள். அங்கே பாடலாம், ஆடலாம், வரையலாம், மண்ணில் உருவம் செய்யலாம், இசைவாத்தியம், வாசிக்கலாம், பேசலாம், நடிக்கலாம், மிமிக்கிரி செய்யலாம், கதைசொல்லலாம், புத்தாக்கமாக எதையாவது செய்யலாம். வாருங்கள் நாமே நமக்காக ஒன்று கூடுவோம். பங்கு கொள்ள வரும்புபவர்கள் யூன் 1ம் திகதி நல்லூரில் அமைந்துள்ள முற்றம் திறந்த வெளி அரங்கில் சந்திக்கலாம். இலவசமாகப் பங்கு கொள்ளலாம்.

Monday, 26 May 2025

Cultivating Children's Creativity through the Arts

By Thulasi Muthulingam


Just like across the rest of the world, people in Jaffna are having less and less children now.
The maximum in most families is two; many opt to stop at one, and some don't have any at all.
I am not questioning their judgement - in this economic crisis, people can't afford to have more children.
At the Jaffna Artists Group. we are just concerned about the wellbeing of the children in this fairly new dynamic.
Since many families are single child now, helicopter parenting has increased.
There are no siblings or enough neighbourhood children for the children to play with.
Helicopter parenting anywhere is a disaster but just imagine what the average Jaffna parent helicopter-parenting a single child would look like?
I can already see the results in my Gen Z adult students - who grew up with at least one other sibling often.

சிறுவர் மகிழ்களம் மற்றும் நாடக இரவு : சிறுவர்கள் மகிழ்ந்திருப்பதற்கான அற்புதமான களம்

இ.தே.தே 

தமிழர் சமூகத்தில் கல்வி ஒரு அடையாள மதிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கடுமையான கல்வி நம்பிக்கையால் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து வருகிறார்கள். அவர்கள் கல்விச் சுமையில் சிக்கிக்கொண்டுள்ளார்கள் என்பது ஒரு மறுக்க முடியாத யதார்த்தம். ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசுத் தேர்விலிருந்து ஆரம்பித்து, G.C.E சாதாரணதரம் தொடக்கம் உயர்தரம்வரை, கல்வி கற்றல்; ஒரு போட்டிப் பயணமாகவே மாறியுள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை மருத்துவராகவும், பொறியியலாளராகவும்; வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆசையில், சிறுவர்கள் மீது அதிகமான  அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். 

விளையாட்டு, நட்பு, குடும்ப உறவுகள், இயற்கையுடனான தொடர்புகள், கலாசார பங்கேற்புகள் என அனைத்தும் சிறுவர்கள் மத்தியில் குறைவடைந்துள்ளன. ஒற்றை பிள்ளை குடும்பங்கள் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் வேலைபார்க்கும் சூழலில், குழந்தைகள் அதிக நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கின்றனர். இந்த மெய்நிகர் உலகம் அவர்களுடைய உண்மையான மனித உறவுகளை பாதித்து வருகிறது. இதன் விளைவாக தனிமை, மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள், நடத்தை பிரச்சனைகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. படி படி என்ற அழுத்தத்தைக் தினமும் கொடுத்தாலும் இறுதியாக பெறுபேறுகளைப் பொறுத்தவரை யாழ் மாவட்டம் நாட்டின் மிகக் குறைந்த தரவரிசையில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இது மனசோர்வு மற்றும் உளவியல் ஆதரவு இல்லாத கல்வியால் ஏற்படும் பின்விளைவுகளைக் காட்டுகிறது.

காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தியில் தாமதம் ஏன்?

                                                                                                                                                                    


Dr.தேவநாயகம் தேவானந்த்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இந்தியாவிற்கு தெளிவான பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக, சீனா மோதல்களில் எவ்வளவு பங்கு வகித்தது என்பது தான் இங்கு நோக்கப்பட வேண்டியது. சீனா யுத்தத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிரான ஒரு சோதனைக் களமாகப் பயன்படுத்தியது, அதன் ஆயுதங்களை விளம்பரப்படுத்தியது மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பைச் சோதித்தது. இந்தச் சூழலில் இந்திய அயலுறவுக் கொள்கை முக்கியம் பெறுகிறது. இந்தச்சந்தர்ப்பத்தில் இலங்கை மிக முக்கிய ஸ்தானத்திலிருப்பதால் அதனோடுடனான இந்திய உறவு முக்கியமாகிறது.  

வரலாற்றுரீதியாக இலங்கை பொருளாதார நெருக்கடிநிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக இடர்கால நண்பனாக செயற்பட்டிருக்கிறது. இந்தியாவின் அண்மைய கொள்கையில் முக்கியமானதாக இருப்பது ‘அயல்நாடுகளுக்கு முன்னுரிமை’ என்பதாகும். இதில் ஏனைய அயல்நாடுகளைவிட இலங்கையில் இந்தியாவின் கவனம் மிகஅதிகமாகவே உள்ளதை அவதானிக்கலாம். இந்தச்சூழலில் இலங்கை இந்தியாவின் நேசக்கரத்தை எவ்வாறு பற்றுறிதோடு தொடர்ந்து தனது பொருளாதார நிலைத்த தன்மையைப் பேணப்போகிறது என்பது முக்கியமாகிறது. இலங்கை புதிய அரசியல் கலாச்சாரத்திற்குள் தன்னை நிலைநிறுத்த முற்படுகின்றதான இந்தக்காலகட்டத்தில் தனது அயலுறவுக்கொள்கையை தெளிந்த மனதோடு வடிவமைத்தாக வேண்டும். இந்திய உதவிகளிலிருந்து இலங்கையின் பொருதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய அணுகுமுறைகள் தேவை எனலாம். இலங்கை அரசாங்கம் தனது ‘தறுக்கணித்த’ நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு நகரமுற்படுவதன் விளைவுகளை,; அதன்நகர்வு வேகம் மிக மந்தமாகவே இருக்கிறது. இதற்கு ஏலவே இருந்த நிர்வாகக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு புதிய சிந்தனைகளையும் நடைமுறைகளையும் நகர்த்த முடியாத இக்கட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும் இந்திய உதவிகளை துரிதகதியில் பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை நோக்கி நகர்ந்தாக வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியப்பங்களிப்பை பயன்படுத்தும் திறன் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும். சந்தேகங்களையும் தயக்கங்களையும் தாண்டி எதிர்கொண்டு வளரும் உத்தியைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.  

Friday, 23 May 2025

இலங்கையின் பழைய காவலர் கறைபடிந்த மரபுக்குச் சொந்தக்காரன்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரபல ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் தொகுத்து வழங்கிய அல் ஜசீராவின் "ஹெட் டு ஹெட்" நிகழ்ச்சியில் ஒரு உயர்மட்ட நேர்காணலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி யூடியூப்பில் மார்ச் 6 அன்று முதன்முதலில் ஒளிபரப்பரப்பப்பட்டது. இது ரணிலின் அரசியல் வாழ்வை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. அவரது முரண்பட்ட அரசியல் சிந்தாந்த்தை வெளிப்படுத்தி நிற்கிறது. 

தொண்டன் இல்லாத கட்சிகள் போட்டியிடும் உள்ளுராட்சித் தேர்தல்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கையில் உள்ளுராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்கின்றன. வடக்கு,கிழக்கு  மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரலாற்று ரீதியாக தமிழ் தேசியம் பேசிய அரசியல் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்திருகின்றன. ஒரு அரசியல் கட்சியின் அடிமட்டக்கட்மைப்புக்கு உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவது முக்கியமானதாகிறது. துற்போதைய சூழலில் கட்சிகளிடம் தொண்டர்கள் இல்லை என்ற நிலைதான் காணப்படுகின்றது. கட்சிகளின் கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் எவையாயினும் பணம்பெற்றுக்கொண்டு திரளும் மக்கள் கூட்டமே காணப்படுகின்றது. இது கட்சி சார்ந்த கட்சிக்கு விசுவாசமான மக்கள் கூட்டமாக இல்லாமல் யாரொருவர் பணம் கொடுத்தாலும் அவர்களுக்காக அணிதிரளும் ஒரு வகை மந்தைக்கூட்டமாகவே காணப்படுகிறது எனலாம். இவர்களை ஒருங்கிணைப்பதற்கு முகவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அணுகினால் இந்தக்கூட்டத்தை திரட்டிவிடலாம் என்ற நிலை தான் காணப்படுகின்றது. இந்த முகவர்களாக உள்ளுர் அமைப்புக்களின் தலைவர்கள் செயற்படுவதும். மறுப்பதற்கில்லை. ஆகவே தான் தேர்தலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. பணம் தான் ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறது எனலாம். இந்த நிலைமைகளில் அரசியல் கட்சிகள் அடிநிலைத் தொண்டனைத் திரட்டுவதற்கான களமாக உள்ளுராட்சி சபைத் தேர்தலைப்பார்க்கலாம். இது கிராமங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. கட்சிக்கான தொண்டன் எப்படி உருவாகுவான் என்பதை கட்சிகள் கற்றறிய வேண்டிய காலமிது. 

நிலைத்த அபிவிருத்திக்கு அரசியல் தைரியம் வேண்டும்

 Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை வடபகுதியில் கடந்த வாரம் முழுவதும் பிரதேசசெயலர் ரீதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் வெறும் தனிப்பட்ட வசைபாடல்களாகவே நிறைவுற்றிருக்கின்றன. அரசியல்தீர்விற்கு முன்னர் அபிவிருத்தியிலேயே தாம் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகச் சொல்கின்ற அரசாங்கம் தனது அபிவிருத்திக்கான தெளிவான திட்டங்களை அறிவிக்கவில்லை. அதிலும் என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் மக்களுக்கு அபிவிருத்திசெய்யவதாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் எம்மை தெரிவு செய்தார்கள் என்று மார்தட்டுவதையும் காணமுடிகிறது. அபிவிருத்திபற்றி பேசும் போது நிலைத்த அபிவிருத்தி பற்றிச்சிநதித்தாக வேண்டும். அதில் நிலையான இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடும் ஒருங்கிணைப்பும் முக்கியமானதாகும். அதற்கான முயற்சிகளும் சமாந்தரமாக எடுக்கப்படுகின்ற போதுததான் நிலைத்த அபிவிருத்தி சாத்தியமாகும்.  

Sunday, 2 March 2025

அரிசிக்கு அரோகரா!!

 


Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கை அரசி மற்றும் தேங்காய்த்தட்டுப்பாட்டில் திண்டாடுகிறது. பாராளுமன்றத்தில் இதற்கு விநோதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் அரிசித்தட்டுப்பாட்டுக்குக்காரணம் இலங்கையில் உள்ள  நாய்கள் என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏதிர்காலத்தில் நாய் ஒழிப்புத் திட்டம் ஒன்றுக்கான முன்மொழிவாகவும் அதனைக்கருதலாம். இந்தச் சுழலில் "அரிசிக்கு அரோகரா" என்று சொல்லத் தூண்டுகிறது. இது பொதுவாக அரிசிக்காக வாழ்த்தும் ஒரு கோஷமாக கருதமுடியும்.