Sunday 6 October 2024

Human Rights and Theater Communication in Post-war Sri Lanka


Thevanayagam Thevananth

HUMAN RIGHTS EDUCATION IN ASIA-PACIFIC · VOLUME 10, 2020


The Sri Lankan Minority Tamils are living in an environment where their right to freedom of expression is denied. This situation was at its worst during the 2005–2015 war period. Although there was a little improvement in the situation after regime change due to the presidential election held on the 8 January 2015, the structures, practices, and attitudes left behind by the former government continued. In 2019, the political party of the former government came back to power only with majority Sinhala voters. The opportunities for free exchange of ideas remained limited. The state stringency that prevailed for more than a decade made the traditional exchange and expression of ideas normally found among the people extinct. In particular, all opportunities for gathering at the village esplanade, temples, playgrounds, and cultural events were hindered by state stringency. Places where people congregate were subjected to surveillance. Voices critical of the state were monitored by state agents. Hence, congregating and exchanging ideas have become filled with fear. People avoid gathering together because of this situation, where everyone was suspicious of the other. In addition, people who criticized the government were threatened with violence to create an overt fear psychosis. Some people suffered this violence, such as when waste oil was thrown on houses. Fear of death began to dwell in each person as unidentified persons “move around.” Even today, freedom of expression in Sri Lanka requires a more conducive atmosphere. The fear of monitoring by state intelligence officers or unidentified persons persists. As a result, every individual learned to live with some sort of self-censorship. This situation caused a sort of stagnation, including the environment for artistic creation.

For Full Text click this link 

Human Rights and Theater Communication in Post-war Sri Lanka

Success Story : Theatre helps marginalized communities

The effort promotes social expression and discourse on human rights through popular theater

The Active Theater Movement (ATM) uses popular theater to provide a voice to the most marginalized communities in the post-conflict regions of northern Sri Lanka. Its performances facilitate dialogue and promote awareness of critical issues facing these communities such as human rights, reconciliation, and social expression. 

The productions also prompt participants and audiences to confront traumas stemming from decades of life in conflict zones. With the support of USAID’s SPICE project, ATM provides training and performance opportunities for youth to use theater to promote human rights by using their personal narratives and those of their local communities. In early 2015, ATM trained 21 young women and men from villages in Jaffna to act, write scripts, direct and manage the technical aspects of theater production. The group also received training on human rights principles to better understand and contextualize people’s experiences during the conflict. During the workshops, the group selected five themes that are relevant to their lives. They then drafted scripts that they could perform. In August 2015, ATM organized a 12-day drama festival to showcase plays developed by the youth group during the SPICE initiative. The festival staged 17 skits and plays, including performances that addressed serious social issues such as violence against women and the traumatic experiences of war. 

 ATM’s productions re-introduced theater to Jaffna and provided a safe space for public discourse on subjects that would otherwise be too sensitive or difficult to articulate in public. The performance also provided a platform for interactive debate; at the end of each skit or play, the audience was encouraged to reflect and share ideas on the themes raised through the performances. The audience was then encouraged to collectively develop responses to these issues and find ways to improve understanding and respect for human rights. Many youth bear the psychological scars of Sri Lanka’s prolonged conflict. SPICE’s support has given them skills and an opportunity to articulate their emotions and experiences through dramatic expression.

 It has fostered their creativity and built their confidence to share their experiences. This has helped them come to terms with their experiences and promoted integration within their communities and families. Youth theater group member Murugiah Kumarasivam recalls, “When I was 14 years old, my oldest brother was killed by an unknown gang. For years, I could not speak about this and it was a very difficult time for me. … I could not concentrate on anything. The trauma I experienced has remained with me. After I joined the theater group and attended the trainings, it was only then that I felt comfortable to express my feelings to others.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 01


‘நாடகம் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிஜவாழ்க்கையில் நாடகம் இருக்கிறது.’ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இலங்கையின் தற்போதைய நிலைமை காணப்படுகின்றது போலும்.  இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியைத் தோறு;றுவித்ததோடு நாடுமுழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச பதவிவிலகவேண்டியேற்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக பாராளுமன்றில் ஒரே ஒரு உறுப்பினராரைமட்டுமே கொண்ட  ரணில் விக்ரமசிங்க பதவியேற்றர். இதன் பின்னர்,  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்னார். அந்த உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

“நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.” என்று ரணில் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

அப்போது பேட்;டோல் பிறெக்டடின் சிங்கள மொழிபெர்ப்பு நாடகமான 'ஹணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருசா (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதான காட்சியை குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க  அதே போன்ற நிலையில் தான் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது பணி "அதை விடவும் ஆபத்தான சவாலாகும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“நான் பொறுப்பேற்றது அபாயகரமான சவால்,  கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. பாலத்தின் கீழே மிகவும் ஆழமானது அடியே தெரியவில்லை. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அதனடியில் கூர்மையான இருப்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலைமையில் குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன். எனது உயிரைப்பணயம் வைத்து சவாலுக்கு முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன்.” என்று தன்னை வெண்கட்டி வட்ட நாடகத்தில் குழந்தையைகாப்பாற்றும் க்ருசா பாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். ஆக, இங்கு நாடக நிஜம் அல்லது மேடைநிஜம் வாழ்வியல் நிஜமாகியிருக்கிறது என்பதைக்காணலாம்.  ரணில் விக்கிரமசிங்க தான் பார்த்த ஒரு நாடகத்தின் பாத்திரமொன்றுடன் தன்னை உருவகப்படுத்துகின்றார். அந்தப்பாத்திரம் போன்று குழந்தையைக்காப்பாற் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக நம்புகிறார் போலும். 

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 02

தேவநாயகம் தேவானந்த் 

இலங்கையில் ராஜபக்ச ஆட்சியல் ஏற்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிச் சூலில் ரணில் விக்ரமசிங்க பதவியைப் பொறுப்பெற்ற போது  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்னார். அந்த உரையில், அவர் {ஹணு வ(ட்)டயே' நாடகத்தின் குழந்தையைக் காப்பாற்றும் கதாபாத்திரமான க்ரு~h பாத்திரத்தைப் போன்று தான் இருப்பதாக குறிப்பிட்டார். 

‘ஹணு வ(ட்)டயே’ நாடகம் இரண்டு பேரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவையிரண்டும்; இறுதியில் ஒன்றாக வரும் இரண்டு கதைகள் எனலாம். முதலாவது கதை க்ருசா வின் கதை, இரண்டாவது கதை ஆட்சியதிகாரத்தின்; கதை. 

க்ருனிசியாவில் ஒரு நகரத்தை ஆளும் ஒரு பணக்கார ஆளுநருக்கு மைக்கேல் என்ற குழந்தை பிறந்தது, மேலும் அவரது மனைவி நாடெல்லா, பகட்டாரவாரமாக வாழ்கிறார்கள்.  ஈஸ்டர் ஞாயிறு அன்று கிளர்ச்சி நடக்கிறது.; அதில்; கவர்னரைக் கொன்றுவிடுகிறார்கள், ஆளுநரின் மனைவி தனது ஆடம்பரப்பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடுகிறாள் அப்போது அவசரத்தில் தன் குழந்தையை விட்டுச் செல்கிறாள். இதற்கிடையில், க்ருசா என்ற வேலைக்காரப் பெண் அந்தக்குழந்தையை தனியே விட்டுச்செல்ல விரும்பாது தூக்கி செல்ல விளைகிறாள். மற்றவர்கள் தடுக்கிறார்கள் இருந்தாலும் க்ருசா குழந்தையைக்காப்பாற்றிசெல்கிறாள். சதிப்புரட்சியின் குழப்பங்களுக்கு மத்தியில் க்ருசா சைமன் என்ற சிப்பாயும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவிக்கிறார்கள். சைமன் க்ரு~hவுக்கு அவர்களின் நிச்சயதார்த்தத்தின் அடையாளமாக ஒரு சங்கிலியில் ஒரு வெள்ளி சிலுவையைக் கொடுக்கிறான். சண்டைமுடிந்த பின்னர் அவர்கள் இணைவதாகக் கூறி பரிகிறார்கள். 


குழந்தைiயைப் க்ருசா அரண்மனையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முனைகிறாள்.  க்ருசா மைக்கேலுடன் கடினமான பயணத்தை ஆரம்பிக்கிறாள். அவர்கள் இருவரும் மலைகளுக்கு நடுவே குளிரில் பயணிக்கிறார்கள். க்ருசாவிடம் பணம் குறைவாகவே உள்ளது, பால் மற்றும் தங்குமிடத்திற்காக அவள் குடிசைகளில் பிச்சை எடுக்கிறாள். இவ்வாறாக மிகக்கடினமான பயணத்தில் குழந்தையைக்காப்பாற்றிச் செல்கிறாள். ஒரு கட்ட்தில்மலைக் கிராமங்களுக்கு செல்லும் ஒரு பனிப்பாறைக்கு க்ரு~h வரும்போது, ஆழமான பள்ளத்தாக்கு வழியாக தப்பிக்க வேண்டும் அதற்கு ஒரு பழைய பாலம் மோசமான நிலையில் இருந்த பாதையைக் கடக்க முயல்கிறார். பாலத்தில் கூடியிருந்த வணிகர்கள் க்ருசாவை அந்த பாதை ஆபத்தானது என்று எச்சரித்தாலும், அவள் பாலத்தில் ஏறி கடந்து ஓடுகிறாள்;. குழந்தையைத் துரத்தும் ஆபத்திலிருந்து தப்பிக்க க்ருசாவுக்கிருந்த ஒரே வழி அதுவாகத் தான் இருந்தது. க்ருசா மைக்கேலை மேலும் மலைகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.பின் தனது சகோதரன் வீட்டை அடைகிறாள். 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகள் திவாலாகுமா?


இலங்கையின் பொருளாதார நெருக்கடியியல் வங்கிகள் திவாலாகுமா?
பேராசிரியர் வி.பி.சிவநாதன்  என்ன சொல்கிறார்? என்ற தலைப்பில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் பிரிவு டி இணைந்து நடத்தும் தொடர் கருத்தரங்கின் 13.05.2022 அன்று இணையவழி நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் வழங்கிய கருத்துரை. 

Saturday 14 September 2024

'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்’.


தமிழ் தலைவன் மு.கருணாநிதி – 03


‘'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்'.’ இது  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதியின் முழக்கம்.
கருணாநிதி தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். ஓவ்வொரு போராட்டங்களையும் தனது எழுச்சிமிகு பேச்சாலும் எழுத்தாலும் தொண்டர்களைத் தட்டியெழுப்பி வென்றிருக்கிறார். தனது கடுமையான ஓயாத உழைப்பால் சவால்களை முறியடித்திருக்கிறார். ஆதனால் தான் தன் கல்லறையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்’ என்ற வாசங்களை எழுதச் சொல்லியிருந்தார்.

பிறப்பு ஒரு சம்பவமானாலும் இறப்பு வரலாறாக இருக்க வேண்டும்.


தமிழ்த் தலைவன் மு.கருணாநிதி -02


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின்  மறைவு உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தலைவன் இல்லாத ஒரு நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது எனலாம். தலைவனைத் தேடும் பணியில் அல்லது தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் நிலையில் தமிழ் இனம் இருக்கிறது போலும்.
ஓவ்வொரு தலைவனும் இறக்கும் போது தனக்கு அடுத்தபடியாக தலைவர்களைத் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருப்பது வழமை. கருணாநிதி தனது மறைவுக்கு முன்னரே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை அறிவித்துச் சென்றிருக்கிறார்.

தமிழ் எங்கள் தாலாட்டு மரணம் எங்கள் விளையாட்டு


தமிழ் தலைவன் மு.கருணாநிதி -01

கருணாநிதி காலமானார். காலமாகியும் காலத்துள் வாழும் தலைவர்கள் மிகச்சிலர்.  அவர்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி அவர்களும் ஒருவர் என்பது மிகையல்ல.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ‘தமிழ்தலைவன்’ என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரே தலைவனாக மு.கருணாநிதி அவர்களையே இனங்காணமுடியும்.
கொஞ்சும் தமிழைத் தனது அரசியலின் அத்திவாரமாகவும் தமிழன் வராற்றுப்பொக்கிசங்களான இலங்கியங்களை தூண்களாகவும் நிறுத்தி அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழ் தலைவனாக உலகத் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தில் இருக்கின்ற கருணாதிநி உலகத் தமிழர் வராற்றின் ஒரு பகுதி எனலாம்.

Tuesday 19 March 2024

புலம்பெயர் உறவுகளிடமிருந்து ஒரு பாராட்டுப் பத்திரம்

                                                                                                     

ஒரு மாலை வேளை (13.02.2022) கைதொலைபேசியில் ஒரு அழைப்பு உள்ளூர் இலக்கத்திலிருந்து வந்தது "சேர்" FATV லண்டன் ஞாயிறு நிகழ்ச்சிக்காக உடன் இணைய வேண்டும் கேட்ட குரல் சுவிசிலிருந்து கேட்ட குரலாயிற்றே என்று எண்ணுவதற்குள் "நாங்கள் நீங்கள் இருக்குமிடம் வருகிறோம் சேர்ந்தே சூமில் இணையலாம் என்றார்கள்."  ஆம் மெய்நிகர் வெளியில் சுவிசிலிருந்து நடித்த அவந்திகா அவர் குடும்பத்தினரை மெய்வெளியில் கண்டது மகிழ்ச்சி பாட்டி நாடகத்தில் சுவிசலண்ட், டென்மார், பெல்ஐியம் யேமன் நாடுகளின் சிறார்கள் ஒன்றாக சேர்ந்து அனுப்பிய பாராட்டு பட்டயத்தையும் தந்தார்கள் கொரோனா வருமோ என்றிருக்க இப்படி பாராட்டுப் பத்திரங்கள் நாடுகள் கடந்து வருவது மகிழ்ச்சி, நன்றி சிறார்கள் அவர்தம் பெற்றோருக்கு உரித்தாகட்டும்


Friday 15 March 2024

இந்தியத் துணைத்தூதுவருடன் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் நல்லெண்ணச் சந்திப்பு

இந்தியத் துணைத்தூதுவருடன் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் நல்லெண்ணச் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்தானியராலயத்தில் 02.03.2022 மதியம் 11.00 மணிக்கு நடைபெற்றது. புதிய துணைத்தூதுவரை பொன்னாடை போர்த்தி யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைத்தின் தலைவர் திரு வை.யுகேந்திரா  கொளரவித்ததைத் தொடர்ந்து. இணையத்தின் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் மாலையணிவித்து மதிப்பளித்தார்.